FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, January 3, 2016

மொபைல்போன் பழுது நீக்கும் பயிற்சி மாற்றுத்திறனாளிகளுக்கு ஆர்வமில்லை


30.12.2015, கோவை :'மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கில், அளிக்கப்படும் மொபைல்போன் பழுது நீக்கும் பயிற்சியில் சேர, இரு ஆண்டுகளாக, யாரும் விண்ணப்பிக்கவில்லை' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகம் முழுவதும், 12 லட்சத்திற்கும் அதிகமான, கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு, அதிக உடல் உழைப்பில்லாத, லாபம் தரக்கூடிய, சுயதொழில் பயிற்சி அளிக்கும் நோக்கில், மொபைல் போன் பழுது நீக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.இது, மூன்று மாத கால டிப்ள மோ பயிற்சியாக, தொழிற்கல்வி இயக்ககத்தின் மூலம், அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் அளிக்கப்படும். பயிற்சி காலத்தில், 300 ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படுகிறது. இதில், 2014-15 ல், 332 பேர் மட்டுமே சேர்ந்து, பயிற்சி பெற்றுள்ளனர்.கோவை மாவட்டத்தில் இருந்து, இரு ஆண்டுகளாக, யாரும் விண்ணப்பிக்கவில்லை. இதற்கு, வங்கி கடன் பெறுவதில் உள்ள சிக்கலே காரணம் என, மாற்றுத்திறனாளிகள் தரப்பில் கூறப்படுகிறது.அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் சதாசிவம் கூறுகையில், ''மொபைல் போன் பழுது நீக்கும் பயிற்சி, வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டம் தான். இருந்தாலும், பயிற்சி முடித்து, தொழில் துவங்க நினைப்போருக்கு, வங்கி கடன் இணைப்பு செய்தால் மட்டுமே, பயனடைய ஏதுவாக இருக்கும்.

''கூட்டுறவு சங்கங்களில், அரசு அதிகாரிகளின், ஜாமின் இருந்தால் மட்டுமே கடன் பெற முடியும். இதற்காக, அலைய வேண்டியுள்ளது. பெரும்பாலான தனியார் மொபைல்போன் நிறுவனங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கொடுப்பதில்லை. இந்த முரண்பாடால், பலர் திட்டத்தில் பங்கேற்க ஆர்வம் காட்டுவதில்லை,'' என்றார்.

No comments:

Post a Comment