FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, May 18, 2016

DEAF மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில் மாவட்ட அளவில் மாணவ, மாணவிகள் சிறப்பிடம்

18.05.2016
பிளஸ் 2 பொதுத் தேர்வில், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில் மாவட்ட அளவில் மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியான நஷ்ரத் 1,000-க்கு, 878 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவரது தந்தை ஹனீபா கோவை செல்வபுரம் பகுதியில் மளிகைக் கடை வைத்துள்ளார். தாயார் குர்ஷித் இல்லத்தரசியாக உள்ளார்.

இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், கோவையில் காதுகேளாத வாய் பேசமுடியாத மாணவர்களை சேர்க்க அதிக அளவில் கல்லூரிகள் இல்லை. மேலும், அவர்கள் பட்டயப் படிப்பு முடிக்கும்போது அரசு மற்றும் தனியார் துறைகளில் 1 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படுவதால் வேலை கிடைப்பதிலும் சிக்கல் நிலவுகிறது.

எனவே, பேஷன் டிசைனிங் படிப்பதே நஷ்ரத்தின் லட்சியம் என்றனர்.

அவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண் விவரம் : தமிழ்-163, பொருளாதாரம்-183, வணிகவியல்-179, கணக்குப்பதிவியல்-195, வணிகக்கணிதம்-158.

அதே பள்ளியைச் சேர்ந்த காது கேளாத, பேச முடியாத மாணவி ஷாஜிதா ஆயிஷா 872 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியை சேர்ந்த இவரது தந்தை முகமது முஸ்தபா, சுயதொழில் செய்து வருகிறார். தாயார் நஸ்ரத் பானு இல்லத்தரசி ஆவார்.

இதுகுறித்து அவரது தந்தை முகமது முஸ்தபா கூறியதாவது:

பள்ளியில் சிறப்பான பயிற்சியும், தனிக் கவனம் செலுத்தி பாடத்தை கற்றுக் கொடுத்ததால் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்றார்.

இவர் பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம்:

தமிழ்-158, பொருளாதாரம்-187, வணிகவியல்-177, கணக்கு பதிவியல்-184, வணிக கணிதம்-166.

இதேபோல், பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பார்வைக் குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளி மாணவர் பூபதி வருவாய் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளார். பொள்ளாச்சி வக்கம்பாளையத்தை சேர்ந்த இவர் பெற்ற மதிப்பெண் விவரம்: தமிழ்-106, ஆங்கிலம்-113, புள்ளியியல்-124, பொருளாதாரம்-124, வணிகவியல்-70, கணக்குபதிவியல்-172 என மொத்தம் 709 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment