FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, May 29, 2016

மோட்டார் தையல் இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம்

27.05.2016, 
திருப்பூர் மாவட்டத்தில் விலையில்லா மோட்டார் தையல் இயந்திரங்கள் பெற தகுதியுடைய மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி தெரிவித்ததாவது:

திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், இரு கைகள் நல்ல நிலையில் உள்ள கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் செவித் திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் சுயதொழில் புரிய உதவிடும் வகையில், மோட்டார் தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக அவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மேற்படி விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தையல் தெரிந்து இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு 18-க்கு மேலும் 45-க்குள் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் நல அட்டை பெற்றிருக்க வேண்டும். வருமான வரம்பு ஏதும் இல்லை. மாற்றுத் திறனாளிகள் உரிய விண்ணப்பத்தினை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment