FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Friday, May 27, 2016

காதுகேளாத கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.5 கோடி நிதி உதவி : இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர் அறிவிப்பு

27.05.2016
புதுடெல்லி - நாட்டில் உள்ள காதுகேளாத மற்றும் வாய் பேச முடியாமல் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.5கோடி நிதி உதவியளிப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் அனுராக் தாகூர் அறிவித்துள்ளார். இந்த தகவலை காது கேளாதோர் கிரிக்கெட் சொசைட்டி தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த சசாங் மனோகர் அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஆகியுள்ளார்.

எனவே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இளவயது தலைவராக 41 வயது அனுராக் தாகூர் தற்போது பதவியேற்றுள்ளார். தலைவராக பதவியேற்றுள்ள அனுராக் தாகூரை காது கேளாதோர் கிரிக்கெட் அமைப்பின் நிர்வாகிகன் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு தாகூர் நன்றி தெரிவித்துக்கொண்டதுடன் காதுகேளாத கிரிக்கெட் வீரர்களுக்காக ரூ. 5கோடி நிதி உதவி அளிப்பதாக உறுதியளித்தார்.

இது குறித்து, காது கேளாத கிரிக்கெட் சொசைட்டியின் (டி..சி.எஸ்) தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது., இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக அனுராக் தாகூர் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர், காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பார்வை குறைபாடு உள்ள வீரர்களுக்கு உதவ ரூ.5 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. இந்த நிதியுதவியை அடுத்த 5ஆண்டுகளுக்கு அளிப்பதாக அனுராக் தாகூர் கூறியுள்ளார். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment