FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, May 18, 2016

பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் சாதனை

17.05.2016, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளிகளில் பாளையங்கோட்டை பள்ளி மாணவர்களே மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.

பாளையங்கோட்டையில் உள்ள பிளாரன்ஸ் சுவேன்ஸன் காதுகேளாதோர் பள்ளி மாணவர் எஸ். கண்ணன் 824 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். இதே பள்ளியைச் சேர்ந்த மாணவர் கே. ரவிகுமார் 822 மதிப்பெண் பெற்று 2ஆவது இடமும், பி. அருள்பாண்டி 818 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடமும் பிடித்தனர்.

பாளையங்கோட்டையில் உள்ள பார்வையற்றோருக்கான மேல்நிலைப் பள்ளி மாணவர் சி. கிருஷ்ணகாந்த் 1200-க்கு 1,101 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். இதே பள்ளி மாணவர் எஸ். சிவகுமார் 1077 மதிப்பெண் பெற்று 2ஆவது இடமும், மாணவர் பிரசன்னா பாசில் 1065 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடமும் பிடித்தனர்.

No comments:

Post a Comment