FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, May 23, 2016

காதுகேளாத மற்றும் கண் பார்வையற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு உதவ ரூ.5 கோடி ஒதுக்கப்படும் என பிசிசிஐ புதிய தலைவராக அனுராக் தாகூர்

23.05.2016
இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய தலைவராக அனுராக் தாகூர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார். கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக அஜேய் ஷிர்கே தேந்தெடுக்கப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த சஷாங்க் மனோகர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இந்நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இதில் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாகூர் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக கிழக்கு மண்டலத்தைச் சார்ந்த 6 கிரிக்கெட் சங்கங்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. அனுராக் தாகூர் தலைவரானதைத் தொடர்ந்து மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான அஜேய் ஷிர்கே பிசிசிஐயின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

லோதா கமிட்டி பரிந்துரைகள்


புதிய தலைவராக பொறுப்பெற்ற பிறகு மும்பையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

சவால்கள் இருக்கும் இடத்தில் தான் வாய்ப்புகளும் இருக்கும். என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட முயற்சி செய் வேன். இந்திய கிரிக்கெட் வாரியத் தில் சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என்று லோதா கமிட்டி கூறியுள்ளது. இதில் நடைமுறைக்கு சரிப்பட்டு வரும் சிபாரிசுகளை அமல்படுத்துவோம். இந்தியாவில் மிகவும் புகழ்பெற்றுள்ள ஒரு விளையாட்டின் மாண்புகளை கட்டிக்காக்க வேண்டிய அவசியத்தை நாங்கள் உணர்ந்துள் ளோம். இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது சிறப்பாக இயங்கி வருகிறது. இதை மேலும் சிறப்பாக இயங்கச் செய்வோம்.

இலவச டிக்கெட்

கிரிக்கெட் மைதானங்களில் மழைநீரை சேகரிக்கும் வசதியை ஏற்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின்போது 10 சதவீத டிக்கெட்டுகள் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மாணவ மாணவியருக்கு இலவசமாக ஒதுக்கப்படும். இளம் வீரர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிப்பதற்கான ஒரு செயலியை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுப் பதற்கான விளம்பரம் விரைவில் வெளியிடப்படும். இந்த பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் ஜூன் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கண் பார்வையற்ற மற்றும் காதுகேளாத கிரிக்கெட் வீரர்களுக்கு உதவ ரூ.5 கோடி ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment