FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, May 29, 2016

மோட்டார் தையல் இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம்

27.05.2016, 
திருப்பூர் மாவட்டத்தில் விலையில்லா மோட்டார் தையல் இயந்திரங்கள் பெற தகுதியுடைய மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி தெரிவித்ததாவது:

திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், இரு கைகள் நல்ல நிலையில் உள்ள கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் செவித் திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் சுயதொழில் புரிய உதவிடும் வகையில், மோட்டார் தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக அவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மேற்படி விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தையல் தெரிந்து இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு 18-க்கு மேலும் 45-க்குள் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் நல அட்டை பெற்றிருக்க வேண்டும். வருமான வரம்பு ஏதும் இல்லை. மாற்றுத் திறனாளிகள் உரிய விண்ணப்பத்தினை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment