FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, May 18, 2016

பிளஸ் 2 தேர்வில் காதுகேளாத மாற்றுத்திறனாளி மாணவிகள் இருவர் சாதனை

17.05.2016, பிளஸ் 2 தேர்வு முடிவில் இந்த ஆண்டு பார்வையற்ற, காது கேளாத மற்றும் வாய்பேச முடியாத மாணவர்களைக் கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கான மாநில மற்றும் மாவட்ட ரேங்க் பட்டியல்களை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

காதுகேளாத மற்றும் வாய்பேச முடியாத மாணவர்களில் நாகர்கோவில் ஓரல் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.விஜித்ரா, சென்னை சிறுமலர் கான்வென்ட் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.காயத்ரி ஆகியோர் 1200-க்கு 923 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

ஈரோடு கலைமகள் கல்வி நிலையம் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி கே.திவ்யலட்சுமி 921 மதிப்பெண் எடுத்து 2-ம் இடத்தையும், நாகர்கோவில் ஓரல் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி மாணவர் எம்.அஸ்வின்குமார் 915 மதிப்பெண் பெற்று 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

No comments:

Post a Comment