FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, May 18, 2016

பிளஸ்–2 தேர்வில் DEAF மாற்றுத்திறனாளி மாணவர் நாகராஜ் முதலிடம்

17.05.2016, குன்னூர்,

பிளஸ்–2 தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர் நாகராஜ் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்.

பிளஸ்–2 தேர்வு

காதுகேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவ–மாணவிகளுக்கான பிளஸ்–2 தேர்வில் மஞ்சூர் அருகே உள்ள எடக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் நாகராஜ் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். அவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண் விவரம் வருமாறு:–

தமிழ்–110, கணினி அறிவியல்–118, பொருளாதாரம்–116, வணிகவியல்–108, கணக்குப்பதிவியல்–123. மொத்தம்–575.

மாணவர் நாகராஜின் தந்தை சுந்தரம். தாயார் தமிழ்செல்வி. இவர்கள் மஞ்சூர் அருகே உள்ள குட்டிமணி நகரில் வசித்து வருகிறார்கள். மாணவர் நாகராஜ் தனது தந்தை உதவியுடன் சைகை மூலம் கூறியதாவது:– பள்ளி ஆசிரியர்களின் ஊக்கம் காரணமாக இந்த அளவுக்கு மதிப்பெண் பெற முடிந்தது. எதிர்காலத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயராக வரவேண்டும் என்ற ஆசை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டராக விருப்பம்

குன்னூர் அருகே உள்ள உபதலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சிந்துஜா மாவட்ட அளவில் 2–ம் இடம் பிடித்து உள்ளார். இவருடைய தந்தை ராஜன், கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சரஸ்வதி. சிந்துஜாவுக்கு சுஜித் (15) என்ற தம்பி உள்ளார். இவரும் அதே பகுதியில் 9–வது படித்து வருகிறார். இவருக்கும் வாய் மற்றும் காது கேட்காது. சிந்துஜா பாடவாரியாக பெற்ற மதிப்பெண் விவரம் வருமாறு:– தமிழ்–98, இயற்பியல்–112, வேதியியல்–109, தாவரவியல்–98, உயிரியல்–80. மொத்தம்–497.

மாணவி சிந்துஜா தனது தந்தை உதவியுடன் சைகை மூலம் கூறியதாவது:– நான் மற்ற மாணவ–மாணவிகள் படித்து வரும் வகுப்பில் படித்து வருகிறேன். ஆசிரியர், ஆசிரியைகள் பாடம் நடத்தும்போது அவர்கள் வாய் அசைவில் அதனை புரிந்து கொள்வேன். வகுப்பை நன்கு கவனித்து விட்டு இரவு 7 மணி முதல் 10 மணி வரை பாடங்களை படிப்பேன். பின்னர் அதிகாலை 3 மணிக்கு எழுந்து படிப்பேன். எதிர்காலத்தில் டாக்டராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஊராட்சி மூலம் நடத்தப்படும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்று உள்ளேன். மாற்றுத்திறனாளி என்பதால் எனது மேல்படிப்புக்கு தமிழக அரசு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment