FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, January 30, 2016

அரசு காதுகேளாதோர் ஊழியர்களுக்கு ஒரு வேண்டுகோள்



கதை சொல்லிகள் இல்லை: பேச்சுத்திறன் இழக்கும் பிஞ்சுகள்

26.01.2016, கோவை : செவித்திறன் குறைபாடு இல்லாத நிலையிலும், மன அழுத்தம், தனிமை, கதை சொல்லிகள் இல்லாத காரணங்களால், பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்காமல், 60 சதவீத குழந்தைகள், உச்சரிப்பு திறனை இழப்பதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.

குழந்தை பிறந்து, மூன்று மாத்திலே சத்தத்தை கேட்கும் திறனை பெறுகிறது. ஆறு மாதத்தில், முணுமுணுப்பாக வார்த்தைகளை உச்சரிக்கவும், ஒரு வயதில் வார்த்தைகளை தெளிவாக பேசி, பின் சொற்றொடராக உரையாட முனைவது வழக்கம்.

இந்த ஆரம்பகட்ட நிகழ்வுகள், தாமதமாக நடந்தாலோ அல்லது எவ்வித சத்தத்திற்கும் பதிலளிக்காமல் இருப்பதை தான், குறைபாட்டுக்கான முதல் அறிகுறியாக கருத வேண்டும். செவித்திறன் பாதித்த குழந்தை, பேச முனையாமல், சைகையை மட்டுமே நாடும்.

இந்த குறைபாடுள்ள குழந்தைகளின் கேட்கும் திறனை பொறுத்து, குணமாக்க முடியும். இதுபோன்ற பாதிப்புள்ள குழந்தைகளுக்காகவே, கலெக்டர் அலுவலக வளாகத்தினுள் செயல்படும், மாற்றுத்திறனளிகள் நலத்துறை அலுவலகத்தினுள், காது கேளாத குழந்தைகளுக்கான ஆரம்பநிலை ஆய்வு மையம் செயல்படுகிறது.

இங்கு, எட்டு விநாடிக்குள் கேட்கும் திறன் பரிசோதித்து, தகவல் அளிக்கும் அதிநவீன கருவிகள் உள்ளன. இதுதவிர, அரசு மருத்துவமனை உதவியோடும் ஆரம்ப பரிசோதனை செய்தும், சிகிச்சை அளிக்கப்படுகிறது. தெளிவற்ற உச்சரிப்பு, திக்குவாய், பிளவுபட்ட உதடுகளால் உச்சரிப்பில் சிரமம், நாட்பட்ட பேச்சு குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, தொடர் பயிற்சிகள் அளிக்க வேண்டியது அவசியம்.

ஆனால், வேலைப்பளு, கூட்டுக்குடும்ப பிளவு உள்ளிட்ட பல காரணங்களால், 80 சதவீத பெற்றோர், சிகிச்சைக்கு ஒத்துழைப்பதில்லை.

மேலும், கூட்டு குடும்பத்தில், கதை சொல்லிகள் எனும் மூத்தோர் இருப்பதால், குழந்தைகள் அதிக உரையாடலை கேட்கவும், பதிலளிக்கவும் வாய்ப்பு இருந்தது. இந்நிலை தற்போது குறைந்து வருவதாலும், பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால், மன அழுத்தம், தனிமை, பேச வாய்ப்பின்மை உள்ளிட்ட காரணங்களாலே, 60 சதவீத குழந்தைகள் எவ்வித செவித்திறன் கோளாறுகளும் இல்லாத நிலையிலும், வார்த்தைகளை உச்சரிக்க கூட திணறுவதாக கூறப்படுகிறது.

இதற்கு, குழந்தைகளுடன் பேசும் நேரத்தை அதிகப்படுத்துவதோடு, சில எளிய பயிற்சிகளை அளித்தாலே போதுமானது. பெரும்பாலும், இதுபோன்ற குறைபாட்டை, பள்ளி செல்லும் வயதில் அறிந்து பின், சிகிச்சைக்கு வருவோரே அதிகம்.

ஒலியியல் துறை அதிகாரி ஸ்வர்ணபவானி கூறுகையில்,''பேச்சு பயிற்சிக்காக வரும் குழந்தைகளின் மனநிலைக்கு தகுந்தபடி, மையத்தில் வரைபடங்கள், பழங்கள், காய்கறிகள் அடங்கிய சார்ட்டுகள், கண்ணாடி முன் நின்று உச்சரிக்க வசதிகள், அதிநவீன கருவிகள் உள்ளன.

குறைபாடுடன் வரும் குழந்தைகளுக்கு, சிகிச்சையும், பயிற்சியும் மட்டுமே குணமாக்கும் மருந்தாகும். ஆனால், பேச வாய்ப்பு கிடைக்காததால், உச்சரிக்க தடுமாறுதல், மாற்று நபர்களை கண்டு மிரளும் குழந்தைகளுக்கு, பெற்றோரின் கவனிப்பு மிக அவசியம். சமூக சூழலில், மற்றவர்களோடு உரையாடவும், பேசவும், குழந்தைகள் பேசுவதை கவனிக்கவும், நேரம் ஒதுக்குவது மிக அவசியம்,'' என்றார்.

சைகை மொழி அகராதி பிப்., 5ம் தேதி வெளியீடு

29.01.2016, பெ.நா.பாளையம்: வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளிகளுக்கான, ஆங்கிலம்- - இந்தி சைகை மொழி அகராதியை, சுவாமி விவேகானந்தா பல்கலை தயாரித்துள்ளது.

கோவை, பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய வளாகத்தில், சுவாமி விவேகானந்தா பல்கலை செயல்படுகிறது. இங்கு, மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு, சிறப்பு கல்வியை பாடமாக கொண்ட பட்டயம், பட்டப்படிப்புகள் உள்ளன.

கடந்த, 2001ல், வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளிகளுக்கு, ஆங்கில சைகை மொழி அகராதி வெளியிடப்பட்டது. 2015 பிப்., மாதம், தமிழகத்தில் உள்ளவர்களுக்காக, ஆங்கிலம்- - தமிழ் சைகை மொழி அகராதி வெளியிடப்பட்டது. தற்போது, ஆங்கிலம் -- இந்தி சைகை மொழி அகராதி தயாரிக்கப்பட்டுள்ளது.

சுவாமி விவேகானந்தா பல்கலையினர் கூறுகையில், 'இந்தி பேசும் மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப, தேவையான இடங்களில், ஏற்கனவே உள்ள சைகை மொழியில், சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 524 பக்கம் உடைய அகராதியில், 1,500க்கும் மேற்பட்ட சைகைகள் இடம் பெற்றுள்ளன. பிப்., 5ல் நடக்கும் விழாவில் அகராதி வெளியிடப்படுகிறது' என்றனர்.

ஐஎஸ்ஐக்கு உளவு பார்த்த காது கேளாத, வாய் பேச முடியாத குஜராத் பிச்சைக்காரர்

27.01.2016, அகமதாபாத்: காது கேட்க, வாய் பேச முடியாத பிச்சைக்காரர் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்காக உளவு பார்த்தது குஜராத் மற்றும் பஞ்சாப் போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்தவர் அஸ்லாம் பதான். காது கேட்க, வாய் பேச முடியாத அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை ராஜ்ஜோட்டில் பிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 14ம் தேதி அவர் பஞ்சாப் மாநிலம் அம்பாலாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை செய்ததில் அவருக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. பதானிடம் இருந்து பைனாகுலர், செல்போன், குஜராத்தில் உள்ள விமானப்படை தளம் உள்ளிட்ட முக்கிய இடங்களின் வரைபடம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பதான் அகமதாபாத்தில் உள்ள ஐஎஸ்ஐ உளவாளிக்கு தகவல் அளித்து வந்துள்ளார். அவர் எப்படி ராஜ்கோட்டில் இருந்து அம்பாலா வந்தார் என்பது போலீசாருக்கு குழப்பமாக உள்ளது. பதானிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போனில் ராஜ்கோட் மற்றும் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்களின் எண்கள் உள்ளன. அந்த எண்கள் ராஜ்கோட் மற்றும் அகமதாபாத்தில் கடை வைத்துள்ளவர்களின் எண்கள். பதானிடம் விசாரணை நடத்த குஜராத்தைச் சேர்ந்த தீவிரவாத தடுப்பு பிரிவு படையினர் பஞ்சாப் சென்றுள்ளனர். காது கேட்க, வாய் பேச முடியாத பிச்சைக்காரரை யாரும் சந்தேகிக்க மாட்டார்கள் என்று ஐஎஸ்ஐ நினைத்துள்ளது.

முட்டுக்காடு மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் 207 ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

வேளச்சேரி, ஜன. 29–

முட்டுக்காட்டில் மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகள் பள்ளி உள்ளது. இங்கு 207 ஒப்பந்த ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நிதி இல்லாததால் அவர்களை பணிக்கு வர வேண்டாம் என்று நிர்வாகத்தினர் கூறியதாக தெரிகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 207 ஊழியர்களும், மாற்று திறனாளிகள் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளும் அவர்களது பெற்றோரும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

மாற்றுத்திறனாளி இடஒதுக்கீடு குறித்த வழக்கில் பதில் அளிக்காததால் ஐகோர்ட் அதிரடி உத்தரவு: அரசு செயலருக்கு மீண்டும் அபராதம்

27.01.2016, சென்னை: அரசு பணி, பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக்கோரி தாக்கல் செய்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாத தமிழக உயர் கல்வித் துறை செயலாளருக்கு 2வது முறையாக சென்னை ஐகோர்ட் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தது. தமிழ்நாடு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சொக்கலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்தது. இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர். பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வின்போது மொத்த இடங்களில் 3 சதவீதம் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சட்டம் உள்ளது. இதுகுறித்து மும்பை ஐகோர்ட் தீர்ப்பும் கூறியுள்ளது. ஆனால், கடந்த முறை நடைபெற்ற தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சலிங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு எதுவும் வழங்கவில்லை.

தகுதி உடைய அனைத்து துறைகளிலும், அனைத்து வகை பணிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளது. மொத்த பணியிடத்தில் இதனை வழங்க வேண்டும். ஆனால் இட ஒதுக்கீட்டை அரசு அதிகாரிகள் முறையாக அமல் படுத்துவது இல்லை. இந்த நடவடிக்கை சமவாய்ப்பு என்ற அரசியல் அமைப்புக்கு எதிரானது. மாற்றுத்திறனாளிகளின் அறியாமையை பயன்படுத்தி இட ஒதுக்கீட்டு உரிமையை பறிக்க கூடாது. இட ஒதுக்கீடு வழங்க மறுப்பது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிரானது. எனவே, தலைமை ஆசிரியர் பதவி உயர்வில், மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தவிட வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி கவுல், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன் கடந்த நவம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பாக அரசு வக்கீல் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டார். இதை கேட்ட நீதிபதிகள், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை செயலாளர், பள்ளிகல்வித்துறை இயக்குநர் உள்ளிட்டோருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து அடுத்த முறை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் நீதிபதி புஷ்பசத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய முதல் டிவிசன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பாக அரசு வக்கீல் கிருஷ்ணகுமார் ஆஜராகி, பள்ளிக்கல்வி துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.

உயர் கல்வித்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய மேலும் இரண்டு வாரம் கால அவகாசம் வேண்டும் என கூறினார். இதை கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என ஏற்கனவே 10 ஆயிரம் அபராதம் விதிக்கபட்டுள்ளது. அதனை செலுத்திவிட்டீர்களா என கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு வக்கீல் இன்னும் செலுத்தவில்லை என தெரிவித்தார். இதனை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாத தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலாளருக்கு மீண்டும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கின்றோம். பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்பில் மேலும் இரண்டு வாரம் கால அவகாசம் கோரப்பட்டது, அந்த கால அவகாசம் அளிக்கின்றோம். இரண்டு வாரத்தில் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.

அதே போன்று ஏற்கனவே விதிக்கப்பட்ட அபராதத் தொகையையும், தற்போது விதிக்கப்பட்ட அபராத்தையும் இரண்டு வாரத்தில் சமரச தீர்வு மையத்தில் செலுத்த வேண்டும். வழக்கின் விசாரணையை மார்ச் 3ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர். 

போலீசாரின் தவறால் மாற்றுத்திறனாளிகள் கைது

27.01.2016, முதல்வர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளிகளை, போராட்டம் நடத்த வந்ததாக கருதி, போலீசார் கைது செய்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற, அனைத்து மாற்றுத்திறன் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், விரைவில் பணி நியமன ஆணை வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான, 3 சதவீத இட ஒதுக்கீட்டை, முழுமையாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் மனு கொடுக்க, அனைத்து மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், 16 மாற்றுத் திறனாளிகள், நேற்று காலை, தலைமைச் செயலகம் வந்தனர்.அவர்கள் தலைமை செயலகம் முன், தவழ்ந்து செல்லும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தகவல் பரவியது.அதை நம்பி, தலைமைச் செயலகம் முன், பஸ்சில் இருந்து இறங்கிய, மாற்றுத் திறனாளிகள் 16 பேரையும், போலீசார் கைது செய்து, சமுதாய கூடத்தில் தங்க வைத்தனர். போலீசார், எதற்கு கைது செய்கின்றனர் எனத் தெரியாமல் தவித்த மாற்றுத்திறனாளிகளிடம், போலீசார், கைதுக்கான காரணத்தை தெரிவித்தனர்.அதை கேட்டு மாற்றுத் திறனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். மனு கொடுக்க வந்த விவரத்தை தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, மூன்று பேரை மட்டும், போலீசார் தலைமை செயலகம் அழைத்து சென்று, முதல்வர் அலுவலகத்தில், மனு கொடுக்க வைத்தனர்.கைதான மாற்றுத் திறனாளிகளுக்கு, குடிநீர், உணவு வழங்கப்படாததால், அவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Wednesday, January 27, 2016

Shri Thaawarchand Gehlot launches National Job Portal for persons with disabilities

27.01.2016, Social Justice and Empowerment, Shri Thaawarchand Gehlot launched an exclusive job portal for Persons with Disabilities (PwDs) here today. The PwDs can avail the different facilities such as self employment loan, education loan, skill training, link to scholarships and information about jobs in a single window platform through this National Job Portal. Ministers of State for Social Justice and Empowerment Shri Krishan Pal Gurjar and Shri Vijay Sampla were also graced the occasion. 

Launching the portal, Shri Thaawarchand Gehlot said the Government has given very high priority to skill training programme for Persons with Disabilities and has a target for skilling five lakh persons in next 3 years. The skill training will be provided by a network of 200 clusters of Training Partners with financial assistance of government. A time bound action plan has been prepared for this purpose, the Government will also pursue private sector for providing them job after the training, he said.

Highlighting the other initiatives of his Ministries Shri Gehlot said assistance for education and medical treatment has been given big thrust by his Government. Recently a scheme has been launched to plant an especial device for assistance to deaf and dumb children. So far within one and half month 305 children have been provided this device. Encouraging results have been seen and many of these children are now able to speak and hear like normal children. The Minister also said that the Government is also working on universal ID programme for persons with disabilities so that they can get facilities across the country on the production of the ID.

Department of Empowerment of Persons with Disabilities, Ministry of Social Justice and Empowerment, Govt. of India has entrusted National Handicapped Finance and Development Corporation (NHFDC) to develop a National level Job portal for the persons with disabilities (PwDs). A disabled-friendly National level Job portal, www.disabilityjobs.gov.in, will a long way for empowering persons with disabilities by providing them all desired information for employment opportunities at one platform.

On the occasion, a book on success stories of 100 PwD entrepreneurs who have come up in their life to be the true role models will be launched. The book YES WE CAN" has been published by penguin publishers with the support of NHFDC.

Geeta, who returned to India from Pakistan, hoists tricolour at Indore

27.01.2016
Geeta, the deaf and mute girl who returned to India from Pakistan, Tuesday hoisted a tricolour at an event here on the occasion of Republic Day.

She hoisted a 21 x 14 feet national flag in the presence of hundreds of people at Regal crossing in Indore. She also danced to the tunes of patriotic songs. The event was organised by ‘Apna Samooh.’

“I am very happy to hoist the tricolour in the land of Mahatma Gandhi. I was waiting for this moment since the time I was in Pakistan. Every Indian should honour the national flag,” she said in sign language.

Geeta, who is staying at an institution here for the hearing impaired, said she was very happy to return to India and “wants good Indo-Pak relations.”

“I didn’t get an opportunity to study during childhood…now I am concentrating on completing my studies,” she added.

Last year, On October 26, nearly 15 years after she accidentally crossed over to Pakistan, Geeta, whose story has touched people on both sides of the border, returned to India.

Geeta, now 23, was reportedly just 7 or 8 years old when she was found sitting alone on the Samjhauta Express by the Pakistan Rangers at the Lahore railway station.

She was adopted by the Edhi Foundation’s Bilquis Edhi and lived with her in Karachi.

Her story came to light after the release of Salman Khan starrer ‘Bajrangi Bhaijaan’ in which the hero unites a girl separated from her Pakistani mother who was visiting India.

தேசிய ஒலிம்பிக் அறிவியல் போட்டி: 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

செங்கல்பட்டை அடுத்த மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியில் 8-ஆவது தேசிய ஒலிம்பிக் அறிவியல் போட்டிகளும், கண்காட்சியும் அண்மையில் நடைபெற்றன.
சொசைட்டி ஆப் ஆட்டோமொபைல் இன்ஜினீயர்ஸ் இந்தியா (எஸ்.ஏ.இ) அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் 5-ஆவது, 6-ஆவது வகுப்புகள் பயிலும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
எஸ்.ஏ.இ. அமைப்பின் தலைவர் அரவிந்த பரத்வாஜ் வரவேற்புரை ஆற்றினார். சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.
இந்தப் போட்டிகள் குறித்து அமைப்பின் நிர்வாகியும், டிவிஎஸ் லூக்காஸ் இணை நிர்வாக இயக்குநருமான அரவிந்த் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாணவர்கள் அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் தங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்வதற்காக இத்தகைய போட்டிகள் நடத்தப்படுகின்றன.
ராக்கெட் வடிவமைப்புக்குத் தேவையான அடிப்படை இயற்பியலை பயன்படுத்தி "ஜெட் டாய்' எனப்படும் பலூனினால் உந்தப்படும் வாகனம் வடிவமைத்தல், கப்பல் கட்டுமானத்தின் அடிப்படையான சிறு பாய் மரப் படகு தயாரித்தல் ஆகியவை மாணவர்களுக்கு போட்டிகளாக நடத்தப்பட்டன.
பார்ப்பதற்கு சிறு விளையாட்டுப் பொருள் போல தெரிந்தாலும், இதில் வாகனம் கடந்து செல்லும் தூரம், பலு தூக்கும் திறன், வேகம், உராய்வுத் தன்மை, காற்றுத் தடை, உந்துவிசை போன்ற முக்கியமான பெளதிக விதிகளை பின்பற்றி வடிவமைப்பது முக்கியமானதாகும்.
அப்படி வடிவமைக்கும் பொருள் குறித்து விரிவாக எடுத்துக் கூறி, அது செயல்படுத்தும் விதம் குறித்து சரியாகக் கூறினால் அந்த மாணவருக்கு முழு மதிப்பெண் கிடைக்கும்.
இவையனைத்தும் சரியாக அமைந்து சோதனைகளில் குறிப்பிட்ட கட்டளை விதிகளை கடக்கும் வாகனங்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
இந்தப் போட்டிகளில் தனியார் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது, அரசுப் பள்ளி மாணவர்களும், வாய் பேசாத, காது கேளாத மாணவர்களும் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர் என்றார் அரவிந்த் பாலாஜி.

இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு 2வது முறையாக அபராதம் விதிப்பு

26.01.2016
பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்காத தமிழக அரசுக்கு, இரண்டாவது முறையாக 10,000 ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயண ஆகியோர் அடங்கிய அமர்வு இதற்கான உத்தரவினை பிறப்பித்துள்ளது. மேலும், வழக்கு குறித்து 2 வார காலத்திற்குள் விரிவான பதில் மனு தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு சட்டப்படி 3 சதவீத இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், ஆனால், தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு எதுவும் வழங்கப்படவில்லை என்றும் புகார் தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது.

தமிழ்நாடு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்படவில்லை.

இதனையடுத்து, தமிழக அரசுக்கு நீதிபதிகள் 10,000 ரூபாய் அபராதம் விதித்தனர். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் 10,000 ரூபாய் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

Tuesday, January 26, 2016

தமிழ்நாடு காதுகேளாதோருக்காக அனைத்து விளையாட்டு அமைப்பிலும் ஒரு சங்கத்தை உருவாக்க வேண்டுமா? வேண்டாமா?

தமிழ்நாடு காதுகேளாதோருக்காக அனைத்து விளையாட்டு அமைப்பிலும் ஒரு சங்கத்தை உருவாக்க வேண்டுமா? வேண்டாமா?
வேண்டும்
வேண்டாம்
take quizzes


கடந்த ஆண்டில் சென்னையில் ஆசிரியை தாக்கியதில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாணவர் ராகவராஜ் இறந்ததால் காதுகேளாத மாணவர்கள் கோபம் கொதிப்பு



கடந்த ஆண்டில் (24.05.2014) சென்னையில் பள்ளி ஆசிரியை தாக்கியதில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர், கடந்த மூன்று மாதங்களாக கோமாவில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

சாந்தோமில் உள்ள காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாணவர்களுக்கான பள்ளியைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ராகவராஜை, பள்ளி ஆசிரியை ஷகிலா ஜான்சியும், அவரது கணவரும் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால், ராகவராஜ் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டதை அடுத்து, அவரது பெற்றோர், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இரு தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

ஆனால் இதுவரை புகார் எந்த பயனும் இல்லை. ஆசிரியர்களுக்கும் காதுகேளாத மாணவர்களுக்கும் கடும் விவாதம் நடைபெற்றன. பாதிக்கப்பட்ட மாணவர்க்கு ரூ. பத்து லட்சம் நஷ்ட ஈடு தருமாறு பள்ளி காதுகேளாத மாணவர்கள் கேட்டுக்கொண்டனர். இதையும் ஏற்க மறுத்தால் காதுகேளாத மாணவர்கள் கடும் போராட்டம் நடத்த முடிவு செய்து வருகிறார்கள்,

DRDO CEPTAM Recruitment 2016 (CEPTAM 8 - 1142 Vacancies)





ரயில்வேயில் மாற்றுத் திறனாளிகளுக்கு 1884 பணியிடங்ககளுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..?

25.01.2016
ரயில்வேயில் மாற்றுத்திறனாளிகளுக்கான 1884 குரூப் 'D' பணியிடங்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்த மாதம் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தெற்கு மண்டலத்தில் மட்டும் 63 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயதுவரம்பு: 18 - 42க்குள் இருக்க வேண்டும்

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ அல்லது என்.ஏ.சி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.rrc-mas.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்து பரிசோதனை தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://pwd.rrcnr.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2016

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15.02.2016 - 28.02.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://pwd.rrcnr.org/PDF/PDF_Notification_1_2015.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

டிஆர்டிஓ ஆராய்ச்சி மையத்தில் 1142 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழகம் (டிஆர்டிஓ) நாடு முழுவதும் 60 மையங்களுடன் ராணுவம் மற்றும் நாட்டிற்குத் தேவையான பல்வேறு முன்னோடி ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் பணிகளை பெறுவதற்கு டி.ஆர்.டி.ஓ. நுழைவுத் தேர்வு எனப்படும் 'செப்டம் தேர்வு' மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த ஆண்டு 1142 பணியிடங்களுக்கான செப்டம் தேர்வுக்கான (CEPTAM-08) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி - காலியிடங்கள் விவரம்:

பணி: சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட்

காலியிடங்கள்: 564

தகுதி: பொறியியல் துறையில் பட்டயம், பட்டம் அல்லது பி.எஸ்சி. பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ,

பணி: டெக்னீசியன்

காலியிடங்கள்: 345

வயதுவரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டெக்னிக்கல் பிரிவில் ஐடிஐ முத்திருக்க வேண்டும்.

பணி: நிர்வாரகம் மற்றும் இதர பணிகள் - 233

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.50.. எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: www.drdo.gov.in என்ற ஆதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தப்பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ் வரும் அஞ்சல் முதகவரி அனுப்ப வேண்டும்.

DRDO Entry Test 2015, Post Box No.: 8626, Delhi110 054

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.02.2016

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 15.02.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.drdo.gov.in அல்லது http://www.drdo.gov.in/drdo/ceptam/advt-ceptam-08-advt.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

CLICK HERE

This Bangalore-based NGO is dismantling bias against the differently-abled

25.01.2016, “If you expect people to deliver, they deliver." This is not a Monday morning motivational message. This is the conviction — or "secret sauce" as he prefers to call it — that Dipesh Sutariya has in those who are differently-abled.

And for good reason. The bias is so subconsciously ingrained that it takes conscious effort to view the 'differently-abled' as "people with different skills". For most of us, a visually-impaired person walking with the assistance of a cane is a 'blind' person. Rarely, if ever, do we perceive that person to possess elevated auditory or olfactory senses — innate skills that would be highly valuable in sectors such as perfumery or sound testing.

It was this inclusive approach that led Thorkil Sonne, an IT professional in Denmark whose two-and-a-half-year-old son Lars was diagnosed with infantile autism, to start Specialisterne (Danish for The Specialists), a social venture that seeks to leverage the skills of those on the Autism Spectrum Disorder (ASD). Sonne's mission to create a million jobs for people with autism found an echo in India, when another IT professional, VR Ferose, was given the same diagnosis for his son, Vivaan, as Sonne had been for Lars years earlier.

Saturday, January 23, 2016

தமிழ்நாடு காதுகேளாதோருக்காக அனைத்து விளையாட்டு அமைப்பிலும் ஒரு சங்கத்தை உருவாக்க வேண்டுமா? வேண்டாமா?


தமிழ்நாடு காதுகேளாதோருக்காக அனைத்து விளையாட்டு அமைப்பிலும் ஒரு சங்கத்தை உருவாக்க வேண்டுமா? வேண்டாமா?

வேண்டும்
வேண்டாம்
facebook poll

பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு சென்ற மாற்றுத்திறனாளிகள் விபத்தில் சிக்கினர்

வாரணாசி, 22.01.2016, 
பிரதமர் நரேந்திர மோடி தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையட்டி அங்கு சுமார் 8 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு, பிரதமர் மோடி நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சிக்காக சுமார் 42 மாற்றுத்திறனாளிகளை ஏற்றிக்கொண்டு காலையில் ஒரு பஸ், வாரணாசிக்கு சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் கப்சேத்தி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் சென்ற போது சாலையோரத்தில் நின்ற கம்பம் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் 22 மாற்றுத்திறனாளிகள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு வாரணாசியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Deaf-mute woman gangraped in UP

Lalitpur, 22.01.2016, 
 A 45-year-old deaf and mute woman was allegedly gangraped and thrown from a train at Lalitpur Railway Station.

The woman hailing from Banda was allegedly raped by two men late last night and thrown from the train while it slowed down at the railway station, district magistrate Dr Rupesh Kumar said.

She has been admitted to the district hospital for medical examination, the DM said adding that so far FIR has not been lodged and investigations were on.

Deaf man stabbed when sign language mistaken for gang signs

BURLINGTON, NC-
Terrance Daniels and another deaf friend communicated via sign language as they walked down the street.

When Robert Neal saw the men, he used a kitchen knife to stab Daniels.

“He mistook the sign language for gang signs," Sgt. Mark Yancey told ABCNews.com. "An altercation ensued, and the victim was stabbed several times."

Making the story even more bizarre, cops don’t believe Neal is a member of a gang. A helicopter rushed Daniels to a hospital where he remains in stable condition.

Neal ran from the scene but was arrested a short time later in a nearby city. Neal faces charges of assault with a deadly weapon with intent to kill. Bond is set at $500,000.

Investigators have not confirmed or denied alcohol or drugs played a role in the attack.

Friday, January 22, 2016

அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் இளநிலை பயிற்சி அலுவலர் பணிக்கு ஆட்கள் தேர்வு வருகிற 1-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

22.01.2016, தர்மபுரி,
அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் இளநிலை பயிற்சி அலுவலர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடக்கிறது. இதற்கு வருகிற 1-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி அலுவலர் பணி
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் பயிற்சி பிரிவில் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள சுமார் 329 இளநிலை பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்பும் வகையில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். எனவே தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தமிழக அரசின் ஸ்கில் டிரெயினிங் இணைய தள முகவரியில் சென்று விளக்ககுறிப்பில் கண்டுள்ளபடி விண்ணப்பிக்கலாம்.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க உரிய தொழிற்பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ், 3 ஆண்டு முன் அனுபவம் அல்லது உரிய தொழில் பழகுனர் சான்றிதழ் மற்றும் 2 ஆண்டு அனுபவம் அல்லது உரிய 3 ஆண்டு பொறியியல் டிப்ளமோ அல்லது டெக்னாலஜி பட்டயம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர்.

வயது வரம்பு
ஐ.டி.ஐ. சான்றிதழ் மற்றும் தொழில் பழகுனர் சான்றிதழ் பெற்ற பொது பிரிவிற்கு 35 வயதும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 37 வயதும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 40-ம் வயது வரம்பாகும். 3 ஆண்டு டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ. சான்றிதழுடன் மேல்நிலைக்கல்வி மற்றும் பட்டம் பெற்றவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவை ஆகியோருக்கு நடைமுறையில் உள்ள அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்த்தப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு ரூ.50-க்கான தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் வரைவோலையும் பிற வகுப்பினருக்கு ரூ.150-க்கான வங்கியின் வரைவோலையும் எடுத்து விண்ணப்பித்த ஆன்லைன் பிரிண்ட் அவுட் மற்றும் உரிய சான்றிதழ்களில் சுய ஒப்பமிட்ட நகல்களுடன் தர்மபுரி தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் நேரில் சமர்ப்பித்து ஒப்புகை சீட்டு பெற்று செல்லலாம்.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க வருகிற 1-ந் தேதி கடைசி நாளாகும். எழுத்துத்தேர்வு 2½ மணிநேரம் நடக்கும். மேற்கண்ட இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவுசீட்டில் குறிப்பிடப்பட்ட தேதி மற்றும் தேர்வு மையத்தில் கலந்து கொண்டு எழுத்து தேர்வு எழுத வேண்டும். தேர்ச்சி பெற்றவர்களில் 5 பேரில் ஒருவர் என்ற விகிதத்தில் நேர்முகத்தேர்வுக்கு அனுப்பபடுவார்கள். இந்த அரிய வாய்ப்பை மாவட்டத்தை சேர்ந்த தகுதிஉடையவர் பயன்படுத்தி கொள்ளுமாறு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ஜெகந்நாதன் தெரிவித்து உள்ளார்.

தமிழக அரசு ஏற்பாடு படித்து வேலையற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க சிறப்பு முகாம்

21.01.2016, சென்னை, 
சென்னையில் படித்து வேலையற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க தமிழக அரசு சார்பில் சிறப்பு முகாம் இன்று தொடங்குகிறது.

கடன் வழங்கும் திட்டம்
சென்னை கலெக்டர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் குறுந்தொழில்களுக்கு 25 சதவீத மூலதன மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்படி, ஆண்டுக்கு 5 ஆயிரம் இளைஞர்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் உள்ள தகுதியான இளைஞர்கள் அனைவருக்கும் நிர்ணயிக்கப்பட்ட பயிற்சியில் இருந்து விலக்கு அளித்து 25 சதவீத மூலதன மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

திட்டத்தின் மதிப்பில் 25 சதவீதம் அரசு மானியத்துடன் ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம் மற்றும் ரூ.1 லட்சம் வரை முறையே உற்பத்தி, சேவை, வியாபார தொழில் தொடங்கிட கடன் வழங்கப்படுகிறது.

இதில், முதலீட்டாளரின் பங்கு பொதுப் பிரிவினருக்கு 10 சதவீதமும், சிறப்பு பிரிவினருக்கு(பட்டியல் இனம், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் படைவீரர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள்) 5 சதவீதமும் ஆகும்.

3 இடங்களில் நடக்கிறது
முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ள சிறப்பு திட்டத்தின் கீழ், சென்னையில் இளைஞர்கள் தொழில் தேர்வு சிறப்பு முகாம் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது:-

* சென்னை கலெக்டர் அலுவலகம் கூட்ட அரங்கில் இன்று(வெள்ளிக்கிழமை) தண்டையார்பேட்டை, புரசைவாக்கம் தாலுகாவுக்கும், நாளை(சனிக்கிழமை) பெரம்பூர், அயனாவரம் தாலுகாவுக்கும் நடக்கிறது.

* சென்னை கிண்டி தொழில் வணிகத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் 25-ந்தேதி, எழும்பூர், அமைந்தகரை தாலுகாவுக்கும், 27-ந்தேதி மயிலாப்பூர், வேளச்சேரி தாலுகாவுக்கும் நடக்கிறது.

* சென்னை கிண்டி தொழில் வணிகத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் 28-ந்தேதி கிண்டி, மாம்பலம் ஆகிய தாலுகாவுக்கு நடக்கிறது.

மேலும் மாவட்டத்தின் அனைத்து பகுதியில் உள்ளவர்களும், இதர தாலுகாக்களில் உள்ளவர்களும் இந்த முகாம்களில் கலந்து கொள்ளலாம். இதுகுறித்த விவரங்களுக்கு மண்டல இணை இயக்குநர், தொழில் வணிகத்துறை அலுவலகத்தை 044-22501620, 22501622 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

வயது, கல்வி தகுதி
சிறப்பு முகாமில் கலந்துகொள்ள 8-ம் வகுப்பு தேர்ச்சி, 18 வயது பூர்த்தி ஆகியவற்றுக்கு சான்றாக பள்ளி-கல்லூரி மாற்றுச்சான்றிதழ் அசல் மற்றும் நகல்கள், முகவரிக்கு குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை அசல் மற்றும் நகல்கள் ஆகியவற்றுடன் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிப்.8 மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம்

21.01.2016
மாற்றுத்திறனாளிகளின் 6 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் சென்னையில் வரும் பிப்ரவரி 8-ம் தேதி மாநிலம் தழுவிய முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பாக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி கூறியதாவது:

கடந்த பல ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகள் பல்வேறு நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறோம். தமிழக அரசு இதுவரை எந்த கோரிக்கையையும் பரிசீலிக்கக் கூட இல்லை. மற்ற மாநிலங்களைப் போல் 40 சதவீத ஊனமுள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவருக் கும் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்க வேண்டும். மாத பராமரிப்புத் தொகையை குறைந்தபட்சம் ரூ.5000/- ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

அரசு மற்றும் அரசு சார்ந்த நிறு வனங்களில் மாற்றுத்திறனாளி களுக்கு சட்டப்படியான 3 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண் டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தமிழக அரசுக்கு கோரிக்கை மனுவை அளித்துள் ளோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வரும் பிப்ரவரி 8-ம் தேதி சென்னை எழிலகம் அருகில் மாநிலம் தழுவிய முற்றுகைப் போராட் டத்தை நடத்துவதென தீர்மானித்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது தேசிய பார்வையற்றோர் சங்க தென்னிந்திய திட்ட இயக்குநர் பி.மனோகரன், மாநிலத் தலைவர் எஸ்.தட்சிணாமூர்த்தி, டிசம்பர்-3 அமைப்பின் மாநிலத் தலைவர் டி.எம்.என்.தீபக், தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் இ.கே.ஜமால் அலி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tuesday, January 19, 2016

ரபேல் நடாலையே அசர வைத்த காது கேளாத டென்னிஸ் வீரர்!



19.01.2016, பிறவியிலிருந்து காதுகள் கேட்கவிட்டாலும், லட்சியத்தை நோக்கிய தனது பயணத்தை தங்குதடையின்றி தொடர்ந்து கொண்டிருக்கிறார் லீ டக் ஹீ.

ஜனவரி 18-ம் தேதி தொடங்கும் கிரான்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்கப் போகிறார், கொரியாவைச் சார்ந்த இந்த 17 வயது இளைஞன். தன்னுடைய பிரச்னையை ஒரு குறையாகவே கருதாத லீ, தனக்கு இது மிகப்பெரிய பலம் என்று சொல்லி நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறார்.



நடாலைக் கவர்ந்தவர்

பிறக்கும்போதிருந்தே காது கேளாத லீக்கு, இரண்டாம் வகுப்பு படிக்கையில்தான் தனக்கு இப்படியொரு பிரச்னை இருக்கிறது என்றே தெரிந்துள்ளது. ஆனாலும் ஒருநாளும் இதைப்பற்றி வருந்தியதில்லையாம் லீ. டென்னிஸ் பேட்டை கையில் எடுத்தது முதல், தன் கவனம் முழுவதையும் டென்னிசின் மீதே செலுத்தியுள்ளார். டென்னிஸ் விளையாட்டில் உலகின் நம்பர்.1 வீரராய் வரவேண்டும் என்பதே லீயின் கனவு. அது மிகவும் கடினம் என்று அறிந்தபோதும் ஒவ்வொரு படியாய் முன்னேறி, தனது லட்சியத்தை அடைய உழைத்து வருகிறார். இதுவரை ஜூனியர் டென்னிஸ் போட்டிகளில் அசத்தி வந்த லீ, தற்போது சீனியர் வீரர்களுக்கு சவால் விட தயாராகிவிட்டார்.

2015-ம் ஆண்டு மட்டும் 7 டென்னிஸ் தொடர்களில் வென்று அசத்தியுள்ளார். ஒற்றையர் தரவரிசையில் ஒரு வருடம் முன்பு 505 வது இடத்திலிருந்த லீ, தனது அபார ஆட்டத்தால் சில மாதங்களிலேயே 272 இடங்கள் முன்னேறி, இன்று 233 வது இடத்தில் இருக்கிறார். இவரது அசாத்திய ஆட்டத்தைப் பார்த்த, 14 முறை கிரான்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற ரபேல் நடால் கூட, “தடைகளை உடைத்து முன்னேறி வரும் லீ டக் ஹீயின் வாழ்க்கை, நாமும் போராட வேண்டும் என்று நமக்குக் கத்துக்கொடுக்கிறது” என்று ட்விட்டரில் அவரைப் புகழ்ந்திருந்தார்.

என்னால் முடியும்

“எனக்கு காது கேளாததை நான் எனது பலவீனமாகப் பார்க்கவில்லை. ஒருவகையில் அது எனக்கு பலம் சேர்க்கிறது. என்னால் எனது ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த முடிகிறது. பார்வையாளர்களோ, எதிர்த்து விளையாடும் வீரர்களோ என்ன சொல்வார்கள் என்று எனக்குக் கேட்காததால், எனக்கு கவனச் சிதறல்கள் இல்லை. உண்மையில் இதை நான் என் பலமாகவே பார்க்கிறேன். என் லட்சியத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. அதனால் நான் ஓயப்போவதில்லை” என்று தனது பேச்சால் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறார் லீ.

லீயின் வாழ்க்கை நடாலுக்கு மட்டுமல்ல ‘நம்மால் முடியாது’ என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் பாடம்.

வெற்றிகள் பல குவித்து லட்சியத்தை அடைய வாழ்த்துக்கள் லீ…!

Sunday, January 17, 2016

Five-year-old wishes to thank PM Modi for help with cochlear implant



17.01.2016, VARANASI: A five-year-old deaf-and-mute boy by birth who is now able to hear and utter few words after a cochlear implant wants to meet Prime Minister Narendra Modi during his visit to the city on January 22 to thank him for the financial help provided for his surgery. His father too aspires to express gratitude to the PM for showing generosity to his hearing-impaired son.

While responding the boy Amreshwar tries to express his feelings mainly through hand gesture and few words. He can now speak words like mummy, papa and Modi too. For fluent speaking, he needs proper speech therapy. Boy's father Vishnu Soni, a poor motorcycle mechanic, said speech therapy is being given to his son at BHU hospital. "We are grateful to the PM for providing a financial assistance of Rs 3 lakh for the cochlear implant surgery," said Soni, a resident of Churamanpur village.

He had applied for financial assistance for the treatment of his deaf and mute son and received a letter in February last year that a sum of Rs 3 lakh from the Prime Minister's National Relief Fund has been remitted to the hospital for the treatment of Amreshwar, said Soni, who runs a small motorcycle repair shop near his village.

Although the grant was a big help, Soni still faced the challenge of arranging the remaining Rs 6 lakh for the surgery. Soni has to feed four sons and a daughter. His firstborn also suffers from thalassemia. Soni, however, received financial support from other sources for the remaining amount. The surgery was done at Sir Sundarlal Hospital, Banaras Hindu University (BHU) in October last year, he said.

Latest CommentIt is good prime minister shri Narendra ModijiRajeev Kumar Maurya

"We wish to express gratitude to the PM For providing financial help when he arrives here to distribute equipment to physically challenged people," Soni told TOI on Friday.

The PM is scheduled to distribute artificial limbs, tricycles and other equipments to around 8000 divyangs (physically challenged people) here at a function to be held in the premises of Diesel Locomotive Works (DLW) on January 22. It is poised to be the biggest such event which might make it to the Guinness Book of World Records. Artificial Limbs Manufacturing Corporation of India (ALIMCO) will also hold a registration-examination camp for divyangs under the scheme of Assistance to Disabled Persons for Purchase/Fitting of AIDS/Appliances (ADIP) in the DLW premises on Saturday for those who were unable to get themselves registered in earlier camps.

Aww! Priceless reaction of deaf baby hearing his mom’s voice for the first time



Toooooo Adorable
Posted by Josh Paler Lin on Tuesday, September 22, 2015

You will have to try not to cry watching this adorable video of an infant hearing for the first time.

You will have to try not to cry watching this adorable video of an infant hearing for the first time. The parents of a deaf baby boy from Australia have shared a beautifully memorable video of their son. They have shared with the world one of the most overwhelming moment of their life, when their son heard their voices for the first time.

The parents of Lachlan Lever were not really anticipating this overwhelming video, until they went to get their child a hearing aid to correct his impaired hearing. The Australian parent’s child was diagnosed with moderate to severe hearing loss right after birth. But when the baby turned seven weeks old, he was fitted with hearing aids for the first time. This video is the first reaction of the baby after using hearing aids and listening to his parents voice for the first time.

Toby and Michelle captured the amazing video of their child’s overwhelming reaction and shared it with everyone. The touching video shows the baby breaking into the most adorable smile and blinking confused, until the baby figures out its the parents voice! This happened in the year 2012, but only recently shared online. Watch the video below, it is indeed a lot to take in for the baby.

Universal ID for all Divyang within 2 years

16.01.2016, VARANASI: Union social justice and empowerment minister Thawar Chand Gehlot announced to provide universal identity cards to all Divyangs (physically challenged persons) in the country within two years. The German company engaged in manufacturing electronic limbs will initiate the supply by next year.

Talking to TOI here on Saturday Gehlot said, "High turnout of physically-challenged people during camps of ministry for equipment distribution so far hints that their number is higher than the figure of 2.68 crore mentioned in Census 2011. To know the actual number of physically challenged people, my ministry has launched a fresh survey. We presume that the figure of physically challenged people may cross the mark of 3.5 crores with the completion of this survey."

With the launching of this survey, he said, the work on providing universal ID to physically challenged people had also been started by the ministry. "We expect that all physically challenged people of India will have their universal ID within two years. This universal ID has been introduced for such people by keeping their problems in view. At present the physically-challenged people get a certificate from district administration, which is not acknowledged even in neighbouring district or state to provide sanctioned benefits to them. The universal ID will solve the problem as it will be acceptable across the country", added Gehlot, who was in the city to review the preparations for ministry's proposed event of equipment distribution among 9000 physically challenged persons by the Prime Minister Narendra Modi at DLW ground on January 22.

Gehlot said, "Encouraged by the results of the drive carried out by the government last year for cochlear implant among deaf and dump children the ministry has engaged a German company to manufacture electronic limbs with a Kanpur based company. Distribution of electronic limbs, which is needed for about 80% physically challenged persons, will also be started within two years to enable physically challenged persons to lead life like normal people."

He said that the ministry has distributed equipment of Rs 3.50 crores through 350 camps in past one and half years. Out of these 350 camps, he said, 95 camps were in mega category as over 1,000 physically challenged persons were benefited in each of these camps.

Gehlot claimed, the proposed camp in which PM will distribute equipment among 9,000 physically challenged persons would be the biggest camp in the world.

Saturday, January 16, 2016

மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இடஒதுக்கீடு ஐகோர்ட்டு உத்தரவு

15.01.2016, சென்னை,
கோவையில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி உள்ளது. அங்கு காலியாக இருந்த கிளார்க் பணியிடத்தை வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் கணேசமூர்த்தி என்ற மாற்றுத்திறனாளி வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டின்படி பணியிடங்களை வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என்று கூறி, பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர், உயர்கல்வித்துறை செயலாளர், சம்பந்தப்பட்ட கலைக்கல்லூரி ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை கணேசமூர்த்தி தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி மணிக்குமார் விசாரித்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரருக்கு பணியிடம் வழங்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து வழக்கை முடித்து வைத்த நீதிபதி, கல்வி நிறுவனங்கள், அரசுப் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு, மாற்றுத் திறனாளி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அரசு பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில் வாய்ப்பு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.

Important News to Tamil Nadu Government Employees for Deaf



Thursday, January 14, 2016

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை: மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம், 14 January 2016
வேலைவாய்ப்பற்ற மாற்றுத் திறனாளி இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், எஸ்.எஸ்.எல்.சி வரை படித்தவர்களுக்கு மாதம் ரூ. 600-ம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 750-ம், பட்டதாரி, முதுநிலை பட்டதாரிகளுக்கு ரூ. 1,000-மும் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்தபட்சம் ஓராண்டுக்கும் மேற்பட்டவர்கள் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான அதிகபட்ச வயது வரம்பு- 45. இதர வகுப்பினருக்கான வயது வரம்பு- 40.

தகுதியானவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன், உரிய சான்றிதழ்கள், வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவற்றை இணைத்து வருகிற 29-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குக் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Railways’ showcase coach a hurdle for disabled

13.01.2016,
NEW DELHI: The railways has put on display a "model disabled-friendly" coach on which no mobility-impaired person can get into without help. The coach has no ramp or hydraulic lift to facilitate boarding and alighting.

The reason given for the omission is even more shocking, according to activists who visited the Safdarjung station where the coach is being displayed. A railway official apparently told them no such facility was being provided because, on one occasion, the train had left without the ramps being removed.

The activists, from the National Centre for Promotion of Employment for Disabled People in India, described the coach as an example of "further discrimination" against the disabled. The model rake was inspected by railway minister Suresh Prabhu on Monday.

The much publicized coaches have also been criticised for not having braille and other signages for visually and hearing impaired travellers.

Terming the changes introduced in the coach as superficial, disabled rights' groups said that introduction of a single such coach in a train further discriminated against persons with disalibilities by excluding them from other passegners.

In their report, the activists who visited the model coach on Tuesday said they were told that "only refurbishing of interiors" had been done on the bogie. Hence measurement wise it was the same as other coaches.

According to Javed Abidi, convener, Disabled Right's Group, the decade-old problem of getting inside the train on wheelchairs remained unaddressed. "About 95% of railway coaches are of a particular design and their doors are not wide enough for wheelchair access," he said.

"The primary issue is getting on to the coach from the platform. I have travelled in America, Europe, Malayasia and South Africa. They have portable hydraulic lifts, which are just platforms that can be raised to the level of the train's floor. It is a very dignified and safe way for a person with disabilities to board and alight from the train. Why we are not able to do that in India?" asked Abidi.

Activists such as Abidi, paralympic athelete Pradeep Raj and Dr Satendra Singh, coordinator, enabling unit, University College of Medical Sciences, also questioned the idea of have one or two exclusive coaches for the disabled in a train, terming this as "apartheid" against the disabled.

The Prime Minister in Mann Ki Baat had categorically called for better access for the disabled. Even railway minister Suresh Prabhu had asked officials to look into the proposals made by NCPEDP after his meeting with activists on September 1, 2015.

"The officials are dragging their feet," said Abidi. "This is no longer be acceptable to us. Why not make all coaches accessible and give the disabled the option travelling in various classes such as sleeper, three-tier AC, two-tier etc? We know all coaches cannot be made accessible overnight, but it can be done in a staggered manner."

Mega Disabled Persons Examination camp held


13.01.2016, Ujjain : Social Justice and Empowerment Ministry, Government of India, Sevadham Ashram and Kalyan Karoti Lucknow jointly organized a free Disability Examination camp at Panchayati Akhada Bada Udasin Nirwan Nadi Darwaza, here on Tuesday.

Different stalls were setup at the premises of Panchayati Akhada to examine the disabled persons. Specialist doctors served the patients after the examination. The selected disabled persons will be distributed prosthesis during a camp on February 14. Mehant Maheshwardas told that the service to humanity is equal to the service to the God. Disabled persons face difficulty in practicing their routine work.

1249 disabled persons underwent the examination. 744 physically disabled, 194 deaf and dumb, 51 visually challenged and 206 were mentally retarded. 495 disabled persons who were selected at the camp will be given equipments during the camp on February 14.

Wednesday, January 13, 2016

காது கேட்காத குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை


11.01.2016
தனது குழந்தைகளுக்கு காது கேட்காததை அடுத்து, குழந்தைகளுடன் தானும் கிணற்றில் குதித்து தாய் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டையில் உள்ள இந்திரா நகரை சேர்ந்த விவசாயி செல்வராஜ் (38). இவரது மனைவி கலைச்செல்வி (32). இவர்களுக்கு கவிப்பிரபா (13), நவீனா (7) என்று இரு பெண் குழந்தைகளும், பத்து மாதத்தில் குகன் என்ற ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.

நவீனாவுக்கு காது கேட்கும் திறன் குறைபாடு இருந்தது. கோவை தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தனர். அதேபோல, பத்து மாத குழந்தை குகனுக்கும், காது கேட்கும் திறன் குறைபாடு இருப்பது, சில நாட்களுக்கு முன் தெரியவந்தது.

குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடு குறித்து, கலைச்செல்வி தொடர்ந்து கவலையுற்று வந்துள்ளார். இதனால், மேலும் விரக்தியடைந்த கலைச்செல்வி, நேற்று காது குறைபாடுள்ள இரு குழந்தையும் தன்னுடைய உடலுடன் சேர்த்துக் கட்டிக்கொண்டு, கயிற்றின் இன்னொரு முனையில் பெரிய கல்லையும் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்துள்ளார்.

இந்நிலையில், அதிகாலையில் தூங்கி எழுந்த மூத்த மகள் கவிப்பிரபா, தனது தாய், தங்கை, தம்பியை காணாததைக்கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அருகில் தூங்கிக்கொண்டிருந்த தந்தையை எழுப்பியுள்ளார்.

கதவை திறந்து பார்த்தபொழுது வீட்டின் வெளிப்பக்கக் கதவு பூட்டியிருந்ததால், அருகில் உள்ள ஒருவருக்கு தொலைபேசியில் அழைத்து திறக்கச் சொல்லியுள்ளார். பின்னர், கலைச்செல்வியையும் குழந்தைகளையும் தேடிப்பார்த்துள்ளனர்.

எங்கும் காணாததால், மீண்டும் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கலைச்செல்வி எழுதி வைத்திருந்த கடிதம் இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த செல்வராஜ, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் பேரில், உடுமலை காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் கிணற்றிலிருந்து, சடலங்களை மீட்டு, உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இரவுக் காவலர், துப்புரவாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

தருமபுரி, 11 January 2016
தருமபுரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களில் காலியாக உள்ள இரவுக் காவலர், துப்புரவாளர், ஆயா பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒரு இரவுக் காவலர் பணியிடம் காலியாக உள்ளது. அரசு காதுகேளாதோர் மேல்நிலைப் பள்ளியில் இரவுக் காவலர் மற்றும் துப்புரவாளர் பணியிடம் ஒன்றும், இரவுக் காவலர் பணியிடம் ஒன்றும், ஆயா பணியிடங்கள் மூன்றும் காலியாக உள்ளன.

மேலும், அரசுப் பார்வையற்றோர் பள்ளியில் இரவுக் காவலர் மற்றும் துப்புரவாளர் பணியிடம் ஒன்றும், ஆயா பணியிடங்கள் நான்கும் காலியாக உள்ளன. தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

அனைத்துப் பணியிடங்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

விண்ணப்பிக்க வருகிற 20-ஆம் தேதி கடைசி நாளாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.