FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Tuesday, January 12, 2016

மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் கலெக்டர் தகவல்

12.01.2016, விழுப்புரம்,
மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் விரைவில் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் லட்சுமி தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் தின விழா

விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. இதில் இவர்களுக்கிடையே நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கலெக்டர் லட்சுமி தலைமை தாங்கி பரிசுகளை வழங்கி பேசினார்.

சிறப்பு முகாம்

அப்போது அவர் பேசுகையில், மாற்றுத்திறனாளிகளுக்காக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6–ஐ பூர்த்தி செய்து பெயரை சேர்ப்பதற்காக சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் வாக்களிக்கலாம். வாக்களிப்பது நமது அடிப்படை உரிமை. அதனை கட்டாயம் நமது ஜனநாயக கடமையாக கருதி ஒவ்வொரு குடிமகனும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் உதவி கலெக்டர் (பயிற்சி) ஜெயசீலன், அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் சுப்பிரமணியன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment