FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, January 7, 2016

அனாதையாக இருந்தால்தான் உதவித்தொகையா? கருணைக்கொலை செய்துவிடுங்கள்


06.01.2016, தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று காத்திருப்போர் போராட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் சேதுபாவாசத்திரம் ஜலீல்முகைதீன், பேராவூரணி லாரன்ஸ்சேவியர், மதுக்கூர் பார்த்தசாரதி, திருவோணம் செந்தில்குமார், பட்டுக்கோட்டை ராவுத்தர், அதிராம்பட்டினம் நகர செயலாளர் செந்தில்குமார், மாவட்ட துணைத்தலைவர் பஹாத்முகம்மது, மாவட்ட பொருளாளர் ஜமால்முகம்மது உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில், அனாதையாக இருந்தால் தான் மாத உதவித்தொகை வழங்கப்படும் என்ற விதிமுறையை நீக்க வேண்டும், அடையாள சான்று வழங்கப்பட்டுள்ள மாற்றத்திறனாளிகள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்.

மாதம் தோறும் குறிப்பிட்ட தேதியில் கோட்டாட்சியர் தலைமையில் தனியாக சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த இடத்திற்கே வந்து மாற்றுத்திறனாளிகளிடம் சார் ஆட்சியர் ராஜசேகர் மனுக்களை பெற்றார். அப்போது அவரிடம் மாற்றுத்திறனாளிகள், ஏற்கனவே நாங்கள் பலமுறை கொடுத்த மனுக்களை வாங்கிச் சென்ற அதிகாரிகள் இதுவரை விசாரணையே செய்யவில்லை. 100 பேருக்கு மேல் மனு கொடுத்தும் 10 பேருக்கு கூட உதவித்தொகை கொடுக்கவில்லை. எங்களிடம் மனு வாங்கும் போதே உங்களுக்கு கிடைக்காது என்று சொல்லிவிட்டால் நாங்கள் அலைய வேண்டியதில்லை. 10 முறை அலைய வேண்டியதிருக்கு. இந்த மாதிரி நிலைமையில் அலைய முடியுமா என்று குமுறினர்.

பேராவூரணி ஒன்றிய செயலாளர் லாரன்ஸ்சேவியர் கூறுகையில், மாற்றுத்திறனாளிகள் அனைவருக்குமே உதவித்தொகை கிடைக்க வேண்டும். எங்களுக்கு உதவித்தொகை தந்து வாழ்வாதாரத்தை உயர்த்துங்கள். இல்லையென்றால் எங்களை கருணைக் கொலை செய்து விடுங்கள் என்றார்.

No comments:

Post a Comment