FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, May 18, 2016

DEAF மாற்றுத் திறனாளிகள் பிரிவில் வேளாங்கண்ணி மாணவி முதலிடம்



18.05.2016
வேளாங்கண்ணியில் உள்ள சிறப்புப் பள்ளியில் பயின்ற மாணவி பி. குணசுந்தரி பிளஸ் 2 தேர்வில் 517 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகள் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார்.

வேளாங்கண்ணி கிறிஸ்துராஜா சிறப்புப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி மாணவி பி. குணசுந்தரி (வாய்பேச முடியாது, காது கேளாதவர்) 517 மதிப்பெண்கள் பெற்று மாற்றுத் திறனாளிகள் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம்:

தமிழ்-85, ஆங்கிலம் (விலக்கு அளிக்கப்பட்டுள்ளது), வரலாறு-135, பொருளியல்-105, வணிகவியல்-105, கணக்குப் பதிவியல்-87.

வேதாரண்யம் மாணவர் 2-ஆம் இடம்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் வேட்டைக்காரனிருப்பு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் அ.விக்னேஷ் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில் 427 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 2-ஆம் இடம் பெற்றுள்ளார்.

இவரது தந்தை அன்பழகன். இவர் வேட்டைக்காரனிருப்பு கிராமத்தில் வசிக்கிறார். இவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம்: தமிழ்-97, (ஆங்கிலம் விலக்களிப்பு) இயற்பியல்- 80, வேதியியல்-80, தாவரவியல்-90, விலங்கியல்-80.

No comments:

Post a Comment