FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Sunday, May 8, 2016

அமெரிக்க அரசு அமைப்பில் இந்தியருக்கு மீண்டும் பொறுப்பு

07.05.2016
மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்நுட்ப உபகரணங்களை வழங்கி உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சச்சின் தேவ் பவித்ரன் என்பவரை மீண்டும் நியமித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா.
இதுகுறித்து வெள்ளை மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சச்சின் தேவ் பவித்ரன் உள்ளிட்ட உறுப்பினர்களை மறுநியமனம் செய்வதை பெருமையாகக் கருதுவதாகவும், அவர்களுடன் பணியாற்றும் மாதங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார் என்று அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அந்த நிர்வாகக் குழுவின் உறுப்பினராக கடந்த 2012-ஆம் ஆண்டு பவித்ரன் நியமனம் செய்யப்பட்டார். மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டத்தின் இயக்குநராகவும் அவர் பதவி வகித்துள்ளார். பவித்ரன் பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment