FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, May 17, 2016

ஒடிஸா ஊராட்சித் தேர்தலில் இனி பேச்சுத் திறனற்றோரும் போட்டியிடலாம்: மாநிலப் பேரவையில் மசோதாவுக்கு ஒப்புதல்

17.05.2016, ஒடிஸா மாநிலத்தில் 3 அடுக்கு ஊராட்சித் தேர்தல்களில் வாய் பேச இயலாதோர், செவித் திறனற்றோர், காசநோய், தொழுநோயால் பாதிக்கப்பட்டோரும் இனி போட்டியிடும் வகையில் ஒடிஸா ஊராட்சி சட்டங்கள் (திருத்த) மசோதா-2016 மாநில சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.
பேச்சுத் திறன் மற்றும் செவித் திறன் இன்மை, காசநோய், தொழுநோய் போன்ற குறைபாடுகளை நவீன மருத்துவத்தில் குணப்படுத்தலாம் என்பதால் தற்போது ஊராட்சி சட்டங்களில் மேற்கண்டவர்களும் தேர்தலில் போட்டியிடத் தடையாக இருக்கும் ஷரத்துகள் தேவையற்றதாகிவிட்டன. எனவே மேற்கண்ட நபர்கள் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடத் தடையாக இருக்கும் சட்டப் பிரிவுகளை தற்போது அரசு திருத்தவிருக்கிறது என்று சட்டத் துறை அமைச்சர் அருண் குமார் சாஹு பேரவையில் ஒப்புதலுக்காக மசோதாவை தாக்கல் செய்யும்போது தெரிவித்தார்.

இந்த மசோதா தாக்கல் செய்யப்படும்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒருவர்கூட இல்லை. மையப் பகுதியில் தொடர் தர்னாவில் அமர்ந்திருந்த காங்கிரஸ், பாஜகவின் எஸ்சி, எஸ்டி எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர். எனினும் சட்டத் திருத்த மசோதா குரல் வாக்கு மூலம் நிறைவேற்றப்பட்டது.

அவையில் மசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன் பிஜு ஜனதாதள உறுப்பினர்களாக பிரஃபுல்ல சமாலும், அமர் பிரசாத் சத்பதியும் மட்டும் விவாதத்தில் பங்கேற்றனர். ஒடிஸா கிராம ஊராட்சி சட்டம்-1964, ஒடிஸா பஞ்சாயத்து சமிதி சட்டம்-1959, ஒடிஸா மாவட்டப் பஞ்சாயத்துச் சட்டம்-1991 ஆகிய 3 சட்டங்களுக்கும் இந்த திருத்தம் பொருந்தும் என்றார் சாஹு.

இந்த சட்டத் திருத்தம் மூலம் மேற்கண்ட காது கேளாத, வாய் பேச முடியாத நபர்கள், காசநோய், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் இனி உள்ளாட்சிப் பிரதிநிதிகளாகச் செயல்பட முடியும். 

இதையடுத்து மாநிலத்தில் இருக்கும் 2.12 லட்சம் தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களும் 45 காச நோயாளிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

மாநிலத்தில் 3 அடுக்கு ஊராட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவிருப்பதை முன்னிட்டு அரசு இந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

No comments:

Post a Comment