FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Friday, May 27, 2016

பிரதமர் அலுவலகப் பரிசீலனையில் மாற்றுத் திறனாளிகள் மசோதா


புது தில்லி, 27 May 2016
மாற்றுத் திறனாளிகளை வகைப்படுத்தும் சட்டப்பிரிவில் மேலும் சில குறைபாடு உடையவர்களையும் சேர்க்க வழிவகை செய்யும் வரைவு மசோதா பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் தெரிவித்துள்ளார்.

மோடி அரசின் இரண்டாண்டு நிறைவையொட்டி தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் பல்வேறு பயனாளிகள் கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தாவர் சந்த் கெலாட் பேசியதாவது:

மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்க தற்போதைய அரசு கடுமையாகப் பாடுபட்டுவருகிறது.

மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான வரைவு மசோதாவின்படி ஊனம் தொடர்பான வகைப்பாட்டில் தற்போதுள்ள 7 குறைபாடுகளோடு மேலும் 12 குறைபாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், ஏற்கெனவே அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற்று வருபவர்களோடு, ஏனைய குறைபாடுகள் உடைய மேலும் பலரும் அந்த உதவிகளைப் பெற முடியும். இந்த வரைவு மசோதா தொடர்பாக அமைச்சகங்களுக்கு இடையே கலந்தாலோசனை நடைபெற்று முடிந்ததைத் தொடர்ந்து, அது பிரதமர் அலுவலகத்தின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றார் கெலாட்.

No comments:

Post a Comment