FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, January 3, 2016

பெற்றோருடன் கீதாவை சேர்ப்பேன்! சுஷ்மா சுவராஜ் திட்டவட்டம்

01.01.2016, இந்துார்: சிறு வயதில், எல்லை தாண்டி, பாகிஸ்தான் சென்று, மத்திய அரசின் நடவடிக்கையால், 15 ஆண்டுகளுக்குப் பின், சில மாதங்களுக்கு முன், இந்தியா திரும்பிய, காது கேளாத, வாய் பேச முடியாத, மாற்றுத் திறனாளி கீதாவை, பெற்றோருடன் சேர்த்து வைப்பதாக, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உறுதி அளித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம், இந்துாரைச் சேர்ந்த, தொண்டு நிறுவனம், 18 - 20 வயது இருக்கும் என கூறப்படும் கீதாவை பராமரித்து, திறன் வளர்ப்பு பயிற்சி அளித்து வருகிறது. இந்த அமைப்பின், சைகை மொழிப் பிரிவின் தலைவர், மோனிகா பஞ்சாபி வர்மா கூறியதாவது:இந்துாரில், ஒரு ஓட்டலில் தங்கியிருந்த சுஷ்மா சுவராஜை, கீதா சந்தித்தார். அப்போது, சுஷ்மா சுவராஜ், கீதாவை கட்டித் தழுவி, மகிழ்ச்சி தெரிவித்தார். அதன் பின், அவர், 'எப்பாடு பட்டாவது உன்னை பெற்றோரிடம் சேர்ப்பேன்' என, கீதாவுக்கு உறுதி அளித்தார். கீதா, தன் கையால் நெய்த கம்பளி ஆடையை, அமைச்சரிடம் காட்டி, பாராட்டு பெற்றார்.இவ்வாறு அவர் கூறினார்.அண்மையில், சுஷ்மா சுவராஜ், கீதாவின் சிறு வயது படங்களை, 'டுவிட்டர்' வலைதளத்தில் வெளியிட்டார். அதைக் கண்டு, மத்திய பிரதேசம், ஜபல்பூரைச் சேர்ந்த, அனீஸ் பீ என்பவர், 'என் மகள் தான் கீதா' என கூறி, அதற்கான ஆதாரங்களை, இந்துார் மாவட்ட கலெக்டர் ஆஷிஷ் சிங்கிடம் வழங்கியுள்ளார். 
அத்துடன், கீதாவுக்கு உரிமை கோரும், மேலும் நான்கு குடும்பங்கள் அளித்துள்ள ஆதாரங்களும், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment