FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, May 25, 2016

மாற்றுத் திறனாளிகள் துறையின் பெயர் அதீத திறனுடையோர் துறை என மாற்றம்

25.05.2016. 
மத்திய அரசின் "மாற்றுத் திறனாளிகள்' அதிகாரமளித்தல் துறையின் பெயரை, "அதீத திறமை கொண்டவர்கள்' துறை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஹிந்தியில் "விக்லாங்ஜன்' (மாற்றுத் திறனாளிகள்) என்பதற்குப் பதிலாக, இனிமேல் "திவ்யாங்' (அதீத திறனுடையோர்) என்று மாற்றப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி தனது வானொலி உரையில், "மாற்றுத் திறனாளிகள் அதீத திறமை கொண்டவர்கள்; அவர்களை "மாற்றுத் திறனாளிகள்' என அழைப்பதற்குப் பதிலாக, "அதீத திறமை கொண்டவர்கள்' எனக் குறிப்பிட வேண்டும்' என்றார்.
அதையடுத்து பெயர் மாற்றம் தொடர்பாக மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது. அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து, பெயர் மாற்றம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. 2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2.21 சதவீதம் பேர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர்.

No comments:

Post a Comment