FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Saturday, January 2, 2016

தொழில்தொடங்குவதற்கு தாட்கோ மூலம் கடன்பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஞானசேகரன் தகவல்

 01.01.2016, திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் தாட்கோ மூலம் தொழில் தொடங்க கடன் கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தாட்கோ திட்டங்கள்

ஆதிதிராவிடர்களுக்கு தாட்கோ மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்படுகின்றன. அதன்படி மகளிருக்கு நிலம் வாங்கும் திட்டம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நிலம் மேம்படுத்துதல் திட்டம், தொழில் முனைவோர் திட்டங்கள், பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லறை விற்பனை நிலையம் அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டங்களில் பயன் அடைவோர் 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விற்பனை நிலையம் அமைப்பவர்களுக்கு மட்டும் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

வயது வரம்பு

இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், மருத்துவமனை, மருந்துக்கடை, கண் கண்ணாடியகம், முடநீக்க மையம், ரத்தப்பரிசோதனை நிலையம் அமைக்க 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மருத்துவமனை அமைப்பவர்களின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை இருக்கலாம்,

ஆண்கள் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் கலப்பு (ஆண், பெண்) குழுவினருக்கான சுழல் நிதி மற்றும் பொருளாதார கடனுதவி பெற 18 முதல் 60 வயது வரை இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

முன்னுரிமை

மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதி பெற விருப்பமுள்ள ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள், 40 வயதுக்கு மேற்பட்ட திருமணம் ஆகாத பெண்கள், பெற்றோர் அல்லது பாதுகாவலர் இல்லாத குழந்தைகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். மேலாண்மை இயக்குனர் விருப்புரிமை நிதிக்கு விதவைகள், மாற்றுத்திறனாளிகள், பெற்றோர் அல்லது பாதுகாவலர் இல்லாத குழந்தைகள், எச்.ஜ.வி.யால் பாதித்தவர்கள் மற்றும் குழந்தைகள், திருநங்கைகள், நலிந்த கலைஞர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இந்திய குடிமைப் பணி முதன்மை தேர்வு எழுதுவோர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தொகுதி–1 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நிதி உதவி பெற 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை இருக்கலாம். சட்டப் பட்டதாரிகள் நிதியுதவி பெற 21 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். பட்டயக் கணக்கர், செலவு கணக்கர்களுக்கான நிதி உதவி பெற 25 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானத்துக்கு உச்சவரம்பு இல்லை.

ஆன்லைனில்

எனவே இந்த திட்டங்களில் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் http://application.tahd.com என்ற இணையதள முகவரிக்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். பதிவின்போது குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, சாதிச் சான்று, வருமானச் சான்று, கல்வித்தகுதி, பள்ளி மாற்றுச் சான்றிதழ், வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ஆதார் அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றையும், திட்ட அறிக்கை பெறப்பட்ட தேதி உள்ளிட்டவற்றையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். மகளிர் வேளாண் நிலம் வாங்கும் திட்டத்தில் மூல பத்திரம், விற்பனை உடன்படிக்கை, பத்திரம், வில்லங்க சான்று, சர்வே எண், சிட்டா அடங்கல், நில பத்திரம் மற்றும் நிலம் விற்பவரது சாதிச் சான்று விவரங்கள் அடங்கிய ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேற்கண்டவாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment