FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, May 26, 2016

திருத்தந்தை பிரான்சிஸ் \ மறைக்கல்வி, மூவேளை உரை: பொது மறைக்கல்வியுரையில் சைகை மொழியில் வாழ்த்து

மே,25,2016. இப்புதனன்று, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை, சைகை மொழியால் முதலில் வாழ்த்தி, பொது மறைக்கல்வியுரையைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புதன் பொது மறைக்கல்வியுரையில், பிளாரன்ஸ் நகரை மையமாகக் கொண்டு இயங்கும் தேசிய காதுகேளாதோர் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டதால், அவர்களை வாழ்த்தும் விதத்தில், முதலில் கரங்களை உயர்த்தி, பின்னர், உள்ளங்கைகளைத் திருப்பும் சைகை மொழியால் வாழ்த்து தெரிவித்து உரையைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புதன் நிகழ்வில், இலத்தீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் இத்தாலிய பார்வையிழந்தோர் கழக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

மேலும், உரோம் நகர் அகுஸ்தீனோ ஜெமெல்லி பல்கலைக்கழக மருத்துவமனையில் இப்புதனன்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார் திருத்தந்தை பிரான்சிஸ். பிறந்த குழந்தை குணமாக்கமுடியாத நோயால் துன்புறும்போது, அதன் வாழ்வைப் பாதுகாத்தல் என்ற தலைப்பில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.

No comments:

Post a Comment