FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, May 18, 2016

பிளஸ் 2 தேர்வில் காதுகேளாத மாற்றுத்திறனாளி மாணவிகள் இருவர் சாதனை

17.05.2016, பிளஸ் 2 தேர்வு முடிவில் இந்த ஆண்டு பார்வையற்ற, காது கேளாத மற்றும் வாய்பேச முடியாத மாணவர்களைக் கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கான மாநில மற்றும் மாவட்ட ரேங்க் பட்டியல்களை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

காதுகேளாத மற்றும் வாய்பேச முடியாத மாணவர்களில் நாகர்கோவில் ஓரல் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.விஜித்ரா, சென்னை சிறுமலர் கான்வென்ட் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.காயத்ரி ஆகியோர் 1200-க்கு 923 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

ஈரோடு கலைமகள் கல்வி நிலையம் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி கே.திவ்யலட்சுமி 921 மதிப்பெண் எடுத்து 2-ம் இடத்தையும், நாகர்கோவில் ஓரல் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி மாணவர் எம்.அஸ்வின்குமார் 915 மதிப்பெண் பெற்று 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

No comments:

Post a Comment