FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Sunday, January 3, 2016

மொபைல்போன் பழுது நீக்கும் பயிற்சி மாற்றுத்திறனாளிகளுக்கு ஆர்வமில்லை


30.12.2015, கோவை :'மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கில், அளிக்கப்படும் மொபைல்போன் பழுது நீக்கும் பயிற்சியில் சேர, இரு ஆண்டுகளாக, யாரும் விண்ணப்பிக்கவில்லை' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகம் முழுவதும், 12 லட்சத்திற்கும் அதிகமான, கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு, அதிக உடல் உழைப்பில்லாத, லாபம் தரக்கூடிய, சுயதொழில் பயிற்சி அளிக்கும் நோக்கில், மொபைல் போன் பழுது நீக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.இது, மூன்று மாத கால டிப்ள மோ பயிற்சியாக, தொழிற்கல்வி இயக்ககத்தின் மூலம், அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் அளிக்கப்படும். பயிற்சி காலத்தில், 300 ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படுகிறது. இதில், 2014-15 ல், 332 பேர் மட்டுமே சேர்ந்து, பயிற்சி பெற்றுள்ளனர்.கோவை மாவட்டத்தில் இருந்து, இரு ஆண்டுகளாக, யாரும் விண்ணப்பிக்கவில்லை. இதற்கு, வங்கி கடன் பெறுவதில் உள்ள சிக்கலே காரணம் என, மாற்றுத்திறனாளிகள் தரப்பில் கூறப்படுகிறது.அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் சதாசிவம் கூறுகையில், ''மொபைல் போன் பழுது நீக்கும் பயிற்சி, வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டம் தான். இருந்தாலும், பயிற்சி முடித்து, தொழில் துவங்க நினைப்போருக்கு, வங்கி கடன் இணைப்பு செய்தால் மட்டுமே, பயனடைய ஏதுவாக இருக்கும்.

''கூட்டுறவு சங்கங்களில், அரசு அதிகாரிகளின், ஜாமின் இருந்தால் மட்டுமே கடன் பெற முடியும். இதற்காக, அலைய வேண்டியுள்ளது. பெரும்பாலான தனியார் மொபைல்போன் நிறுவனங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கொடுப்பதில்லை. இந்த முரண்பாடால், பலர் திட்டத்தில் பங்கேற்க ஆர்வம் காட்டுவதில்லை,'' என்றார்.

No comments:

Post a Comment