FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, May 18, 2016

பிளஸ் 2 தேர்வில் காதுகேளாத மாற்றுத்திறனாளி மாணவிகள் இருவர் சாதனை

17.05.2016, பிளஸ் 2 தேர்வு முடிவில் இந்த ஆண்டு பார்வையற்ற, காது கேளாத மற்றும் வாய்பேச முடியாத மாணவர்களைக் கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கான மாநில மற்றும் மாவட்ட ரேங்க் பட்டியல்களை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

காதுகேளாத மற்றும் வாய்பேச முடியாத மாணவர்களில் நாகர்கோவில் ஓரல் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.விஜித்ரா, சென்னை சிறுமலர் கான்வென்ட் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.காயத்ரி ஆகியோர் 1200-க்கு 923 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

ஈரோடு கலைமகள் கல்வி நிலையம் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி கே.திவ்யலட்சுமி 921 மதிப்பெண் எடுத்து 2-ம் இடத்தையும், நாகர்கோவில் ஓரல் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி மாணவர் எம்.அஸ்வின்குமார் 915 மதிப்பெண் பெற்று 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

No comments:

Post a Comment