FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, January 2, 2016

தொழில்தொடங்குவதற்கு தாட்கோ மூலம் கடன்பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஞானசேகரன் தகவல்

 01.01.2016, திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் தாட்கோ மூலம் தொழில் தொடங்க கடன் கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தாட்கோ திட்டங்கள்

ஆதிதிராவிடர்களுக்கு தாட்கோ மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்படுகின்றன. அதன்படி மகளிருக்கு நிலம் வாங்கும் திட்டம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நிலம் மேம்படுத்துதல் திட்டம், தொழில் முனைவோர் திட்டங்கள், பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லறை விற்பனை நிலையம் அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டங்களில் பயன் அடைவோர் 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விற்பனை நிலையம் அமைப்பவர்களுக்கு மட்டும் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

வயது வரம்பு

இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், மருத்துவமனை, மருந்துக்கடை, கண் கண்ணாடியகம், முடநீக்க மையம், ரத்தப்பரிசோதனை நிலையம் அமைக்க 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மருத்துவமனை அமைப்பவர்களின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை இருக்கலாம்,

ஆண்கள் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் கலப்பு (ஆண், பெண்) குழுவினருக்கான சுழல் நிதி மற்றும் பொருளாதார கடனுதவி பெற 18 முதல் 60 வயது வரை இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

முன்னுரிமை

மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதி பெற விருப்பமுள்ள ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள், 40 வயதுக்கு மேற்பட்ட திருமணம் ஆகாத பெண்கள், பெற்றோர் அல்லது பாதுகாவலர் இல்லாத குழந்தைகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். மேலாண்மை இயக்குனர் விருப்புரிமை நிதிக்கு விதவைகள், மாற்றுத்திறனாளிகள், பெற்றோர் அல்லது பாதுகாவலர் இல்லாத குழந்தைகள், எச்.ஜ.வி.யால் பாதித்தவர்கள் மற்றும் குழந்தைகள், திருநங்கைகள், நலிந்த கலைஞர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இந்திய குடிமைப் பணி முதன்மை தேர்வு எழுதுவோர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தொகுதி–1 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நிதி உதவி பெற 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை இருக்கலாம். சட்டப் பட்டதாரிகள் நிதியுதவி பெற 21 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். பட்டயக் கணக்கர், செலவு கணக்கர்களுக்கான நிதி உதவி பெற 25 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானத்துக்கு உச்சவரம்பு இல்லை.

ஆன்லைனில்

எனவே இந்த திட்டங்களில் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் http://application.tahd.com என்ற இணையதள முகவரிக்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். பதிவின்போது குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, சாதிச் சான்று, வருமானச் சான்று, கல்வித்தகுதி, பள்ளி மாற்றுச் சான்றிதழ், வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ஆதார் அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றையும், திட்ட அறிக்கை பெறப்பட்ட தேதி உள்ளிட்டவற்றையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். மகளிர் வேளாண் நிலம் வாங்கும் திட்டத்தில் மூல பத்திரம், விற்பனை உடன்படிக்கை, பத்திரம், வில்லங்க சான்று, சர்வே எண், சிட்டா அடங்கல், நில பத்திரம் மற்றும் நிலம் விற்பவரது சாதிச் சான்று விவரங்கள் அடங்கிய ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேற்கண்டவாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment