FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Sunday, January 3, 2016

மொபைல்போன் பழுது நீக்கும் பயிற்சி மாற்றுத்திறனாளிகளுக்கு ஆர்வமில்லை


30.12.2015, கோவை :'மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கில், அளிக்கப்படும் மொபைல்போன் பழுது நீக்கும் பயிற்சியில் சேர, இரு ஆண்டுகளாக, யாரும் விண்ணப்பிக்கவில்லை' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகம் முழுவதும், 12 லட்சத்திற்கும் அதிகமான, கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு, அதிக உடல் உழைப்பில்லாத, லாபம் தரக்கூடிய, சுயதொழில் பயிற்சி அளிக்கும் நோக்கில், மொபைல் போன் பழுது நீக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.இது, மூன்று மாத கால டிப்ள மோ பயிற்சியாக, தொழிற்கல்வி இயக்ககத்தின் மூலம், அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் அளிக்கப்படும். பயிற்சி காலத்தில், 300 ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படுகிறது. இதில், 2014-15 ல், 332 பேர் மட்டுமே சேர்ந்து, பயிற்சி பெற்றுள்ளனர்.கோவை மாவட்டத்தில் இருந்து, இரு ஆண்டுகளாக, யாரும் விண்ணப்பிக்கவில்லை. இதற்கு, வங்கி கடன் பெறுவதில் உள்ள சிக்கலே காரணம் என, மாற்றுத்திறனாளிகள் தரப்பில் கூறப்படுகிறது.அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் சதாசிவம் கூறுகையில், ''மொபைல் போன் பழுது நீக்கும் பயிற்சி, வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டம் தான். இருந்தாலும், பயிற்சி முடித்து, தொழில் துவங்க நினைப்போருக்கு, வங்கி கடன் இணைப்பு செய்தால் மட்டுமே, பயனடைய ஏதுவாக இருக்கும்.

''கூட்டுறவு சங்கங்களில், அரசு அதிகாரிகளின், ஜாமின் இருந்தால் மட்டுமே கடன் பெற முடியும். இதற்காக, அலைய வேண்டியுள்ளது. பெரும்பாலான தனியார் மொபைல்போன் நிறுவனங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கொடுப்பதில்லை. இந்த முரண்பாடால், பலர் திட்டத்தில் பங்கேற்க ஆர்வம் காட்டுவதில்லை,'' என்றார்.

No comments:

Post a Comment