FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, January 12, 2016

மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் கலெக்டர் தகவல்

12.01.2016, விழுப்புரம்,
மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் விரைவில் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் லட்சுமி தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் தின விழா

விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. இதில் இவர்களுக்கிடையே நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கலெக்டர் லட்சுமி தலைமை தாங்கி பரிசுகளை வழங்கி பேசினார்.

சிறப்பு முகாம்

அப்போது அவர் பேசுகையில், மாற்றுத்திறனாளிகளுக்காக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6–ஐ பூர்த்தி செய்து பெயரை சேர்ப்பதற்காக சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் வாக்களிக்கலாம். வாக்களிப்பது நமது அடிப்படை உரிமை. அதனை கட்டாயம் நமது ஜனநாயக கடமையாக கருதி ஒவ்வொரு குடிமகனும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் உதவி கலெக்டர் (பயிற்சி) ஜெயசீலன், அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் சுப்பிரமணியன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment