FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Saturday, January 30, 2016

கதை சொல்லிகள் இல்லை: பேச்சுத்திறன் இழக்கும் பிஞ்சுகள்

26.01.2016, கோவை : செவித்திறன் குறைபாடு இல்லாத நிலையிலும், மன அழுத்தம், தனிமை, கதை சொல்லிகள் இல்லாத காரணங்களால், பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்காமல், 60 சதவீத குழந்தைகள், உச்சரிப்பு திறனை இழப்பதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.

குழந்தை பிறந்து, மூன்று மாத்திலே சத்தத்தை கேட்கும் திறனை பெறுகிறது. ஆறு மாதத்தில், முணுமுணுப்பாக வார்த்தைகளை உச்சரிக்கவும், ஒரு வயதில் வார்த்தைகளை தெளிவாக பேசி, பின் சொற்றொடராக உரையாட முனைவது வழக்கம்.

இந்த ஆரம்பகட்ட நிகழ்வுகள், தாமதமாக நடந்தாலோ அல்லது எவ்வித சத்தத்திற்கும் பதிலளிக்காமல் இருப்பதை தான், குறைபாட்டுக்கான முதல் அறிகுறியாக கருத வேண்டும். செவித்திறன் பாதித்த குழந்தை, பேச முனையாமல், சைகையை மட்டுமே நாடும்.

இந்த குறைபாடுள்ள குழந்தைகளின் கேட்கும் திறனை பொறுத்து, குணமாக்க முடியும். இதுபோன்ற பாதிப்புள்ள குழந்தைகளுக்காகவே, கலெக்டர் அலுவலக வளாகத்தினுள் செயல்படும், மாற்றுத்திறனளிகள் நலத்துறை அலுவலகத்தினுள், காது கேளாத குழந்தைகளுக்கான ஆரம்பநிலை ஆய்வு மையம் செயல்படுகிறது.

இங்கு, எட்டு விநாடிக்குள் கேட்கும் திறன் பரிசோதித்து, தகவல் அளிக்கும் அதிநவீன கருவிகள் உள்ளன. இதுதவிர, அரசு மருத்துவமனை உதவியோடும் ஆரம்ப பரிசோதனை செய்தும், சிகிச்சை அளிக்கப்படுகிறது. தெளிவற்ற உச்சரிப்பு, திக்குவாய், பிளவுபட்ட உதடுகளால் உச்சரிப்பில் சிரமம், நாட்பட்ட பேச்சு குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, தொடர் பயிற்சிகள் அளிக்க வேண்டியது அவசியம்.

ஆனால், வேலைப்பளு, கூட்டுக்குடும்ப பிளவு உள்ளிட்ட பல காரணங்களால், 80 சதவீத பெற்றோர், சிகிச்சைக்கு ஒத்துழைப்பதில்லை.

மேலும், கூட்டு குடும்பத்தில், கதை சொல்லிகள் எனும் மூத்தோர் இருப்பதால், குழந்தைகள் அதிக உரையாடலை கேட்கவும், பதிலளிக்கவும் வாய்ப்பு இருந்தது. இந்நிலை தற்போது குறைந்து வருவதாலும், பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால், மன அழுத்தம், தனிமை, பேச வாய்ப்பின்மை உள்ளிட்ட காரணங்களாலே, 60 சதவீத குழந்தைகள் எவ்வித செவித்திறன் கோளாறுகளும் இல்லாத நிலையிலும், வார்த்தைகளை உச்சரிக்க கூட திணறுவதாக கூறப்படுகிறது.

இதற்கு, குழந்தைகளுடன் பேசும் நேரத்தை அதிகப்படுத்துவதோடு, சில எளிய பயிற்சிகளை அளித்தாலே போதுமானது. பெரும்பாலும், இதுபோன்ற குறைபாட்டை, பள்ளி செல்லும் வயதில் அறிந்து பின், சிகிச்சைக்கு வருவோரே அதிகம்.

ஒலியியல் துறை அதிகாரி ஸ்வர்ணபவானி கூறுகையில்,''பேச்சு பயிற்சிக்காக வரும் குழந்தைகளின் மனநிலைக்கு தகுந்தபடி, மையத்தில் வரைபடங்கள், பழங்கள், காய்கறிகள் அடங்கிய சார்ட்டுகள், கண்ணாடி முன் நின்று உச்சரிக்க வசதிகள், அதிநவீன கருவிகள் உள்ளன.

குறைபாடுடன் வரும் குழந்தைகளுக்கு, சிகிச்சையும், பயிற்சியும் மட்டுமே குணமாக்கும் மருந்தாகும். ஆனால், பேச வாய்ப்பு கிடைக்காததால், உச்சரிக்க தடுமாறுதல், மாற்று நபர்களை கண்டு மிரளும் குழந்தைகளுக்கு, பெற்றோரின் கவனிப்பு மிக அவசியம். சமூக சூழலில், மற்றவர்களோடு உரையாடவும், பேசவும், குழந்தைகள் பேசுவதை கவனிக்கவும், நேரம் ஒதுக்குவது மிக அவசியம்,'' என்றார்.

No comments:

Post a Comment