FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, January 16, 2016

மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இடஒதுக்கீடு ஐகோர்ட்டு உத்தரவு

15.01.2016, சென்னை,
கோவையில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி உள்ளது. அங்கு காலியாக இருந்த கிளார்க் பணியிடத்தை வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் கணேசமூர்த்தி என்ற மாற்றுத்திறனாளி வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டின்படி பணியிடங்களை வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என்று கூறி, பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர், உயர்கல்வித்துறை செயலாளர், சம்பந்தப்பட்ட கலைக்கல்லூரி ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை கணேசமூர்த்தி தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி மணிக்குமார் விசாரித்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரருக்கு பணியிடம் வழங்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து வழக்கை முடித்து வைத்த நீதிபதி, கல்வி நிறுவனங்கள், அரசுப் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு, மாற்றுத் திறனாளி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அரசு பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில் வாய்ப்பு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment