FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, May 27, 2016

காதுகேளாத கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.5 கோடி நிதி உதவி : இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர் அறிவிப்பு

27.05.2016
புதுடெல்லி - நாட்டில் உள்ள காதுகேளாத மற்றும் வாய் பேச முடியாமல் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.5கோடி நிதி உதவியளிப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் அனுராக் தாகூர் அறிவித்துள்ளார். இந்த தகவலை காது கேளாதோர் கிரிக்கெட் சொசைட்டி தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த சசாங் மனோகர் அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஆகியுள்ளார்.

எனவே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இளவயது தலைவராக 41 வயது அனுராக் தாகூர் தற்போது பதவியேற்றுள்ளார். தலைவராக பதவியேற்றுள்ள அனுராக் தாகூரை காது கேளாதோர் கிரிக்கெட் அமைப்பின் நிர்வாகிகன் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு தாகூர் நன்றி தெரிவித்துக்கொண்டதுடன் காதுகேளாத கிரிக்கெட் வீரர்களுக்காக ரூ. 5கோடி நிதி உதவி அளிப்பதாக உறுதியளித்தார்.

இது குறித்து, காது கேளாத கிரிக்கெட் சொசைட்டியின் (டி..சி.எஸ்) தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது., இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக அனுராக் தாகூர் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர், காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பார்வை குறைபாடு உள்ள வீரர்களுக்கு உதவ ரூ.5 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. இந்த நிதியுதவியை அடுத்த 5ஆண்டுகளுக்கு அளிப்பதாக அனுராக் தாகூர் கூறியுள்ளார். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment