FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, May 18, 2016

காதுகேளாத–வாய்பேச முடியாதவர் பிரிவில் ஈரோடு மாணவி திவ்யலட்சுமி மாநில அளவில் 2–வது இடம் ‘பட்ட மேற்படிப்பு படித்து அரசு வேலைக்கு செல்ல விருப்பம்’

17.05.2016, ஈரோடு,
காதுகேளாத–வாய்பேச முடியாதவர் பிரிவில் ஈரோடு மாணவி திவ்யலட்சுமி மாநில அளவில் 2–வது இடத்தை பிடித்தார். பட்ட மேற்படிப்பு படித்து அரசு வேலைக்கு செல்ல விருப்பம் என்று கூறினார்.

மாநில அளவில் 2–வது இடம்
பிளஸ்–2 பொதுத்தேர்வில் காதுகேளாதவர், வாய்பேசமுடியாதவர்களுக்கு சிறப்பு தகுதி அடிப்படையில் 1,000 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு கலைமகள் கல்வி நிலைய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த காதுகேளாத மாணவி கே.திவ்யலட்சுமி 1,000–க்கு 921 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2–வது இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு:–

தமிழ் – 179, பொருளாதாரம் – 187, வணிகவியல் – 170, கணக்கு பதிவியல் – 191, வணிகக்கணிதம் – 194. (பள்ளிக்கல்வித்துறை விதிகளின்படி காதுகேளாதவர், வாய்பேச முடியாதவர்களுக்கு ஒரு பாடத்தில் தேர்வு எழுத விலக்கு அளிக்கப்படும். அதன்படி மாணவி திவ்யலட்சுமி ஆங்கில பாடம் எழுதவில்லை).

பாராட்டு
அதிக மதிப்பெண் பெற்ற மாணவி திவ்யலட்சுமிக்கு பள்ளிக்கூட தாளாளர் மங்களவதி, தலைமை ஆசிரியை இந்திராணி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

மாணவி திவ்யலட்சுமி ஈரோடு பவர்ஹவுஸ் வீதியை சேர்ந்தவர். அவருடைய தந்தை யு.கண்ணன். வக்கீலாக உள்ளார். தாயார் தீபலட்சுமி வீட்டை கவனித்து வருகிறார்.

இதுகுறித்து மாணவி திவ்யலட்சுமி கூறியதாவது:–

எனக்கு பிறவிலேயே காதுகேளாத தன்மை இருந்தது. இதனால் பேச்சு சரியாக வரவில்லை. 5 வயதில் எனக்கு காது கேளாத குறைபாடு இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். அதைத்தொடர்ந்து காதொலி கருவிகள் பொருத்தப்பட்டு பேச்சு பயிற்சி அளித்தனர். இதற்காக எனது பெற்றோர் மிகவும் சிரமப்பட்டு சிகிச்சைகள் கொடுத்தனர்.

காதொலி கருவி

80 சதவீதம் குறைபாடு இருந்ததால் தொடர்ந்து காதொலி கருவி பயன்படுத்தி வந்தேன். பின்னர் யோகாசனம், தியானம் ஆகியவை தொடர்ச்சியாக செய்து காதுகேளாத தன்மையில் இருந்து மீண்டு வருகிறேன். இந்த நேரத்தில் பிளஸ்–2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடன் சேர்ந்து தோழி சுஸ்மிதா படித்தார். அவர் 722 மதிப்பெண்கள் பெற்று உள்ளார். அவருக்கும் காது கேட்காத குறைபாடு உள்ளது. இதனால் ஆசிரியர்கள் எங்களுக்கு தனிகவனம் செலுத்தி கை செய்கை மூலம் கற்றுக்கொடுத்தனர்.

எனவே பள்ளி நிர்வாகத்துக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் பி.காம். படிக்க உள்ளேன். அதன்பிறகு போட்டித்தேர்வு எழுதி அரசு பணியாற்ற விரும்புகிறேன்.

இவ்வாறு மாணவி திவ்யலட்சுமி கூறினார்.

No comments:

Post a Comment