FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, May 23, 2016

காதுகேளாத மற்றும் கண் பார்வையற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு உதவ ரூ.5 கோடி ஒதுக்கப்படும் என பிசிசிஐ புதிய தலைவராக அனுராக் தாகூர்

23.05.2016
இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய தலைவராக அனுராக் தாகூர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார். கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக அஜேய் ஷிர்கே தேந்தெடுக்கப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த சஷாங்க் மனோகர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இந்நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இதில் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாகூர் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக கிழக்கு மண்டலத்தைச் சார்ந்த 6 கிரிக்கெட் சங்கங்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. அனுராக் தாகூர் தலைவரானதைத் தொடர்ந்து மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான அஜேய் ஷிர்கே பிசிசிஐயின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

லோதா கமிட்டி பரிந்துரைகள்


புதிய தலைவராக பொறுப்பெற்ற பிறகு மும்பையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

சவால்கள் இருக்கும் இடத்தில் தான் வாய்ப்புகளும் இருக்கும். என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட முயற்சி செய் வேன். இந்திய கிரிக்கெட் வாரியத் தில் சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என்று லோதா கமிட்டி கூறியுள்ளது. இதில் நடைமுறைக்கு சரிப்பட்டு வரும் சிபாரிசுகளை அமல்படுத்துவோம். இந்தியாவில் மிகவும் புகழ்பெற்றுள்ள ஒரு விளையாட்டின் மாண்புகளை கட்டிக்காக்க வேண்டிய அவசியத்தை நாங்கள் உணர்ந்துள் ளோம். இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது சிறப்பாக இயங்கி வருகிறது. இதை மேலும் சிறப்பாக இயங்கச் செய்வோம்.

இலவச டிக்கெட்

கிரிக்கெட் மைதானங்களில் மழைநீரை சேகரிக்கும் வசதியை ஏற்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின்போது 10 சதவீத டிக்கெட்டுகள் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மாணவ மாணவியருக்கு இலவசமாக ஒதுக்கப்படும். இளம் வீரர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிப்பதற்கான ஒரு செயலியை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுப் பதற்கான விளம்பரம் விரைவில் வெளியிடப்படும். இந்த பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் ஜூன் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கண் பார்வையற்ற மற்றும் காதுகேளாத கிரிக்கெட் வீரர்களுக்கு உதவ ரூ.5 கோடி ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment