FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, May 18, 2016

பிளஸ்–2 தேர்வில் DEAF மாற்றுத்திறனாளி மாணவர் நாகராஜ் முதலிடம்

17.05.2016, குன்னூர்,

பிளஸ்–2 தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர் நாகராஜ் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்.

பிளஸ்–2 தேர்வு

காதுகேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவ–மாணவிகளுக்கான பிளஸ்–2 தேர்வில் மஞ்சூர் அருகே உள்ள எடக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் நாகராஜ் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். அவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண் விவரம் வருமாறு:–

தமிழ்–110, கணினி அறிவியல்–118, பொருளாதாரம்–116, வணிகவியல்–108, கணக்குப்பதிவியல்–123. மொத்தம்–575.

மாணவர் நாகராஜின் தந்தை சுந்தரம். தாயார் தமிழ்செல்வி. இவர்கள் மஞ்சூர் அருகே உள்ள குட்டிமணி நகரில் வசித்து வருகிறார்கள். மாணவர் நாகராஜ் தனது தந்தை உதவியுடன் சைகை மூலம் கூறியதாவது:– பள்ளி ஆசிரியர்களின் ஊக்கம் காரணமாக இந்த அளவுக்கு மதிப்பெண் பெற முடிந்தது. எதிர்காலத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயராக வரவேண்டும் என்ற ஆசை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டராக விருப்பம்

குன்னூர் அருகே உள்ள உபதலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சிந்துஜா மாவட்ட அளவில் 2–ம் இடம் பிடித்து உள்ளார். இவருடைய தந்தை ராஜன், கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சரஸ்வதி. சிந்துஜாவுக்கு சுஜித் (15) என்ற தம்பி உள்ளார். இவரும் அதே பகுதியில் 9–வது படித்து வருகிறார். இவருக்கும் வாய் மற்றும் காது கேட்காது. சிந்துஜா பாடவாரியாக பெற்ற மதிப்பெண் விவரம் வருமாறு:– தமிழ்–98, இயற்பியல்–112, வேதியியல்–109, தாவரவியல்–98, உயிரியல்–80. மொத்தம்–497.

மாணவி சிந்துஜா தனது தந்தை உதவியுடன் சைகை மூலம் கூறியதாவது:– நான் மற்ற மாணவ–மாணவிகள் படித்து வரும் வகுப்பில் படித்து வருகிறேன். ஆசிரியர், ஆசிரியைகள் பாடம் நடத்தும்போது அவர்கள் வாய் அசைவில் அதனை புரிந்து கொள்வேன். வகுப்பை நன்கு கவனித்து விட்டு இரவு 7 மணி முதல் 10 மணி வரை பாடங்களை படிப்பேன். பின்னர் அதிகாலை 3 மணிக்கு எழுந்து படிப்பேன். எதிர்காலத்தில் டாக்டராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஊராட்சி மூலம் நடத்தப்படும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்று உள்ளேன். மாற்றுத்திறனாளி என்பதால் எனது மேல்படிப்புக்கு தமிழக அரசு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment