FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Thursday, May 26, 2016

இன்ஜினியராக வேண்டும் என்பதே குறிக்கோள் மாநில முதலிடம் பெற்ற காது கேளாத மற்றும் வாய் பேசமுடியாத மாணவர்

26.05.2016, மோகனுார்: 'இன்ஜினியராக வேண்டும் என்பதே என் குறிக்கோள்' என, மாற்றுத்திறன் கொண்ட மாணவர் பிரிவில், மாநில அளவில் முதலிடம் பிடித்த, மோகனுார் அரசு பள்ளி மாணவர் அன்பரசன் கூறினார்.

தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. நாமக்கல் மாவட்டம், மோகனுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, மாணவர் அன்பரசன், காது கேளாத மற்றும் வாய் பேசமுடியாத மாற்றுத்திறன் பிரிவில், 377 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.

அவர், தமிழில், 94, கணித பாடத்தில், 92, அறிவியலில், 97, சமூக அறிவியலில், 94, என, மொத்தம், 377 மதிப்பெண் பெற்றுள்ளார்.

மோகனுார் ஒன்றியம், மல்லப்பாளையம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் கருப்பண்ணன், நிர்மலா தம்பதியரின் மகனான அன்பரசன் கூறியதாவது:எனக்கு பிறவிலேயே செவித்திறன், பேச்சுத்திறன் குறைபாடு உள்ளது. மோகனுார் அரசு ஆண்கள் பள்ளியில் வாய்பேச முடியாத, செவித்திறன் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு, தனியாக வகுப்பு நடத்தப்படுகிறது. எங்களுக்கு, 4 பாடங்கள் மட்டுமே, ஆங்கிலம் கிடையாது. மாநில அளவில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் காலத்தில், இன்ஜினியராக வேண்டும் என்பதே என் குறிக்கோள்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment