FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, May 18, 2016

காதுகேளாத–வாய்பேச முடியாதவர் பிரிவில் ஈரோடு மாணவி திவ்யலட்சுமி மாநில அளவில் 2–வது இடம் ‘பட்ட மேற்படிப்பு படித்து அரசு வேலைக்கு செல்ல விருப்பம்’

17.05.2016, ஈரோடு,
காதுகேளாத–வாய்பேச முடியாதவர் பிரிவில் ஈரோடு மாணவி திவ்யலட்சுமி மாநில அளவில் 2–வது இடத்தை பிடித்தார். பட்ட மேற்படிப்பு படித்து அரசு வேலைக்கு செல்ல விருப்பம் என்று கூறினார்.

மாநில அளவில் 2–வது இடம்
பிளஸ்–2 பொதுத்தேர்வில் காதுகேளாதவர், வாய்பேசமுடியாதவர்களுக்கு சிறப்பு தகுதி அடிப்படையில் 1,000 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு கலைமகள் கல்வி நிலைய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த காதுகேளாத மாணவி கே.திவ்யலட்சுமி 1,000–க்கு 921 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2–வது இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு:–

தமிழ் – 179, பொருளாதாரம் – 187, வணிகவியல் – 170, கணக்கு பதிவியல் – 191, வணிகக்கணிதம் – 194. (பள்ளிக்கல்வித்துறை விதிகளின்படி காதுகேளாதவர், வாய்பேச முடியாதவர்களுக்கு ஒரு பாடத்தில் தேர்வு எழுத விலக்கு அளிக்கப்படும். அதன்படி மாணவி திவ்யலட்சுமி ஆங்கில பாடம் எழுதவில்லை).

பாராட்டு
அதிக மதிப்பெண் பெற்ற மாணவி திவ்யலட்சுமிக்கு பள்ளிக்கூட தாளாளர் மங்களவதி, தலைமை ஆசிரியை இந்திராணி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

மாணவி திவ்யலட்சுமி ஈரோடு பவர்ஹவுஸ் வீதியை சேர்ந்தவர். அவருடைய தந்தை யு.கண்ணன். வக்கீலாக உள்ளார். தாயார் தீபலட்சுமி வீட்டை கவனித்து வருகிறார்.

இதுகுறித்து மாணவி திவ்யலட்சுமி கூறியதாவது:–

எனக்கு பிறவிலேயே காதுகேளாத தன்மை இருந்தது. இதனால் பேச்சு சரியாக வரவில்லை. 5 வயதில் எனக்கு காது கேளாத குறைபாடு இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். அதைத்தொடர்ந்து காதொலி கருவிகள் பொருத்தப்பட்டு பேச்சு பயிற்சி அளித்தனர். இதற்காக எனது பெற்றோர் மிகவும் சிரமப்பட்டு சிகிச்சைகள் கொடுத்தனர்.

காதொலி கருவி

80 சதவீதம் குறைபாடு இருந்ததால் தொடர்ந்து காதொலி கருவி பயன்படுத்தி வந்தேன். பின்னர் யோகாசனம், தியானம் ஆகியவை தொடர்ச்சியாக செய்து காதுகேளாத தன்மையில் இருந்து மீண்டு வருகிறேன். இந்த நேரத்தில் பிளஸ்–2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடன் சேர்ந்து தோழி சுஸ்மிதா படித்தார். அவர் 722 மதிப்பெண்கள் பெற்று உள்ளார். அவருக்கும் காது கேட்காத குறைபாடு உள்ளது. இதனால் ஆசிரியர்கள் எங்களுக்கு தனிகவனம் செலுத்தி கை செய்கை மூலம் கற்றுக்கொடுத்தனர்.

எனவே பள்ளி நிர்வாகத்துக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் பி.காம். படிக்க உள்ளேன். அதன்பிறகு போட்டித்தேர்வு எழுதி அரசு பணியாற்ற விரும்புகிறேன்.

இவ்வாறு மாணவி திவ்யலட்சுமி கூறினார்.

No comments:

Post a Comment