FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, May 17, 2016

ஒடிஸா ஊராட்சித் தேர்தலில் இனி பேச்சுத் திறனற்றோரும் போட்டியிடலாம்: மாநிலப் பேரவையில் மசோதாவுக்கு ஒப்புதல்

17.05.2016, ஒடிஸா மாநிலத்தில் 3 அடுக்கு ஊராட்சித் தேர்தல்களில் வாய் பேச இயலாதோர், செவித் திறனற்றோர், காசநோய், தொழுநோயால் பாதிக்கப்பட்டோரும் இனி போட்டியிடும் வகையில் ஒடிஸா ஊராட்சி சட்டங்கள் (திருத்த) மசோதா-2016 மாநில சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.
பேச்சுத் திறன் மற்றும் செவித் திறன் இன்மை, காசநோய், தொழுநோய் போன்ற குறைபாடுகளை நவீன மருத்துவத்தில் குணப்படுத்தலாம் என்பதால் தற்போது ஊராட்சி சட்டங்களில் மேற்கண்டவர்களும் தேர்தலில் போட்டியிடத் தடையாக இருக்கும் ஷரத்துகள் தேவையற்றதாகிவிட்டன. எனவே மேற்கண்ட நபர்கள் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடத் தடையாக இருக்கும் சட்டப் பிரிவுகளை தற்போது அரசு திருத்தவிருக்கிறது என்று சட்டத் துறை அமைச்சர் அருண் குமார் சாஹு பேரவையில் ஒப்புதலுக்காக மசோதாவை தாக்கல் செய்யும்போது தெரிவித்தார்.

இந்த மசோதா தாக்கல் செய்யப்படும்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒருவர்கூட இல்லை. மையப் பகுதியில் தொடர் தர்னாவில் அமர்ந்திருந்த காங்கிரஸ், பாஜகவின் எஸ்சி, எஸ்டி எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர். எனினும் சட்டத் திருத்த மசோதா குரல் வாக்கு மூலம் நிறைவேற்றப்பட்டது.

அவையில் மசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன் பிஜு ஜனதாதள உறுப்பினர்களாக பிரஃபுல்ல சமாலும், அமர் பிரசாத் சத்பதியும் மட்டும் விவாதத்தில் பங்கேற்றனர். ஒடிஸா கிராம ஊராட்சி சட்டம்-1964, ஒடிஸா பஞ்சாயத்து சமிதி சட்டம்-1959, ஒடிஸா மாவட்டப் பஞ்சாயத்துச் சட்டம்-1991 ஆகிய 3 சட்டங்களுக்கும் இந்த திருத்தம் பொருந்தும் என்றார் சாஹு.

இந்த சட்டத் திருத்தம் மூலம் மேற்கண்ட காது கேளாத, வாய் பேச முடியாத நபர்கள், காசநோய், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் இனி உள்ளாட்சிப் பிரதிநிதிகளாகச் செயல்பட முடியும். 

இதையடுத்து மாநிலத்தில் இருக்கும் 2.12 லட்சம் தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களும் 45 காச நோயாளிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

மாநிலத்தில் 3 அடுக்கு ஊராட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவிருப்பதை முன்னிட்டு அரசு இந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

No comments:

Post a Comment