FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, May 27, 2016

செஞ்சிலுவை சங்க காதுகேளாதோர் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி

27.05.2016
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், கவுண்டம்பாளையத்தையடுத்த செஞ்சிலுவை சங்க காது கேளாதோர் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளி மாணவி எம்.ஆர்த்தி 301 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட மற்றும் பள்ளி அளவில் முதலிடத்தையும், எஸ்.ஹரிகுமார் 249 மதிப்பெண் பெற்று இரண்டாமிடத்தையும், கே.யமுனா, ஹெச்.சல்மான் பரிஷ் 229 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

காது கேளாத குழந்தைகளுக்கு பொதுத் தேர்வில் மொழிப்பாட விலக்கு அளிக்கப்படுவதால் இவர்கள் ஆங்கிலத் தேர்வை எழுத வேண்டியதில்லை. ஆதலால் இவர்களது மொத்த மதிப்பெண் 400 ஆக கணக்கிடப்படுகிறது. தேர்ச்சி பெற்ற அனைவரையும் பள்ளியின் தாளாளரும், கோவை செஞ்சிலுவை சங்க கிளைத் தலைவருமான நந்தினி ரங்கசாமி மற்றும் தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் பாராட்டினர்.

No comments:

Post a Comment