FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, May 27, 2016

காதுகேளாத கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.5 கோடி நிதி உதவி : இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர் அறிவிப்பு

27.05.2016
புதுடெல்லி - நாட்டில் உள்ள காதுகேளாத மற்றும் வாய் பேச முடியாமல் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.5கோடி நிதி உதவியளிப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் அனுராக் தாகூர் அறிவித்துள்ளார். இந்த தகவலை காது கேளாதோர் கிரிக்கெட் சொசைட்டி தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த சசாங் மனோகர் அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஆகியுள்ளார்.

எனவே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இளவயது தலைவராக 41 வயது அனுராக் தாகூர் தற்போது பதவியேற்றுள்ளார். தலைவராக பதவியேற்றுள்ள அனுராக் தாகூரை காது கேளாதோர் கிரிக்கெட் அமைப்பின் நிர்வாகிகன் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு தாகூர் நன்றி தெரிவித்துக்கொண்டதுடன் காதுகேளாத கிரிக்கெட் வீரர்களுக்காக ரூ. 5கோடி நிதி உதவி அளிப்பதாக உறுதியளித்தார்.

இது குறித்து, காது கேளாத கிரிக்கெட் சொசைட்டியின் (டி..சி.எஸ்) தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது., இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக அனுராக் தாகூர் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர், காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பார்வை குறைபாடு உள்ள வீரர்களுக்கு உதவ ரூ.5 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. இந்த நிதியுதவியை அடுத்த 5ஆண்டுகளுக்கு அளிப்பதாக அனுராக் தாகூர் கூறியுள்ளார். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment