FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, January 3, 2016

பெற்றோருடன் கீதாவை சேர்ப்பேன்! சுஷ்மா சுவராஜ் திட்டவட்டம்

01.01.2016, இந்துார்: சிறு வயதில், எல்லை தாண்டி, பாகிஸ்தான் சென்று, மத்திய அரசின் நடவடிக்கையால், 15 ஆண்டுகளுக்குப் பின், சில மாதங்களுக்கு முன், இந்தியா திரும்பிய, காது கேளாத, வாய் பேச முடியாத, மாற்றுத் திறனாளி கீதாவை, பெற்றோருடன் சேர்த்து வைப்பதாக, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உறுதி அளித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம், இந்துாரைச் சேர்ந்த, தொண்டு நிறுவனம், 18 - 20 வயது இருக்கும் என கூறப்படும் கீதாவை பராமரித்து, திறன் வளர்ப்பு பயிற்சி அளித்து வருகிறது. இந்த அமைப்பின், சைகை மொழிப் பிரிவின் தலைவர், மோனிகா பஞ்சாபி வர்மா கூறியதாவது:இந்துாரில், ஒரு ஓட்டலில் தங்கியிருந்த சுஷ்மா சுவராஜை, கீதா சந்தித்தார். அப்போது, சுஷ்மா சுவராஜ், கீதாவை கட்டித் தழுவி, மகிழ்ச்சி தெரிவித்தார். அதன் பின், அவர், 'எப்பாடு பட்டாவது உன்னை பெற்றோரிடம் சேர்ப்பேன்' என, கீதாவுக்கு உறுதி அளித்தார். கீதா, தன் கையால் நெய்த கம்பளி ஆடையை, அமைச்சரிடம் காட்டி, பாராட்டு பெற்றார்.இவ்வாறு அவர் கூறினார்.அண்மையில், சுஷ்மா சுவராஜ், கீதாவின் சிறு வயது படங்களை, 'டுவிட்டர்' வலைதளத்தில் வெளியிட்டார். அதைக் கண்டு, மத்திய பிரதேசம், ஜபல்பூரைச் சேர்ந்த, அனீஸ் பீ என்பவர், 'என் மகள் தான் கீதா' என கூறி, அதற்கான ஆதாரங்களை, இந்துார் மாவட்ட கலெக்டர் ஆஷிஷ் சிங்கிடம் வழங்கியுள்ளார். 
அத்துடன், கீதாவுக்கு உரிமை கோரும், மேலும் நான்கு குடும்பங்கள் அளித்துள்ள ஆதாரங்களும், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment