FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, May 8, 2016

அமெரிக்க அரசு அமைப்பில் இந்தியருக்கு மீண்டும் பொறுப்பு

07.05.2016
மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்நுட்ப உபகரணங்களை வழங்கி உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சச்சின் தேவ் பவித்ரன் என்பவரை மீண்டும் நியமித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா.
இதுகுறித்து வெள்ளை மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சச்சின் தேவ் பவித்ரன் உள்ளிட்ட உறுப்பினர்களை மறுநியமனம் செய்வதை பெருமையாகக் கருதுவதாகவும், அவர்களுடன் பணியாற்றும் மாதங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார் என்று அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அந்த நிர்வாகக் குழுவின் உறுப்பினராக கடந்த 2012-ஆம் ஆண்டு பவித்ரன் நியமனம் செய்யப்பட்டார். மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டத்தின் இயக்குநராகவும் அவர் பதவி வகித்துள்ளார். பவித்ரன் பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment