FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, January 2, 2016

தொழில்தொடங்குவதற்கு தாட்கோ மூலம் கடன்பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஞானசேகரன் தகவல்

 01.01.2016, திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் தாட்கோ மூலம் தொழில் தொடங்க கடன் கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தாட்கோ திட்டங்கள்

ஆதிதிராவிடர்களுக்கு தாட்கோ மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்படுகின்றன. அதன்படி மகளிருக்கு நிலம் வாங்கும் திட்டம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நிலம் மேம்படுத்துதல் திட்டம், தொழில் முனைவோர் திட்டங்கள், பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லறை விற்பனை நிலையம் அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டங்களில் பயன் அடைவோர் 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விற்பனை நிலையம் அமைப்பவர்களுக்கு மட்டும் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

வயது வரம்பு

இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், மருத்துவமனை, மருந்துக்கடை, கண் கண்ணாடியகம், முடநீக்க மையம், ரத்தப்பரிசோதனை நிலையம் அமைக்க 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மருத்துவமனை அமைப்பவர்களின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை இருக்கலாம்,

ஆண்கள் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் கலப்பு (ஆண், பெண்) குழுவினருக்கான சுழல் நிதி மற்றும் பொருளாதார கடனுதவி பெற 18 முதல் 60 வயது வரை இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

முன்னுரிமை

மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதி பெற விருப்பமுள்ள ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள், 40 வயதுக்கு மேற்பட்ட திருமணம் ஆகாத பெண்கள், பெற்றோர் அல்லது பாதுகாவலர் இல்லாத குழந்தைகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். மேலாண்மை இயக்குனர் விருப்புரிமை நிதிக்கு விதவைகள், மாற்றுத்திறனாளிகள், பெற்றோர் அல்லது பாதுகாவலர் இல்லாத குழந்தைகள், எச்.ஜ.வி.யால் பாதித்தவர்கள் மற்றும் குழந்தைகள், திருநங்கைகள், நலிந்த கலைஞர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இந்திய குடிமைப் பணி முதன்மை தேர்வு எழுதுவோர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தொகுதி–1 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நிதி உதவி பெற 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை இருக்கலாம். சட்டப் பட்டதாரிகள் நிதியுதவி பெற 21 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். பட்டயக் கணக்கர், செலவு கணக்கர்களுக்கான நிதி உதவி பெற 25 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானத்துக்கு உச்சவரம்பு இல்லை.

ஆன்லைனில்

எனவே இந்த திட்டங்களில் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் http://application.tahd.com என்ற இணையதள முகவரிக்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். பதிவின்போது குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, சாதிச் சான்று, வருமானச் சான்று, கல்வித்தகுதி, பள்ளி மாற்றுச் சான்றிதழ், வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ஆதார் அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றையும், திட்ட அறிக்கை பெறப்பட்ட தேதி உள்ளிட்டவற்றையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். மகளிர் வேளாண் நிலம் வாங்கும் திட்டத்தில் மூல பத்திரம், விற்பனை உடன்படிக்கை, பத்திரம், வில்லங்க சான்று, சர்வே எண், சிட்டா அடங்கல், நில பத்திரம் மற்றும் நிலம் விற்பவரது சாதிச் சான்று விவரங்கள் அடங்கிய ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேற்கண்டவாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment