FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Sunday, January 3, 2016

பெற்றோருடன் கீதாவை சேர்ப்பேன்! சுஷ்மா சுவராஜ் திட்டவட்டம்

01.01.2016, இந்துார்: சிறு வயதில், எல்லை தாண்டி, பாகிஸ்தான் சென்று, மத்திய அரசின் நடவடிக்கையால், 15 ஆண்டுகளுக்குப் பின், சில மாதங்களுக்கு முன், இந்தியா திரும்பிய, காது கேளாத, வாய் பேச முடியாத, மாற்றுத் திறனாளி கீதாவை, பெற்றோருடன் சேர்த்து வைப்பதாக, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உறுதி அளித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம், இந்துாரைச் சேர்ந்த, தொண்டு நிறுவனம், 18 - 20 வயது இருக்கும் என கூறப்படும் கீதாவை பராமரித்து, திறன் வளர்ப்பு பயிற்சி அளித்து வருகிறது. இந்த அமைப்பின், சைகை மொழிப் பிரிவின் தலைவர், மோனிகா பஞ்சாபி வர்மா கூறியதாவது:இந்துாரில், ஒரு ஓட்டலில் தங்கியிருந்த சுஷ்மா சுவராஜை, கீதா சந்தித்தார். அப்போது, சுஷ்மா சுவராஜ், கீதாவை கட்டித் தழுவி, மகிழ்ச்சி தெரிவித்தார். அதன் பின், அவர், 'எப்பாடு பட்டாவது உன்னை பெற்றோரிடம் சேர்ப்பேன்' என, கீதாவுக்கு உறுதி அளித்தார். கீதா, தன் கையால் நெய்த கம்பளி ஆடையை, அமைச்சரிடம் காட்டி, பாராட்டு பெற்றார்.இவ்வாறு அவர் கூறினார்.அண்மையில், சுஷ்மா சுவராஜ், கீதாவின் சிறு வயது படங்களை, 'டுவிட்டர்' வலைதளத்தில் வெளியிட்டார். அதைக் கண்டு, மத்திய பிரதேசம், ஜபல்பூரைச் சேர்ந்த, அனீஸ் பீ என்பவர், 'என் மகள் தான் கீதா' என கூறி, அதற்கான ஆதாரங்களை, இந்துார் மாவட்ட கலெக்டர் ஆஷிஷ் சிங்கிடம் வழங்கியுள்ளார். 
அத்துடன், கீதாவுக்கு உரிமை கோரும், மேலும் நான்கு குடும்பங்கள் அளித்துள்ள ஆதாரங்களும், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment