FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, May 18, 2016

காதுகேளாத–வாய்பேச முடியாதவர் பிரிவில் ஈரோடு மாணவி திவ்யலட்சுமி மாநில அளவில் 2–வது இடம் ‘பட்ட மேற்படிப்பு படித்து அரசு வேலைக்கு செல்ல விருப்பம்’

17.05.2016, ஈரோடு,
காதுகேளாத–வாய்பேச முடியாதவர் பிரிவில் ஈரோடு மாணவி திவ்யலட்சுமி மாநில அளவில் 2–வது இடத்தை பிடித்தார். பட்ட மேற்படிப்பு படித்து அரசு வேலைக்கு செல்ல விருப்பம் என்று கூறினார்.

மாநில அளவில் 2–வது இடம்
பிளஸ்–2 பொதுத்தேர்வில் காதுகேளாதவர், வாய்பேசமுடியாதவர்களுக்கு சிறப்பு தகுதி அடிப்படையில் 1,000 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு கலைமகள் கல்வி நிலைய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த காதுகேளாத மாணவி கே.திவ்யலட்சுமி 1,000–க்கு 921 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2–வது இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு:–

தமிழ் – 179, பொருளாதாரம் – 187, வணிகவியல் – 170, கணக்கு பதிவியல் – 191, வணிகக்கணிதம் – 194. (பள்ளிக்கல்வித்துறை விதிகளின்படி காதுகேளாதவர், வாய்பேச முடியாதவர்களுக்கு ஒரு பாடத்தில் தேர்வு எழுத விலக்கு அளிக்கப்படும். அதன்படி மாணவி திவ்யலட்சுமி ஆங்கில பாடம் எழுதவில்லை).

பாராட்டு
அதிக மதிப்பெண் பெற்ற மாணவி திவ்யலட்சுமிக்கு பள்ளிக்கூட தாளாளர் மங்களவதி, தலைமை ஆசிரியை இந்திராணி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

மாணவி திவ்யலட்சுமி ஈரோடு பவர்ஹவுஸ் வீதியை சேர்ந்தவர். அவருடைய தந்தை யு.கண்ணன். வக்கீலாக உள்ளார். தாயார் தீபலட்சுமி வீட்டை கவனித்து வருகிறார்.

இதுகுறித்து மாணவி திவ்யலட்சுமி கூறியதாவது:–

எனக்கு பிறவிலேயே காதுகேளாத தன்மை இருந்தது. இதனால் பேச்சு சரியாக வரவில்லை. 5 வயதில் எனக்கு காது கேளாத குறைபாடு இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். அதைத்தொடர்ந்து காதொலி கருவிகள் பொருத்தப்பட்டு பேச்சு பயிற்சி அளித்தனர். இதற்காக எனது பெற்றோர் மிகவும் சிரமப்பட்டு சிகிச்சைகள் கொடுத்தனர்.

காதொலி கருவி

80 சதவீதம் குறைபாடு இருந்ததால் தொடர்ந்து காதொலி கருவி பயன்படுத்தி வந்தேன். பின்னர் யோகாசனம், தியானம் ஆகியவை தொடர்ச்சியாக செய்து காதுகேளாத தன்மையில் இருந்து மீண்டு வருகிறேன். இந்த நேரத்தில் பிளஸ்–2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடன் சேர்ந்து தோழி சுஸ்மிதா படித்தார். அவர் 722 மதிப்பெண்கள் பெற்று உள்ளார். அவருக்கும் காது கேட்காத குறைபாடு உள்ளது. இதனால் ஆசிரியர்கள் எங்களுக்கு தனிகவனம் செலுத்தி கை செய்கை மூலம் கற்றுக்கொடுத்தனர்.

எனவே பள்ளி நிர்வாகத்துக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் பி.காம். படிக்க உள்ளேன். அதன்பிறகு போட்டித்தேர்வு எழுதி அரசு பணியாற்ற விரும்புகிறேன்.

இவ்வாறு மாணவி திவ்யலட்சுமி கூறினார்.

No comments:

Post a Comment