FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Saturday, January 16, 2016

மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இடஒதுக்கீடு ஐகோர்ட்டு உத்தரவு

15.01.2016, சென்னை,
கோவையில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி உள்ளது. அங்கு காலியாக இருந்த கிளார்க் பணியிடத்தை வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் கணேசமூர்த்தி என்ற மாற்றுத்திறனாளி வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டின்படி பணியிடங்களை வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என்று கூறி, பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர், உயர்கல்வித்துறை செயலாளர், சம்பந்தப்பட்ட கலைக்கல்லூரி ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை கணேசமூர்த்தி தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி மணிக்குமார் விசாரித்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரருக்கு பணியிடம் வழங்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து வழக்கை முடித்து வைத்த நீதிபதி, கல்வி நிறுவனங்கள், அரசுப் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு, மாற்றுத் திறனாளி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அரசு பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில் வாய்ப்பு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment