FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Sunday, January 3, 2016

காய்ச்சலால் பேசும் திறன் இழந்த இளம் பெண்ணுக்கு மீண்டும் பேச்சு திறன் வந்தது எப்படி?

திருவிடைமருதூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த கோவிந்தகுடியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் முத்துலெட்சுமி தம்பதி மகள் மகள் துர்கா (23). இவரது கணவர் பிரபாகரன். 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த அக்டோபர் 13ம் தேதி துர்காவிற்கு காய்ச்சலால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. குடும்பத்தினர் அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு துர்காவிற்கு திடீர் என தலை மட்டும் தொடர்ந்து ஆடத் தொடங்கியது. டாக்டர்கள் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டுள்ளதால் தலை ஆடுவதாக கூறினர். இந்நிலையில் நன்றாக பேசிக் கொண்டிருந்த துர்காவிற்கு திடீர் என பேச்சுத்திறன் பறிபோனது.அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படாததாலும், தவறான சிகிச்சையால்தான் இந்நிலை ஏற்பட்டதாக கூறி அவரை அங்கிருந்து புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தலை ஆடுவது நின்றது.

ஆனால் பேச்சுதிறன் மட்டும் வரவில்லை. இதையடுத்து துர்கா வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு பேச்சுத்திறன் வருவதற்கு கோயில், கோயிலாக குடும்பத்தினர் சென்று வந்தனர்.கடந்த 28ம் தேதி துர்கா வீட்டின் அருகே நடந்து சென்றபோது கல்லில் தடுமாறி கீழே விழுந்து தலையில் அடிபட்டது. அப்போது வலியை தாங்க முடியாமல் துர்கா அம்மா என அலறினார். அப்போது முதல் துர்காவிற்கு பேச்சுத் திறன் மீண்டும் வந்தது. இதனையடுத்து துர்கா மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். மருத்துவர்கள் கைவிரித்த நிலையில் துர்காவிற்கு 2 மாதத்திற்கு பிறகு மீண்டும் பேச்சுத் திறன் கிடைத்ததால் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

துர்கா கூறும்போது, ‘இரண்டரை மாதமாக வாய்பேசமுடியாத மாற்றுத்திறனாளி போல இருந்தேன். என் குழந்தை அம்மா, அம்மா என மழலை மொழியில் பேசும். அதற்கு பதில் சொல்ல முடியாமல் நான் தவித்தேன். இதற்கு ஆண்டவன் நல்ல முடிவை தந்தார். டாக்டர்கள் கைவிட்டபோதும் கடவுள் எனக்கு அருள் புரிந்தார்’என்றார்.துர்காவுக்கு திடீரென பேசும் திறன் வந்தது எப்படி என்பது குறித்து முசிறி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரும், காது, மூக்கு, தொண்டை நிபுணருமான செல்வகுமாரிடம் கேட்டபோது அவர் கூறுகையில், ‘அளவுக்கு அதிகமான காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் மனோ ரீதியாக பயந்து போனதால் அவருக்கு பேச்சுத்திறன் பாதிக்கப்பட்டு இருந்திருக்கலாம். அதற்கு உரிய பயிற்சி அளித்தால் மீண்டும் பேச்சு திறன் வந்து விடும். இது தவிர பேச முடியாமல் போன ஒருவர் தலையில் அடிபட்டதால் மீண்டும் தானாக பேச்சுவந்தது என்பது மருத்துவ ரீதியாக 99 சதவீதம் சாத்தியம் இல்லாதது.இது குறித்து சரியான தகவல்களை சொல்ல வேண்டுமானால் அவரது மருத்துவ சிகிச்சை பற்றிய ரிப்போர்ட் பார்த்து சொன்னால்தான் அது சரியாக இருக்கும்’ என்றார்.

No comments:

Post a Comment