FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, January 7, 2016

அனாதையாக இருந்தால்தான் உதவித்தொகையா? கருணைக்கொலை செய்துவிடுங்கள்


06.01.2016, தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று காத்திருப்போர் போராட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் சேதுபாவாசத்திரம் ஜலீல்முகைதீன், பேராவூரணி லாரன்ஸ்சேவியர், மதுக்கூர் பார்த்தசாரதி, திருவோணம் செந்தில்குமார், பட்டுக்கோட்டை ராவுத்தர், அதிராம்பட்டினம் நகர செயலாளர் செந்தில்குமார், மாவட்ட துணைத்தலைவர் பஹாத்முகம்மது, மாவட்ட பொருளாளர் ஜமால்முகம்மது உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில், அனாதையாக இருந்தால் தான் மாத உதவித்தொகை வழங்கப்படும் என்ற விதிமுறையை நீக்க வேண்டும், அடையாள சான்று வழங்கப்பட்டுள்ள மாற்றத்திறனாளிகள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்.

மாதம் தோறும் குறிப்பிட்ட தேதியில் கோட்டாட்சியர் தலைமையில் தனியாக சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த இடத்திற்கே வந்து மாற்றுத்திறனாளிகளிடம் சார் ஆட்சியர் ராஜசேகர் மனுக்களை பெற்றார். அப்போது அவரிடம் மாற்றுத்திறனாளிகள், ஏற்கனவே நாங்கள் பலமுறை கொடுத்த மனுக்களை வாங்கிச் சென்ற அதிகாரிகள் இதுவரை விசாரணையே செய்யவில்லை. 100 பேருக்கு மேல் மனு கொடுத்தும் 10 பேருக்கு கூட உதவித்தொகை கொடுக்கவில்லை. எங்களிடம் மனு வாங்கும் போதே உங்களுக்கு கிடைக்காது என்று சொல்லிவிட்டால் நாங்கள் அலைய வேண்டியதில்லை. 10 முறை அலைய வேண்டியதிருக்கு. இந்த மாதிரி நிலைமையில் அலைய முடியுமா என்று குமுறினர்.

பேராவூரணி ஒன்றிய செயலாளர் லாரன்ஸ்சேவியர் கூறுகையில், மாற்றுத்திறனாளிகள் அனைவருக்குமே உதவித்தொகை கிடைக்க வேண்டும். எங்களுக்கு உதவித்தொகை தந்து வாழ்வாதாரத்தை உயர்த்துங்கள். இல்லையென்றால் எங்களை கருணைக் கொலை செய்து விடுங்கள் என்றார்.

No comments:

Post a Comment