FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Sunday, January 3, 2016

மொபைல்போன் பழுது நீக்கும் பயிற்சி மாற்றுத்திறனாளிகளுக்கு ஆர்வமில்லை


30.12.2015, கோவை :'மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கில், அளிக்கப்படும் மொபைல்போன் பழுது நீக்கும் பயிற்சியில் சேர, இரு ஆண்டுகளாக, யாரும் விண்ணப்பிக்கவில்லை' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகம் முழுவதும், 12 லட்சத்திற்கும் அதிகமான, கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு, அதிக உடல் உழைப்பில்லாத, லாபம் தரக்கூடிய, சுயதொழில் பயிற்சி அளிக்கும் நோக்கில், மொபைல் போன் பழுது நீக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.இது, மூன்று மாத கால டிப்ள மோ பயிற்சியாக, தொழிற்கல்வி இயக்ககத்தின் மூலம், அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் அளிக்கப்படும். பயிற்சி காலத்தில், 300 ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படுகிறது. இதில், 2014-15 ல், 332 பேர் மட்டுமே சேர்ந்து, பயிற்சி பெற்றுள்ளனர்.கோவை மாவட்டத்தில் இருந்து, இரு ஆண்டுகளாக, யாரும் விண்ணப்பிக்கவில்லை. இதற்கு, வங்கி கடன் பெறுவதில் உள்ள சிக்கலே காரணம் என, மாற்றுத்திறனாளிகள் தரப்பில் கூறப்படுகிறது.அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் சதாசிவம் கூறுகையில், ''மொபைல் போன் பழுது நீக்கும் பயிற்சி, வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டம் தான். இருந்தாலும், பயிற்சி முடித்து, தொழில் துவங்க நினைப்போருக்கு, வங்கி கடன் இணைப்பு செய்தால் மட்டுமே, பயனடைய ஏதுவாக இருக்கும்.

''கூட்டுறவு சங்கங்களில், அரசு அதிகாரிகளின், ஜாமின் இருந்தால் மட்டுமே கடன் பெற முடியும். இதற்காக, அலைய வேண்டியுள்ளது. பெரும்பாலான தனியார் மொபைல்போன் நிறுவனங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கொடுப்பதில்லை. இந்த முரண்பாடால், பலர் திட்டத்தில் பங்கேற்க ஆர்வம் காட்டுவதில்லை,'' என்றார்.

No comments:

Post a Comment