FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, May 26, 2016

திருத்தந்தை பிரான்சிஸ் \ மறைக்கல்வி, மூவேளை உரை: பொது மறைக்கல்வியுரையில் சைகை மொழியில் வாழ்த்து

மே,25,2016. இப்புதனன்று, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை, சைகை மொழியால் முதலில் வாழ்த்தி, பொது மறைக்கல்வியுரையைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புதன் பொது மறைக்கல்வியுரையில், பிளாரன்ஸ் நகரை மையமாகக் கொண்டு இயங்கும் தேசிய காதுகேளாதோர் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டதால், அவர்களை வாழ்த்தும் விதத்தில், முதலில் கரங்களை உயர்த்தி, பின்னர், உள்ளங்கைகளைத் திருப்பும் சைகை மொழியால் வாழ்த்து தெரிவித்து உரையைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புதன் நிகழ்வில், இலத்தீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் இத்தாலிய பார்வையிழந்தோர் கழக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

மேலும், உரோம் நகர் அகுஸ்தீனோ ஜெமெல்லி பல்கலைக்கழக மருத்துவமனையில் இப்புதனன்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார் திருத்தந்தை பிரான்சிஸ். பிறந்த குழந்தை குணமாக்கமுடியாத நோயால் துன்புறும்போது, அதன் வாழ்வைப் பாதுகாத்தல் என்ற தலைப்பில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.

No comments:

Post a Comment