FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Tuesday, May 17, 2016

ஒடிஸா ஊராட்சித் தேர்தலில் இனி பேச்சுத் திறனற்றோரும் போட்டியிடலாம்: மாநிலப் பேரவையில் மசோதாவுக்கு ஒப்புதல்

17.05.2016, ஒடிஸா மாநிலத்தில் 3 அடுக்கு ஊராட்சித் தேர்தல்களில் வாய் பேச இயலாதோர், செவித் திறனற்றோர், காசநோய், தொழுநோயால் பாதிக்கப்பட்டோரும் இனி போட்டியிடும் வகையில் ஒடிஸா ஊராட்சி சட்டங்கள் (திருத்த) மசோதா-2016 மாநில சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.
பேச்சுத் திறன் மற்றும் செவித் திறன் இன்மை, காசநோய், தொழுநோய் போன்ற குறைபாடுகளை நவீன மருத்துவத்தில் குணப்படுத்தலாம் என்பதால் தற்போது ஊராட்சி சட்டங்களில் மேற்கண்டவர்களும் தேர்தலில் போட்டியிடத் தடையாக இருக்கும் ஷரத்துகள் தேவையற்றதாகிவிட்டன. எனவே மேற்கண்ட நபர்கள் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடத் தடையாக இருக்கும் சட்டப் பிரிவுகளை தற்போது அரசு திருத்தவிருக்கிறது என்று சட்டத் துறை அமைச்சர் அருண் குமார் சாஹு பேரவையில் ஒப்புதலுக்காக மசோதாவை தாக்கல் செய்யும்போது தெரிவித்தார்.

இந்த மசோதா தாக்கல் செய்யப்படும்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒருவர்கூட இல்லை. மையப் பகுதியில் தொடர் தர்னாவில் அமர்ந்திருந்த காங்கிரஸ், பாஜகவின் எஸ்சி, எஸ்டி எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர். எனினும் சட்டத் திருத்த மசோதா குரல் வாக்கு மூலம் நிறைவேற்றப்பட்டது.

அவையில் மசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன் பிஜு ஜனதாதள உறுப்பினர்களாக பிரஃபுல்ல சமாலும், அமர் பிரசாத் சத்பதியும் மட்டும் விவாதத்தில் பங்கேற்றனர். ஒடிஸா கிராம ஊராட்சி சட்டம்-1964, ஒடிஸா பஞ்சாயத்து சமிதி சட்டம்-1959, ஒடிஸா மாவட்டப் பஞ்சாயத்துச் சட்டம்-1991 ஆகிய 3 சட்டங்களுக்கும் இந்த திருத்தம் பொருந்தும் என்றார் சாஹு.

இந்த சட்டத் திருத்தம் மூலம் மேற்கண்ட காது கேளாத, வாய் பேச முடியாத நபர்கள், காசநோய், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் இனி உள்ளாட்சிப் பிரதிநிதிகளாகச் செயல்பட முடியும். 

இதையடுத்து மாநிலத்தில் இருக்கும் 2.12 லட்சம் தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களும் 45 காச நோயாளிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

மாநிலத்தில் 3 அடுக்கு ஊராட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவிருப்பதை முன்னிட்டு அரசு இந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

No comments:

Post a Comment