FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, January 23, 2016

பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு சென்ற மாற்றுத்திறனாளிகள் விபத்தில் சிக்கினர்

வாரணாசி, 22.01.2016, 
பிரதமர் நரேந்திர மோடி தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையட்டி அங்கு சுமார் 8 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு, பிரதமர் மோடி நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சிக்காக சுமார் 42 மாற்றுத்திறனாளிகளை ஏற்றிக்கொண்டு காலையில் ஒரு பஸ், வாரணாசிக்கு சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் கப்சேத்தி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் சென்ற போது சாலையோரத்தில் நின்ற கம்பம் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் 22 மாற்றுத்திறனாளிகள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு வாரணாசியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment