FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, January 30, 2016

கதை சொல்லிகள் இல்லை: பேச்சுத்திறன் இழக்கும் பிஞ்சுகள்

26.01.2016, கோவை : செவித்திறன் குறைபாடு இல்லாத நிலையிலும், மன அழுத்தம், தனிமை, கதை சொல்லிகள் இல்லாத காரணங்களால், பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்காமல், 60 சதவீத குழந்தைகள், உச்சரிப்பு திறனை இழப்பதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.

குழந்தை பிறந்து, மூன்று மாத்திலே சத்தத்தை கேட்கும் திறனை பெறுகிறது. ஆறு மாதத்தில், முணுமுணுப்பாக வார்த்தைகளை உச்சரிக்கவும், ஒரு வயதில் வார்த்தைகளை தெளிவாக பேசி, பின் சொற்றொடராக உரையாட முனைவது வழக்கம்.

இந்த ஆரம்பகட்ட நிகழ்வுகள், தாமதமாக நடந்தாலோ அல்லது எவ்வித சத்தத்திற்கும் பதிலளிக்காமல் இருப்பதை தான், குறைபாட்டுக்கான முதல் அறிகுறியாக கருத வேண்டும். செவித்திறன் பாதித்த குழந்தை, பேச முனையாமல், சைகையை மட்டுமே நாடும்.

இந்த குறைபாடுள்ள குழந்தைகளின் கேட்கும் திறனை பொறுத்து, குணமாக்க முடியும். இதுபோன்ற பாதிப்புள்ள குழந்தைகளுக்காகவே, கலெக்டர் அலுவலக வளாகத்தினுள் செயல்படும், மாற்றுத்திறனளிகள் நலத்துறை அலுவலகத்தினுள், காது கேளாத குழந்தைகளுக்கான ஆரம்பநிலை ஆய்வு மையம் செயல்படுகிறது.

இங்கு, எட்டு விநாடிக்குள் கேட்கும் திறன் பரிசோதித்து, தகவல் அளிக்கும் அதிநவீன கருவிகள் உள்ளன. இதுதவிர, அரசு மருத்துவமனை உதவியோடும் ஆரம்ப பரிசோதனை செய்தும், சிகிச்சை அளிக்கப்படுகிறது. தெளிவற்ற உச்சரிப்பு, திக்குவாய், பிளவுபட்ட உதடுகளால் உச்சரிப்பில் சிரமம், நாட்பட்ட பேச்சு குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, தொடர் பயிற்சிகள் அளிக்க வேண்டியது அவசியம்.

ஆனால், வேலைப்பளு, கூட்டுக்குடும்ப பிளவு உள்ளிட்ட பல காரணங்களால், 80 சதவீத பெற்றோர், சிகிச்சைக்கு ஒத்துழைப்பதில்லை.

மேலும், கூட்டு குடும்பத்தில், கதை சொல்லிகள் எனும் மூத்தோர் இருப்பதால், குழந்தைகள் அதிக உரையாடலை கேட்கவும், பதிலளிக்கவும் வாய்ப்பு இருந்தது. இந்நிலை தற்போது குறைந்து வருவதாலும், பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால், மன அழுத்தம், தனிமை, பேச வாய்ப்பின்மை உள்ளிட்ட காரணங்களாலே, 60 சதவீத குழந்தைகள் எவ்வித செவித்திறன் கோளாறுகளும் இல்லாத நிலையிலும், வார்த்தைகளை உச்சரிக்க கூட திணறுவதாக கூறப்படுகிறது.

இதற்கு, குழந்தைகளுடன் பேசும் நேரத்தை அதிகப்படுத்துவதோடு, சில எளிய பயிற்சிகளை அளித்தாலே போதுமானது. பெரும்பாலும், இதுபோன்ற குறைபாட்டை, பள்ளி செல்லும் வயதில் அறிந்து பின், சிகிச்சைக்கு வருவோரே அதிகம்.

ஒலியியல் துறை அதிகாரி ஸ்வர்ணபவானி கூறுகையில்,''பேச்சு பயிற்சிக்காக வரும் குழந்தைகளின் மனநிலைக்கு தகுந்தபடி, மையத்தில் வரைபடங்கள், பழங்கள், காய்கறிகள் அடங்கிய சார்ட்டுகள், கண்ணாடி முன் நின்று உச்சரிக்க வசதிகள், அதிநவீன கருவிகள் உள்ளன.

குறைபாடுடன் வரும் குழந்தைகளுக்கு, சிகிச்சையும், பயிற்சியும் மட்டுமே குணமாக்கும் மருந்தாகும். ஆனால், பேச வாய்ப்பு கிடைக்காததால், உச்சரிக்க தடுமாறுதல், மாற்று நபர்களை கண்டு மிரளும் குழந்தைகளுக்கு, பெற்றோரின் கவனிப்பு மிக அவசியம். சமூக சூழலில், மற்றவர்களோடு உரையாடவும், பேசவும், குழந்தைகள் பேசுவதை கவனிக்கவும், நேரம் ஒதுக்குவது மிக அவசியம்,'' என்றார்.

No comments:

Post a Comment