FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, May 23, 2016

காதுகேளாத மற்றும் கண் பார்வையற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு உதவ ரூ.5 கோடி ஒதுக்கப்படும் என பிசிசிஐ புதிய தலைவராக அனுராக் தாகூர்

23.05.2016
இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய தலைவராக அனுராக் தாகூர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார். கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக அஜேய் ஷிர்கே தேந்தெடுக்கப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த சஷாங்க் மனோகர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இந்நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இதில் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாகூர் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக கிழக்கு மண்டலத்தைச் சார்ந்த 6 கிரிக்கெட் சங்கங்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. அனுராக் தாகூர் தலைவரானதைத் தொடர்ந்து மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான அஜேய் ஷிர்கே பிசிசிஐயின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

லோதா கமிட்டி பரிந்துரைகள்


புதிய தலைவராக பொறுப்பெற்ற பிறகு மும்பையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

சவால்கள் இருக்கும் இடத்தில் தான் வாய்ப்புகளும் இருக்கும். என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட முயற்சி செய் வேன். இந்திய கிரிக்கெட் வாரியத் தில் சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என்று லோதா கமிட்டி கூறியுள்ளது. இதில் நடைமுறைக்கு சரிப்பட்டு வரும் சிபாரிசுகளை அமல்படுத்துவோம். இந்தியாவில் மிகவும் புகழ்பெற்றுள்ள ஒரு விளையாட்டின் மாண்புகளை கட்டிக்காக்க வேண்டிய அவசியத்தை நாங்கள் உணர்ந்துள் ளோம். இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது சிறப்பாக இயங்கி வருகிறது. இதை மேலும் சிறப்பாக இயங்கச் செய்வோம்.

இலவச டிக்கெட்

கிரிக்கெட் மைதானங்களில் மழைநீரை சேகரிக்கும் வசதியை ஏற்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின்போது 10 சதவீத டிக்கெட்டுகள் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மாணவ மாணவியருக்கு இலவசமாக ஒதுக்கப்படும். இளம் வீரர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிப்பதற்கான ஒரு செயலியை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுப் பதற்கான விளம்பரம் விரைவில் வெளியிடப்படும். இந்த பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் ஜூன் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கண் பார்வையற்ற மற்றும் காதுகேளாத கிரிக்கெட் வீரர்களுக்கு உதவ ரூ.5 கோடி ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment