FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, May 23, 2016

காதுகேளாத மற்றும் கண் பார்வையற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு உதவ ரூ.5 கோடி ஒதுக்கப்படும் என பிசிசிஐ புதிய தலைவராக அனுராக் தாகூர்

23.05.2016
இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய தலைவராக அனுராக் தாகூர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார். கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக அஜேய் ஷிர்கே தேந்தெடுக்கப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த சஷாங்க் மனோகர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இந்நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இதில் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாகூர் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக கிழக்கு மண்டலத்தைச் சார்ந்த 6 கிரிக்கெட் சங்கங்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. அனுராக் தாகூர் தலைவரானதைத் தொடர்ந்து மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான அஜேய் ஷிர்கே பிசிசிஐயின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

லோதா கமிட்டி பரிந்துரைகள்


புதிய தலைவராக பொறுப்பெற்ற பிறகு மும்பையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

சவால்கள் இருக்கும் இடத்தில் தான் வாய்ப்புகளும் இருக்கும். என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட முயற்சி செய் வேன். இந்திய கிரிக்கெட் வாரியத் தில் சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என்று லோதா கமிட்டி கூறியுள்ளது. இதில் நடைமுறைக்கு சரிப்பட்டு வரும் சிபாரிசுகளை அமல்படுத்துவோம். இந்தியாவில் மிகவும் புகழ்பெற்றுள்ள ஒரு விளையாட்டின் மாண்புகளை கட்டிக்காக்க வேண்டிய அவசியத்தை நாங்கள் உணர்ந்துள் ளோம். இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது சிறப்பாக இயங்கி வருகிறது. இதை மேலும் சிறப்பாக இயங்கச் செய்வோம்.

இலவச டிக்கெட்

கிரிக்கெட் மைதானங்களில் மழைநீரை சேகரிக்கும் வசதியை ஏற்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின்போது 10 சதவீத டிக்கெட்டுகள் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மாணவ மாணவியருக்கு இலவசமாக ஒதுக்கப்படும். இளம் வீரர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிப்பதற்கான ஒரு செயலியை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுப் பதற்கான விளம்பரம் விரைவில் வெளியிடப்படும். இந்த பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் ஜூன் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கண் பார்வையற்ற மற்றும் காதுகேளாத கிரிக்கெட் வீரர்களுக்கு உதவ ரூ.5 கோடி ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment