FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, May 27, 2016

காதுகேளாத கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.5 கோடி நிதி உதவி : இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர் அறிவிப்பு

27.05.2016
புதுடெல்லி - நாட்டில் உள்ள காதுகேளாத மற்றும் வாய் பேச முடியாமல் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.5கோடி நிதி உதவியளிப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் அனுராக் தாகூர் அறிவித்துள்ளார். இந்த தகவலை காது கேளாதோர் கிரிக்கெட் சொசைட்டி தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த சசாங் மனோகர் அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஆகியுள்ளார்.

எனவே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இளவயது தலைவராக 41 வயது அனுராக் தாகூர் தற்போது பதவியேற்றுள்ளார். தலைவராக பதவியேற்றுள்ள அனுராக் தாகூரை காது கேளாதோர் கிரிக்கெட் அமைப்பின் நிர்வாகிகன் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு தாகூர் நன்றி தெரிவித்துக்கொண்டதுடன் காதுகேளாத கிரிக்கெட் வீரர்களுக்காக ரூ. 5கோடி நிதி உதவி அளிப்பதாக உறுதியளித்தார்.

இது குறித்து, காது கேளாத கிரிக்கெட் சொசைட்டியின் (டி..சி.எஸ்) தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது., இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக அனுராக் தாகூர் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர், காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பார்வை குறைபாடு உள்ள வீரர்களுக்கு உதவ ரூ.5 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. இந்த நிதியுதவியை அடுத்த 5ஆண்டுகளுக்கு அளிப்பதாக அனுராக் தாகூர் கூறியுள்ளார். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment