FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, May 8, 2016

அமெரிக்க அரசு அமைப்பில் இந்தியருக்கு மீண்டும் பொறுப்பு

07.05.2016
மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்நுட்ப உபகரணங்களை வழங்கி உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சச்சின் தேவ் பவித்ரன் என்பவரை மீண்டும் நியமித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா.
இதுகுறித்து வெள்ளை மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சச்சின் தேவ் பவித்ரன் உள்ளிட்ட உறுப்பினர்களை மறுநியமனம் செய்வதை பெருமையாகக் கருதுவதாகவும், அவர்களுடன் பணியாற்றும் மாதங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார் என்று அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அந்த நிர்வாகக் குழுவின் உறுப்பினராக கடந்த 2012-ஆம் ஆண்டு பவித்ரன் நியமனம் செய்யப்பட்டார். மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டத்தின் இயக்குநராகவும் அவர் பதவி வகித்துள்ளார். பவித்ரன் பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment