FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, May 25, 2016

மாற்றுத் திறனாளிகள் துறையின் பெயர் அதீத திறனுடையோர் துறை என மாற்றம்

25.05.2016. 
மத்திய அரசின் "மாற்றுத் திறனாளிகள்' அதிகாரமளித்தல் துறையின் பெயரை, "அதீத திறமை கொண்டவர்கள்' துறை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஹிந்தியில் "விக்லாங்ஜன்' (மாற்றுத் திறனாளிகள்) என்பதற்குப் பதிலாக, இனிமேல் "திவ்யாங்' (அதீத திறனுடையோர்) என்று மாற்றப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி தனது வானொலி உரையில், "மாற்றுத் திறனாளிகள் அதீத திறமை கொண்டவர்கள்; அவர்களை "மாற்றுத் திறனாளிகள்' என அழைப்பதற்குப் பதிலாக, "அதீத திறமை கொண்டவர்கள்' எனக் குறிப்பிட வேண்டும்' என்றார்.
அதையடுத்து பெயர் மாற்றம் தொடர்பாக மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது. அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து, பெயர் மாற்றம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. 2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2.21 சதவீதம் பேர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர்.

No comments:

Post a Comment