FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, January 7, 2016

அனாதையாக இருந்தால்தான் உதவித்தொகையா? கருணைக்கொலை செய்துவிடுங்கள்


06.01.2016, தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று காத்திருப்போர் போராட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் சேதுபாவாசத்திரம் ஜலீல்முகைதீன், பேராவூரணி லாரன்ஸ்சேவியர், மதுக்கூர் பார்த்தசாரதி, திருவோணம் செந்தில்குமார், பட்டுக்கோட்டை ராவுத்தர், அதிராம்பட்டினம் நகர செயலாளர் செந்தில்குமார், மாவட்ட துணைத்தலைவர் பஹாத்முகம்மது, மாவட்ட பொருளாளர் ஜமால்முகம்மது உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில், அனாதையாக இருந்தால் தான் மாத உதவித்தொகை வழங்கப்படும் என்ற விதிமுறையை நீக்க வேண்டும், அடையாள சான்று வழங்கப்பட்டுள்ள மாற்றத்திறனாளிகள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்.

மாதம் தோறும் குறிப்பிட்ட தேதியில் கோட்டாட்சியர் தலைமையில் தனியாக சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த இடத்திற்கே வந்து மாற்றுத்திறனாளிகளிடம் சார் ஆட்சியர் ராஜசேகர் மனுக்களை பெற்றார். அப்போது அவரிடம் மாற்றுத்திறனாளிகள், ஏற்கனவே நாங்கள் பலமுறை கொடுத்த மனுக்களை வாங்கிச் சென்ற அதிகாரிகள் இதுவரை விசாரணையே செய்யவில்லை. 100 பேருக்கு மேல் மனு கொடுத்தும் 10 பேருக்கு கூட உதவித்தொகை கொடுக்கவில்லை. எங்களிடம் மனு வாங்கும் போதே உங்களுக்கு கிடைக்காது என்று சொல்லிவிட்டால் நாங்கள் அலைய வேண்டியதில்லை. 10 முறை அலைய வேண்டியதிருக்கு. இந்த மாதிரி நிலைமையில் அலைய முடியுமா என்று குமுறினர்.

பேராவூரணி ஒன்றிய செயலாளர் லாரன்ஸ்சேவியர் கூறுகையில், மாற்றுத்திறனாளிகள் அனைவருக்குமே உதவித்தொகை கிடைக்க வேண்டும். எங்களுக்கு உதவித்தொகை தந்து வாழ்வாதாரத்தை உயர்த்துங்கள். இல்லையென்றால் எங்களை கருணைக் கொலை செய்து விடுங்கள் என்றார்.

No comments:

Post a Comment