FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, January 30, 2016

கதை சொல்லிகள் இல்லை: பேச்சுத்திறன் இழக்கும் பிஞ்சுகள்

26.01.2016, கோவை : செவித்திறன் குறைபாடு இல்லாத நிலையிலும், மன அழுத்தம், தனிமை, கதை சொல்லிகள் இல்லாத காரணங்களால், பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்காமல், 60 சதவீத குழந்தைகள், உச்சரிப்பு திறனை இழப்பதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.

குழந்தை பிறந்து, மூன்று மாத்திலே சத்தத்தை கேட்கும் திறனை பெறுகிறது. ஆறு மாதத்தில், முணுமுணுப்பாக வார்த்தைகளை உச்சரிக்கவும், ஒரு வயதில் வார்த்தைகளை தெளிவாக பேசி, பின் சொற்றொடராக உரையாட முனைவது வழக்கம்.

இந்த ஆரம்பகட்ட நிகழ்வுகள், தாமதமாக நடந்தாலோ அல்லது எவ்வித சத்தத்திற்கும் பதிலளிக்காமல் இருப்பதை தான், குறைபாட்டுக்கான முதல் அறிகுறியாக கருத வேண்டும். செவித்திறன் பாதித்த குழந்தை, பேச முனையாமல், சைகையை மட்டுமே நாடும்.

இந்த குறைபாடுள்ள குழந்தைகளின் கேட்கும் திறனை பொறுத்து, குணமாக்க முடியும். இதுபோன்ற பாதிப்புள்ள குழந்தைகளுக்காகவே, கலெக்டர் அலுவலக வளாகத்தினுள் செயல்படும், மாற்றுத்திறனளிகள் நலத்துறை அலுவலகத்தினுள், காது கேளாத குழந்தைகளுக்கான ஆரம்பநிலை ஆய்வு மையம் செயல்படுகிறது.

இங்கு, எட்டு விநாடிக்குள் கேட்கும் திறன் பரிசோதித்து, தகவல் அளிக்கும் அதிநவீன கருவிகள் உள்ளன. இதுதவிர, அரசு மருத்துவமனை உதவியோடும் ஆரம்ப பரிசோதனை செய்தும், சிகிச்சை அளிக்கப்படுகிறது. தெளிவற்ற உச்சரிப்பு, திக்குவாய், பிளவுபட்ட உதடுகளால் உச்சரிப்பில் சிரமம், நாட்பட்ட பேச்சு குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, தொடர் பயிற்சிகள் அளிக்க வேண்டியது அவசியம்.

ஆனால், வேலைப்பளு, கூட்டுக்குடும்ப பிளவு உள்ளிட்ட பல காரணங்களால், 80 சதவீத பெற்றோர், சிகிச்சைக்கு ஒத்துழைப்பதில்லை.

மேலும், கூட்டு குடும்பத்தில், கதை சொல்லிகள் எனும் மூத்தோர் இருப்பதால், குழந்தைகள் அதிக உரையாடலை கேட்கவும், பதிலளிக்கவும் வாய்ப்பு இருந்தது. இந்நிலை தற்போது குறைந்து வருவதாலும், பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால், மன அழுத்தம், தனிமை, பேச வாய்ப்பின்மை உள்ளிட்ட காரணங்களாலே, 60 சதவீத குழந்தைகள் எவ்வித செவித்திறன் கோளாறுகளும் இல்லாத நிலையிலும், வார்த்தைகளை உச்சரிக்க கூட திணறுவதாக கூறப்படுகிறது.

இதற்கு, குழந்தைகளுடன் பேசும் நேரத்தை அதிகப்படுத்துவதோடு, சில எளிய பயிற்சிகளை அளித்தாலே போதுமானது. பெரும்பாலும், இதுபோன்ற குறைபாட்டை, பள்ளி செல்லும் வயதில் அறிந்து பின், சிகிச்சைக்கு வருவோரே அதிகம்.

ஒலியியல் துறை அதிகாரி ஸ்வர்ணபவானி கூறுகையில்,''பேச்சு பயிற்சிக்காக வரும் குழந்தைகளின் மனநிலைக்கு தகுந்தபடி, மையத்தில் வரைபடங்கள், பழங்கள், காய்கறிகள் அடங்கிய சார்ட்டுகள், கண்ணாடி முன் நின்று உச்சரிக்க வசதிகள், அதிநவீன கருவிகள் உள்ளன.

குறைபாடுடன் வரும் குழந்தைகளுக்கு, சிகிச்சையும், பயிற்சியும் மட்டுமே குணமாக்கும் மருந்தாகும். ஆனால், பேச வாய்ப்பு கிடைக்காததால், உச்சரிக்க தடுமாறுதல், மாற்று நபர்களை கண்டு மிரளும் குழந்தைகளுக்கு, பெற்றோரின் கவனிப்பு மிக அவசியம். சமூக சூழலில், மற்றவர்களோடு உரையாடவும், பேசவும், குழந்தைகள் பேசுவதை கவனிக்கவும், நேரம் ஒதுக்குவது மிக அவசியம்,'' என்றார்.

No comments:

Post a Comment