FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, May 18, 2016

DEAF மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில் மாவட்ட அளவில் மாணவ, மாணவிகள் சிறப்பிடம்

18.05.2016
பிளஸ் 2 பொதுத் தேர்வில், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில் மாவட்ட அளவில் மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியான நஷ்ரத் 1,000-க்கு, 878 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவரது தந்தை ஹனீபா கோவை செல்வபுரம் பகுதியில் மளிகைக் கடை வைத்துள்ளார். தாயார் குர்ஷித் இல்லத்தரசியாக உள்ளார்.

இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், கோவையில் காதுகேளாத வாய் பேசமுடியாத மாணவர்களை சேர்க்க அதிக அளவில் கல்லூரிகள் இல்லை. மேலும், அவர்கள் பட்டயப் படிப்பு முடிக்கும்போது அரசு மற்றும் தனியார் துறைகளில் 1 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படுவதால் வேலை கிடைப்பதிலும் சிக்கல் நிலவுகிறது.

எனவே, பேஷன் டிசைனிங் படிப்பதே நஷ்ரத்தின் லட்சியம் என்றனர்.

அவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண் விவரம் : தமிழ்-163, பொருளாதாரம்-183, வணிகவியல்-179, கணக்குப்பதிவியல்-195, வணிகக்கணிதம்-158.

அதே பள்ளியைச் சேர்ந்த காது கேளாத, பேச முடியாத மாணவி ஷாஜிதா ஆயிஷா 872 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியை சேர்ந்த இவரது தந்தை முகமது முஸ்தபா, சுயதொழில் செய்து வருகிறார். தாயார் நஸ்ரத் பானு இல்லத்தரசி ஆவார்.

இதுகுறித்து அவரது தந்தை முகமது முஸ்தபா கூறியதாவது:

பள்ளியில் சிறப்பான பயிற்சியும், தனிக் கவனம் செலுத்தி பாடத்தை கற்றுக் கொடுத்ததால் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்றார்.

இவர் பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம்:

தமிழ்-158, பொருளாதாரம்-187, வணிகவியல்-177, கணக்கு பதிவியல்-184, வணிக கணிதம்-166.

இதேபோல், பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பார்வைக் குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளி மாணவர் பூபதி வருவாய் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளார். பொள்ளாச்சி வக்கம்பாளையத்தை சேர்ந்த இவர் பெற்ற மதிப்பெண் விவரம்: தமிழ்-106, ஆங்கிலம்-113, புள்ளியியல்-124, பொருளாதாரம்-124, வணிகவியல்-70, கணக்குபதிவியல்-172 என மொத்தம் 709 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment