FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, May 18, 2016

DEAF மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில் மாவட்ட அளவில் மாணவ, மாணவிகள் சிறப்பிடம்

18.05.2016
பிளஸ் 2 பொதுத் தேர்வில், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில் மாவட்ட அளவில் மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியான நஷ்ரத் 1,000-க்கு, 878 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவரது தந்தை ஹனீபா கோவை செல்வபுரம் பகுதியில் மளிகைக் கடை வைத்துள்ளார். தாயார் குர்ஷித் இல்லத்தரசியாக உள்ளார்.

இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், கோவையில் காதுகேளாத வாய் பேசமுடியாத மாணவர்களை சேர்க்க அதிக அளவில் கல்லூரிகள் இல்லை. மேலும், அவர்கள் பட்டயப் படிப்பு முடிக்கும்போது அரசு மற்றும் தனியார் துறைகளில் 1 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படுவதால் வேலை கிடைப்பதிலும் சிக்கல் நிலவுகிறது.

எனவே, பேஷன் டிசைனிங் படிப்பதே நஷ்ரத்தின் லட்சியம் என்றனர்.

அவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண் விவரம் : தமிழ்-163, பொருளாதாரம்-183, வணிகவியல்-179, கணக்குப்பதிவியல்-195, வணிகக்கணிதம்-158.

அதே பள்ளியைச் சேர்ந்த காது கேளாத, பேச முடியாத மாணவி ஷாஜிதா ஆயிஷா 872 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியை சேர்ந்த இவரது தந்தை முகமது முஸ்தபா, சுயதொழில் செய்து வருகிறார். தாயார் நஸ்ரத் பானு இல்லத்தரசி ஆவார்.

இதுகுறித்து அவரது தந்தை முகமது முஸ்தபா கூறியதாவது:

பள்ளியில் சிறப்பான பயிற்சியும், தனிக் கவனம் செலுத்தி பாடத்தை கற்றுக் கொடுத்ததால் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்றார்.

இவர் பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம்:

தமிழ்-158, பொருளாதாரம்-187, வணிகவியல்-177, கணக்கு பதிவியல்-184, வணிக கணிதம்-166.

இதேபோல், பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பார்வைக் குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளி மாணவர் பூபதி வருவாய் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளார். பொள்ளாச்சி வக்கம்பாளையத்தை சேர்ந்த இவர் பெற்ற மதிப்பெண் விவரம்: தமிழ்-106, ஆங்கிலம்-113, புள்ளியியல்-124, பொருளாதாரம்-124, வணிகவியல்-70, கணக்குபதிவியல்-172 என மொத்தம் 709 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment