FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, May 27, 2016

பிரதமர் அலுவலகப் பரிசீலனையில் மாற்றுத் திறனாளிகள் மசோதா


புது தில்லி, 27 May 2016
மாற்றுத் திறனாளிகளை வகைப்படுத்தும் சட்டப்பிரிவில் மேலும் சில குறைபாடு உடையவர்களையும் சேர்க்க வழிவகை செய்யும் வரைவு மசோதா பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் தெரிவித்துள்ளார்.

மோடி அரசின் இரண்டாண்டு நிறைவையொட்டி தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் பல்வேறு பயனாளிகள் கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தாவர் சந்த் கெலாட் பேசியதாவது:

மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்க தற்போதைய அரசு கடுமையாகப் பாடுபட்டுவருகிறது.

மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான வரைவு மசோதாவின்படி ஊனம் தொடர்பான வகைப்பாட்டில் தற்போதுள்ள 7 குறைபாடுகளோடு மேலும் 12 குறைபாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், ஏற்கெனவே அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற்று வருபவர்களோடு, ஏனைய குறைபாடுகள் உடைய மேலும் பலரும் அந்த உதவிகளைப் பெற முடியும். இந்த வரைவு மசோதா தொடர்பாக அமைச்சகங்களுக்கு இடையே கலந்தாலோசனை நடைபெற்று முடிந்ததைத் தொடர்ந்து, அது பிரதமர் அலுவலகத்தின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றார் கெலாட்.

No comments:

Post a Comment