FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, January 2, 2016

தொழில்தொடங்குவதற்கு தாட்கோ மூலம் கடன்பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஞானசேகரன் தகவல்

 01.01.2016, திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் தாட்கோ மூலம் தொழில் தொடங்க கடன் கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தாட்கோ திட்டங்கள்

ஆதிதிராவிடர்களுக்கு தாட்கோ மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்படுகின்றன. அதன்படி மகளிருக்கு நிலம் வாங்கும் திட்டம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நிலம் மேம்படுத்துதல் திட்டம், தொழில் முனைவோர் திட்டங்கள், பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லறை விற்பனை நிலையம் அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டங்களில் பயன் அடைவோர் 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விற்பனை நிலையம் அமைப்பவர்களுக்கு மட்டும் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

வயது வரம்பு

இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், மருத்துவமனை, மருந்துக்கடை, கண் கண்ணாடியகம், முடநீக்க மையம், ரத்தப்பரிசோதனை நிலையம் அமைக்க 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மருத்துவமனை அமைப்பவர்களின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை இருக்கலாம்,

ஆண்கள் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் கலப்பு (ஆண், பெண்) குழுவினருக்கான சுழல் நிதி மற்றும் பொருளாதார கடனுதவி பெற 18 முதல் 60 வயது வரை இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

முன்னுரிமை

மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதி பெற விருப்பமுள்ள ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள், 40 வயதுக்கு மேற்பட்ட திருமணம் ஆகாத பெண்கள், பெற்றோர் அல்லது பாதுகாவலர் இல்லாத குழந்தைகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். மேலாண்மை இயக்குனர் விருப்புரிமை நிதிக்கு விதவைகள், மாற்றுத்திறனாளிகள், பெற்றோர் அல்லது பாதுகாவலர் இல்லாத குழந்தைகள், எச்.ஜ.வி.யால் பாதித்தவர்கள் மற்றும் குழந்தைகள், திருநங்கைகள், நலிந்த கலைஞர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இந்திய குடிமைப் பணி முதன்மை தேர்வு எழுதுவோர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தொகுதி–1 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நிதி உதவி பெற 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை இருக்கலாம். சட்டப் பட்டதாரிகள் நிதியுதவி பெற 21 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். பட்டயக் கணக்கர், செலவு கணக்கர்களுக்கான நிதி உதவி பெற 25 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானத்துக்கு உச்சவரம்பு இல்லை.

ஆன்லைனில்

எனவே இந்த திட்டங்களில் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் http://application.tahd.com என்ற இணையதள முகவரிக்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். பதிவின்போது குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, சாதிச் சான்று, வருமானச் சான்று, கல்வித்தகுதி, பள்ளி மாற்றுச் சான்றிதழ், வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ஆதார் அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றையும், திட்ட அறிக்கை பெறப்பட்ட தேதி உள்ளிட்டவற்றையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். மகளிர் வேளாண் நிலம் வாங்கும் திட்டத்தில் மூல பத்திரம், விற்பனை உடன்படிக்கை, பத்திரம், வில்லங்க சான்று, சர்வே எண், சிட்டா அடங்கல், நில பத்திரம் மற்றும் நிலம் விற்பவரது சாதிச் சான்று விவரங்கள் அடங்கிய ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேற்கண்டவாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment