FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, May 26, 2016

இன்ஜினியராக வேண்டும் என்பதே குறிக்கோள் மாநில முதலிடம் பெற்ற காது கேளாத மற்றும் வாய் பேசமுடியாத மாணவர்

26.05.2016, மோகனுார்: 'இன்ஜினியராக வேண்டும் என்பதே என் குறிக்கோள்' என, மாற்றுத்திறன் கொண்ட மாணவர் பிரிவில், மாநில அளவில் முதலிடம் பிடித்த, மோகனுார் அரசு பள்ளி மாணவர் அன்பரசன் கூறினார்.

தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. நாமக்கல் மாவட்டம், மோகனுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, மாணவர் அன்பரசன், காது கேளாத மற்றும் வாய் பேசமுடியாத மாற்றுத்திறன் பிரிவில், 377 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.

அவர், தமிழில், 94, கணித பாடத்தில், 92, அறிவியலில், 97, சமூக அறிவியலில், 94, என, மொத்தம், 377 மதிப்பெண் பெற்றுள்ளார்.

மோகனுார் ஒன்றியம், மல்லப்பாளையம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் கருப்பண்ணன், நிர்மலா தம்பதியரின் மகனான அன்பரசன் கூறியதாவது:எனக்கு பிறவிலேயே செவித்திறன், பேச்சுத்திறன் குறைபாடு உள்ளது. மோகனுார் அரசு ஆண்கள் பள்ளியில் வாய்பேச முடியாத, செவித்திறன் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு, தனியாக வகுப்பு நடத்தப்படுகிறது. எங்களுக்கு, 4 பாடங்கள் மட்டுமே, ஆங்கிலம் கிடையாது. மாநில அளவில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் காலத்தில், இன்ஜினியராக வேண்டும் என்பதே என் குறிக்கோள்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment