FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, May 26, 2016

இன்ஜினியராக வேண்டும் என்பதே குறிக்கோள் மாநில முதலிடம் பெற்ற காது கேளாத மற்றும் வாய் பேசமுடியாத மாணவர்

26.05.2016, மோகனுார்: 'இன்ஜினியராக வேண்டும் என்பதே என் குறிக்கோள்' என, மாற்றுத்திறன் கொண்ட மாணவர் பிரிவில், மாநில அளவில் முதலிடம் பிடித்த, மோகனுார் அரசு பள்ளி மாணவர் அன்பரசன் கூறினார்.

தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. நாமக்கல் மாவட்டம், மோகனுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, மாணவர் அன்பரசன், காது கேளாத மற்றும் வாய் பேசமுடியாத மாற்றுத்திறன் பிரிவில், 377 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.

அவர், தமிழில், 94, கணித பாடத்தில், 92, அறிவியலில், 97, சமூக அறிவியலில், 94, என, மொத்தம், 377 மதிப்பெண் பெற்றுள்ளார்.

மோகனுார் ஒன்றியம், மல்லப்பாளையம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் கருப்பண்ணன், நிர்மலா தம்பதியரின் மகனான அன்பரசன் கூறியதாவது:எனக்கு பிறவிலேயே செவித்திறன், பேச்சுத்திறன் குறைபாடு உள்ளது. மோகனுார் அரசு ஆண்கள் பள்ளியில் வாய்பேச முடியாத, செவித்திறன் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு, தனியாக வகுப்பு நடத்தப்படுகிறது. எங்களுக்கு, 4 பாடங்கள் மட்டுமே, ஆங்கிலம் கிடையாது. மாநில அளவில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் காலத்தில், இன்ஜினியராக வேண்டும் என்பதே என் குறிக்கோள்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment