FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, May 26, 2016

திருத்தந்தை பிரான்சிஸ் \ மறைக்கல்வி, மூவேளை உரை: பொது மறைக்கல்வியுரையில் சைகை மொழியில் வாழ்த்து

மே,25,2016. இப்புதனன்று, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை, சைகை மொழியால் முதலில் வாழ்த்தி, பொது மறைக்கல்வியுரையைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புதன் பொது மறைக்கல்வியுரையில், பிளாரன்ஸ் நகரை மையமாகக் கொண்டு இயங்கும் தேசிய காதுகேளாதோர் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டதால், அவர்களை வாழ்த்தும் விதத்தில், முதலில் கரங்களை உயர்த்தி, பின்னர், உள்ளங்கைகளைத் திருப்பும் சைகை மொழியால் வாழ்த்து தெரிவித்து உரையைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புதன் நிகழ்வில், இலத்தீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் இத்தாலிய பார்வையிழந்தோர் கழக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

மேலும், உரோம் நகர் அகுஸ்தீனோ ஜெமெல்லி பல்கலைக்கழக மருத்துவமனையில் இப்புதனன்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார் திருத்தந்தை பிரான்சிஸ். பிறந்த குழந்தை குணமாக்கமுடியாத நோயால் துன்புறும்போது, அதன் வாழ்வைப் பாதுகாத்தல் என்ற தலைப்பில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.

No comments:

Post a Comment