FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, May 27, 2016

பிரதமர் அலுவலகப் பரிசீலனையில் மாற்றுத் திறனாளிகள் மசோதா


புது தில்லி, 27 May 2016
மாற்றுத் திறனாளிகளை வகைப்படுத்தும் சட்டப்பிரிவில் மேலும் சில குறைபாடு உடையவர்களையும் சேர்க்க வழிவகை செய்யும் வரைவு மசோதா பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் தெரிவித்துள்ளார்.

மோடி அரசின் இரண்டாண்டு நிறைவையொட்டி தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் பல்வேறு பயனாளிகள் கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தாவர் சந்த் கெலாட் பேசியதாவது:

மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்க தற்போதைய அரசு கடுமையாகப் பாடுபட்டுவருகிறது.

மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான வரைவு மசோதாவின்படி ஊனம் தொடர்பான வகைப்பாட்டில் தற்போதுள்ள 7 குறைபாடுகளோடு மேலும் 12 குறைபாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், ஏற்கெனவே அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற்று வருபவர்களோடு, ஏனைய குறைபாடுகள் உடைய மேலும் பலரும் அந்த உதவிகளைப் பெற முடியும். இந்த வரைவு மசோதா தொடர்பாக அமைச்சகங்களுக்கு இடையே கலந்தாலோசனை நடைபெற்று முடிந்ததைத் தொடர்ந்து, அது பிரதமர் அலுவலகத்தின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றார் கெலாட்.

No comments:

Post a Comment