FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, January 12, 2016

மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் கலெக்டர் தகவல்

12.01.2016, விழுப்புரம்,
மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் விரைவில் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் லட்சுமி தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் தின விழா

விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. இதில் இவர்களுக்கிடையே நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கலெக்டர் லட்சுமி தலைமை தாங்கி பரிசுகளை வழங்கி பேசினார்.

சிறப்பு முகாம்

அப்போது அவர் பேசுகையில், மாற்றுத்திறனாளிகளுக்காக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6–ஐ பூர்த்தி செய்து பெயரை சேர்ப்பதற்காக சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் வாக்களிக்கலாம். வாக்களிப்பது நமது அடிப்படை உரிமை. அதனை கட்டாயம் நமது ஜனநாயக கடமையாக கருதி ஒவ்வொரு குடிமகனும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் உதவி கலெக்டர் (பயிற்சி) ஜெயசீலன், அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் சுப்பிரமணியன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment