FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, May 27, 2016

செஞ்சிலுவை சங்க காதுகேளாதோர் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி

27.05.2016
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், கவுண்டம்பாளையத்தையடுத்த செஞ்சிலுவை சங்க காது கேளாதோர் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளி மாணவி எம்.ஆர்த்தி 301 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட மற்றும் பள்ளி அளவில் முதலிடத்தையும், எஸ்.ஹரிகுமார் 249 மதிப்பெண் பெற்று இரண்டாமிடத்தையும், கே.யமுனா, ஹெச்.சல்மான் பரிஷ் 229 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

காது கேளாத குழந்தைகளுக்கு பொதுத் தேர்வில் மொழிப்பாட விலக்கு அளிக்கப்படுவதால் இவர்கள் ஆங்கிலத் தேர்வை எழுத வேண்டியதில்லை. ஆதலால் இவர்களது மொத்த மதிப்பெண் 400 ஆக கணக்கிடப்படுகிறது. தேர்ச்சி பெற்ற அனைவரையும் பள்ளியின் தாளாளரும், கோவை செஞ்சிலுவை சங்க கிளைத் தலைவருமான நந்தினி ரங்கசாமி மற்றும் தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் பாராட்டினர்.

No comments:

Post a Comment