FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, May 27, 2016

செஞ்சிலுவை சங்க காதுகேளாதோர் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி

27.05.2016
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், கவுண்டம்பாளையத்தையடுத்த செஞ்சிலுவை சங்க காது கேளாதோர் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளி மாணவி எம்.ஆர்த்தி 301 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட மற்றும் பள்ளி அளவில் முதலிடத்தையும், எஸ்.ஹரிகுமார் 249 மதிப்பெண் பெற்று இரண்டாமிடத்தையும், கே.யமுனா, ஹெச்.சல்மான் பரிஷ் 229 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

காது கேளாத குழந்தைகளுக்கு பொதுத் தேர்வில் மொழிப்பாட விலக்கு அளிக்கப்படுவதால் இவர்கள் ஆங்கிலத் தேர்வை எழுத வேண்டியதில்லை. ஆதலால் இவர்களது மொத்த மதிப்பெண் 400 ஆக கணக்கிடப்படுகிறது. தேர்ச்சி பெற்ற அனைவரையும் பள்ளியின் தாளாளரும், கோவை செஞ்சிலுவை சங்க கிளைத் தலைவருமான நந்தினி ரங்கசாமி மற்றும் தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் பாராட்டினர்.

No comments:

Post a Comment