FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, May 18, 2016

பிளஸ்–2 தேர்வில் DEAF மாற்றுத்திறனாளி மாணவர் நாகராஜ் முதலிடம்

17.05.2016, குன்னூர்,

பிளஸ்–2 தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர் நாகராஜ் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்.

பிளஸ்–2 தேர்வு

காதுகேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவ–மாணவிகளுக்கான பிளஸ்–2 தேர்வில் மஞ்சூர் அருகே உள்ள எடக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் நாகராஜ் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். அவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண் விவரம் வருமாறு:–

தமிழ்–110, கணினி அறிவியல்–118, பொருளாதாரம்–116, வணிகவியல்–108, கணக்குப்பதிவியல்–123. மொத்தம்–575.

மாணவர் நாகராஜின் தந்தை சுந்தரம். தாயார் தமிழ்செல்வி. இவர்கள் மஞ்சூர் அருகே உள்ள குட்டிமணி நகரில் வசித்து வருகிறார்கள். மாணவர் நாகராஜ் தனது தந்தை உதவியுடன் சைகை மூலம் கூறியதாவது:– பள்ளி ஆசிரியர்களின் ஊக்கம் காரணமாக இந்த அளவுக்கு மதிப்பெண் பெற முடிந்தது. எதிர்காலத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயராக வரவேண்டும் என்ற ஆசை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டராக விருப்பம்

குன்னூர் அருகே உள்ள உபதலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சிந்துஜா மாவட்ட அளவில் 2–ம் இடம் பிடித்து உள்ளார். இவருடைய தந்தை ராஜன், கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சரஸ்வதி. சிந்துஜாவுக்கு சுஜித் (15) என்ற தம்பி உள்ளார். இவரும் அதே பகுதியில் 9–வது படித்து வருகிறார். இவருக்கும் வாய் மற்றும் காது கேட்காது. சிந்துஜா பாடவாரியாக பெற்ற மதிப்பெண் விவரம் வருமாறு:– தமிழ்–98, இயற்பியல்–112, வேதியியல்–109, தாவரவியல்–98, உயிரியல்–80. மொத்தம்–497.

மாணவி சிந்துஜா தனது தந்தை உதவியுடன் சைகை மூலம் கூறியதாவது:– நான் மற்ற மாணவ–மாணவிகள் படித்து வரும் வகுப்பில் படித்து வருகிறேன். ஆசிரியர், ஆசிரியைகள் பாடம் நடத்தும்போது அவர்கள் வாய் அசைவில் அதனை புரிந்து கொள்வேன். வகுப்பை நன்கு கவனித்து விட்டு இரவு 7 மணி முதல் 10 மணி வரை பாடங்களை படிப்பேன். பின்னர் அதிகாலை 3 மணிக்கு எழுந்து படிப்பேன். எதிர்காலத்தில் டாக்டராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஊராட்சி மூலம் நடத்தப்படும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்று உள்ளேன். மாற்றுத்திறனாளி என்பதால் எனது மேல்படிப்புக்கு தமிழக அரசு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment