FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Saturday, January 30, 2016

ஐஎஸ்ஐக்கு உளவு பார்த்த காது கேளாத, வாய் பேச முடியாத குஜராத் பிச்சைக்காரர்

27.01.2016, அகமதாபாத்: காது கேட்க, வாய் பேச முடியாத பிச்சைக்காரர் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்காக உளவு பார்த்தது குஜராத் மற்றும் பஞ்சாப் போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்தவர் அஸ்லாம் பதான். காது கேட்க, வாய் பேச முடியாத அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை ராஜ்ஜோட்டில் பிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 14ம் தேதி அவர் பஞ்சாப் மாநிலம் அம்பாலாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை செய்ததில் அவருக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. பதானிடம் இருந்து பைனாகுலர், செல்போன், குஜராத்தில் உள்ள விமானப்படை தளம் உள்ளிட்ட முக்கிய இடங்களின் வரைபடம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பதான் அகமதாபாத்தில் உள்ள ஐஎஸ்ஐ உளவாளிக்கு தகவல் அளித்து வந்துள்ளார். அவர் எப்படி ராஜ்கோட்டில் இருந்து அம்பாலா வந்தார் என்பது போலீசாருக்கு குழப்பமாக உள்ளது. பதானிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போனில் ராஜ்கோட் மற்றும் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்களின் எண்கள் உள்ளன. அந்த எண்கள் ராஜ்கோட் மற்றும் அகமதாபாத்தில் கடை வைத்துள்ளவர்களின் எண்கள். பதானிடம் விசாரணை நடத்த குஜராத்தைச் சேர்ந்த தீவிரவாத தடுப்பு பிரிவு படையினர் பஞ்சாப் சென்றுள்ளனர். காது கேட்க, வாய் பேச முடியாத பிச்சைக்காரரை யாரும் சந்தேகிக்க மாட்டார்கள் என்று ஐஎஸ்ஐ நினைத்துள்ளது.

No comments:

Post a Comment