FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Sunday, May 29, 2016

மோட்டார் தையல் இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம்

27.05.2016, 
திருப்பூர் மாவட்டத்தில் விலையில்லா மோட்டார் தையல் இயந்திரங்கள் பெற தகுதியுடைய மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி தெரிவித்ததாவது:

திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், இரு கைகள் நல்ல நிலையில் உள்ள கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் செவித் திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் சுயதொழில் புரிய உதவிடும் வகையில், மோட்டார் தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக அவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மேற்படி விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தையல் தெரிந்து இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு 18-க்கு மேலும் 45-க்குள் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் நல அட்டை பெற்றிருக்க வேண்டும். வருமான வரம்பு ஏதும் இல்லை. மாற்றுத் திறனாளிகள் உரிய விண்ணப்பத்தினை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment