FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, May 18, 2016

காதுகேளாத–வாய்பேச முடியாதவர் பிரிவில் ஈரோடு மாணவி திவ்யலட்சுமி மாநில அளவில் 2–வது இடம் ‘பட்ட மேற்படிப்பு படித்து அரசு வேலைக்கு செல்ல விருப்பம்’

17.05.2016, ஈரோடு,
காதுகேளாத–வாய்பேச முடியாதவர் பிரிவில் ஈரோடு மாணவி திவ்யலட்சுமி மாநில அளவில் 2–வது இடத்தை பிடித்தார். பட்ட மேற்படிப்பு படித்து அரசு வேலைக்கு செல்ல விருப்பம் என்று கூறினார்.

மாநில அளவில் 2–வது இடம்
பிளஸ்–2 பொதுத்தேர்வில் காதுகேளாதவர், வாய்பேசமுடியாதவர்களுக்கு சிறப்பு தகுதி அடிப்படையில் 1,000 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு கலைமகள் கல்வி நிலைய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த காதுகேளாத மாணவி கே.திவ்யலட்சுமி 1,000–க்கு 921 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2–வது இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு:–

தமிழ் – 179, பொருளாதாரம் – 187, வணிகவியல் – 170, கணக்கு பதிவியல் – 191, வணிகக்கணிதம் – 194. (பள்ளிக்கல்வித்துறை விதிகளின்படி காதுகேளாதவர், வாய்பேச முடியாதவர்களுக்கு ஒரு பாடத்தில் தேர்வு எழுத விலக்கு அளிக்கப்படும். அதன்படி மாணவி திவ்யலட்சுமி ஆங்கில பாடம் எழுதவில்லை).

பாராட்டு
அதிக மதிப்பெண் பெற்ற மாணவி திவ்யலட்சுமிக்கு பள்ளிக்கூட தாளாளர் மங்களவதி, தலைமை ஆசிரியை இந்திராணி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

மாணவி திவ்யலட்சுமி ஈரோடு பவர்ஹவுஸ் வீதியை சேர்ந்தவர். அவருடைய தந்தை யு.கண்ணன். வக்கீலாக உள்ளார். தாயார் தீபலட்சுமி வீட்டை கவனித்து வருகிறார்.

இதுகுறித்து மாணவி திவ்யலட்சுமி கூறியதாவது:–

எனக்கு பிறவிலேயே காதுகேளாத தன்மை இருந்தது. இதனால் பேச்சு சரியாக வரவில்லை. 5 வயதில் எனக்கு காது கேளாத குறைபாடு இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். அதைத்தொடர்ந்து காதொலி கருவிகள் பொருத்தப்பட்டு பேச்சு பயிற்சி அளித்தனர். இதற்காக எனது பெற்றோர் மிகவும் சிரமப்பட்டு சிகிச்சைகள் கொடுத்தனர்.

காதொலி கருவி

80 சதவீதம் குறைபாடு இருந்ததால் தொடர்ந்து காதொலி கருவி பயன்படுத்தி வந்தேன். பின்னர் யோகாசனம், தியானம் ஆகியவை தொடர்ச்சியாக செய்து காதுகேளாத தன்மையில் இருந்து மீண்டு வருகிறேன். இந்த நேரத்தில் பிளஸ்–2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடன் சேர்ந்து தோழி சுஸ்மிதா படித்தார். அவர் 722 மதிப்பெண்கள் பெற்று உள்ளார். அவருக்கும் காது கேட்காத குறைபாடு உள்ளது. இதனால் ஆசிரியர்கள் எங்களுக்கு தனிகவனம் செலுத்தி கை செய்கை மூலம் கற்றுக்கொடுத்தனர்.

எனவே பள்ளி நிர்வாகத்துக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் பி.காம். படிக்க உள்ளேன். அதன்பிறகு போட்டித்தேர்வு எழுதி அரசு பணியாற்ற விரும்புகிறேன்.

இவ்வாறு மாணவி திவ்யலட்சுமி கூறினார்.

No comments:

Post a Comment