FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, May 17, 2016

ஒடிஸா ஊராட்சித் தேர்தலில் இனி பேச்சுத் திறனற்றோரும் போட்டியிடலாம்: மாநிலப் பேரவையில் மசோதாவுக்கு ஒப்புதல்

17.05.2016, ஒடிஸா மாநிலத்தில் 3 அடுக்கு ஊராட்சித் தேர்தல்களில் வாய் பேச இயலாதோர், செவித் திறனற்றோர், காசநோய், தொழுநோயால் பாதிக்கப்பட்டோரும் இனி போட்டியிடும் வகையில் ஒடிஸா ஊராட்சி சட்டங்கள் (திருத்த) மசோதா-2016 மாநில சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.
பேச்சுத் திறன் மற்றும் செவித் திறன் இன்மை, காசநோய், தொழுநோய் போன்ற குறைபாடுகளை நவீன மருத்துவத்தில் குணப்படுத்தலாம் என்பதால் தற்போது ஊராட்சி சட்டங்களில் மேற்கண்டவர்களும் தேர்தலில் போட்டியிடத் தடையாக இருக்கும் ஷரத்துகள் தேவையற்றதாகிவிட்டன. எனவே மேற்கண்ட நபர்கள் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடத் தடையாக இருக்கும் சட்டப் பிரிவுகளை தற்போது அரசு திருத்தவிருக்கிறது என்று சட்டத் துறை அமைச்சர் அருண் குமார் சாஹு பேரவையில் ஒப்புதலுக்காக மசோதாவை தாக்கல் செய்யும்போது தெரிவித்தார்.

இந்த மசோதா தாக்கல் செய்யப்படும்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒருவர்கூட இல்லை. மையப் பகுதியில் தொடர் தர்னாவில் அமர்ந்திருந்த காங்கிரஸ், பாஜகவின் எஸ்சி, எஸ்டி எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர். எனினும் சட்டத் திருத்த மசோதா குரல் வாக்கு மூலம் நிறைவேற்றப்பட்டது.

அவையில் மசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன் பிஜு ஜனதாதள உறுப்பினர்களாக பிரஃபுல்ல சமாலும், அமர் பிரசாத் சத்பதியும் மட்டும் விவாதத்தில் பங்கேற்றனர். ஒடிஸா கிராம ஊராட்சி சட்டம்-1964, ஒடிஸா பஞ்சாயத்து சமிதி சட்டம்-1959, ஒடிஸா மாவட்டப் பஞ்சாயத்துச் சட்டம்-1991 ஆகிய 3 சட்டங்களுக்கும் இந்த திருத்தம் பொருந்தும் என்றார் சாஹு.

இந்த சட்டத் திருத்தம் மூலம் மேற்கண்ட காது கேளாத, வாய் பேச முடியாத நபர்கள், காசநோய், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் இனி உள்ளாட்சிப் பிரதிநிதிகளாகச் செயல்பட முடியும். 

இதையடுத்து மாநிலத்தில் இருக்கும் 2.12 லட்சம் தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களும் 45 காச நோயாளிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

மாநிலத்தில் 3 அடுக்கு ஊராட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவிருப்பதை முன்னிட்டு அரசு இந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

No comments:

Post a Comment