FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Sunday, January 3, 2016

காய்ச்சலால் பேசும் திறன் இழந்த இளம் பெண்ணுக்கு மீண்டும் பேச்சு திறன் வந்தது எப்படி?

திருவிடைமருதூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த கோவிந்தகுடியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் முத்துலெட்சுமி தம்பதி மகள் மகள் துர்கா (23). இவரது கணவர் பிரபாகரன். 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த அக்டோபர் 13ம் தேதி துர்காவிற்கு காய்ச்சலால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. குடும்பத்தினர் அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு துர்காவிற்கு திடீர் என தலை மட்டும் தொடர்ந்து ஆடத் தொடங்கியது. டாக்டர்கள் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டுள்ளதால் தலை ஆடுவதாக கூறினர். இந்நிலையில் நன்றாக பேசிக் கொண்டிருந்த துர்காவிற்கு திடீர் என பேச்சுத்திறன் பறிபோனது.அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படாததாலும், தவறான சிகிச்சையால்தான் இந்நிலை ஏற்பட்டதாக கூறி அவரை அங்கிருந்து புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தலை ஆடுவது நின்றது.

ஆனால் பேச்சுதிறன் மட்டும் வரவில்லை. இதையடுத்து துர்கா வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு பேச்சுத்திறன் வருவதற்கு கோயில், கோயிலாக குடும்பத்தினர் சென்று வந்தனர்.கடந்த 28ம் தேதி துர்கா வீட்டின் அருகே நடந்து சென்றபோது கல்லில் தடுமாறி கீழே விழுந்து தலையில் அடிபட்டது. அப்போது வலியை தாங்க முடியாமல் துர்கா அம்மா என அலறினார். அப்போது முதல் துர்காவிற்கு பேச்சுத் திறன் மீண்டும் வந்தது. இதனையடுத்து துர்கா மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். மருத்துவர்கள் கைவிரித்த நிலையில் துர்காவிற்கு 2 மாதத்திற்கு பிறகு மீண்டும் பேச்சுத் திறன் கிடைத்ததால் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

துர்கா கூறும்போது, ‘இரண்டரை மாதமாக வாய்பேசமுடியாத மாற்றுத்திறனாளி போல இருந்தேன். என் குழந்தை அம்மா, அம்மா என மழலை மொழியில் பேசும். அதற்கு பதில் சொல்ல முடியாமல் நான் தவித்தேன். இதற்கு ஆண்டவன் நல்ல முடிவை தந்தார். டாக்டர்கள் கைவிட்டபோதும் கடவுள் எனக்கு அருள் புரிந்தார்’என்றார்.துர்காவுக்கு திடீரென பேசும் திறன் வந்தது எப்படி என்பது குறித்து முசிறி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரும், காது, மூக்கு, தொண்டை நிபுணருமான செல்வகுமாரிடம் கேட்டபோது அவர் கூறுகையில், ‘அளவுக்கு அதிகமான காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் மனோ ரீதியாக பயந்து போனதால் அவருக்கு பேச்சுத்திறன் பாதிக்கப்பட்டு இருந்திருக்கலாம். அதற்கு உரிய பயிற்சி அளித்தால் மீண்டும் பேச்சு திறன் வந்து விடும். இது தவிர பேச முடியாமல் போன ஒருவர் தலையில் அடிபட்டதால் மீண்டும் தானாக பேச்சுவந்தது என்பது மருத்துவ ரீதியாக 99 சதவீதம் சாத்தியம் இல்லாதது.இது குறித்து சரியான தகவல்களை சொல்ல வேண்டுமானால் அவரது மருத்துவ சிகிச்சை பற்றிய ரிப்போர்ட் பார்த்து சொன்னால்தான் அது சரியாக இருக்கும்’ என்றார்.

No comments:

Post a Comment