FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, January 9, 2016

"மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்'

கோவை, 08 January 2016
மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என தேசிய பார்வையற்றோர் இணையத்தின் தென்னிந்திய திட்ட இயக்குநர் பி.மனோகரன் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய பார்வையற்றோர் இணையம் சார்பில், லூயி பிரெய்லி பிறந்த நாள் விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடத்திய கணினிப் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா, உலக மாற்றித் திறனாளிகள் தின விழா ஆகிய முப்பெரும் விழா கோவை, உப்பிலிபாளையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, தேசிய பார்வையற்றோர் இணையத்தின் தென்னிந்திய திட்ட இயக்குநர் பி.மனோகரன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் டி.சதாசிவம் வரவேற்றார். இதில், பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடத்திய கணினிப் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் 34 பேருக்கு, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பல்கலைக்கழக மாற்றுத் திறனாளிகள் மையத் தலைவர் பிராபாவதி சான்றிதழ்களை வழங்கினார்.

தொடர்ந்து, பி.மனோகரன் பேசியதாவது:

மத்திய அரசு சார்பில், பார்வையற்றோருக்கு 4,500 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. அரசு அறிவித்தபடி இந்தப் பணியிடங்களுக்கான அழைப்பு இந்த மாதத்துக்குள் வந்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசிடமிருந்து 800 பணியிடங்களுக்கான விளம்பரங்கள் மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கின்றன.

மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான ரயில் பெட்டிகள் உள்ளிட்ட சில உரிமைகளை கர்ப்பிணிப் பெண்கள், முதியோர்கள் பயன்படுத்தலாம் என மத்திய அமைச்சர்கள், பிரதிநிகள் கூறி வருகின்றனர். இதனால், மாற்றுத் திறனாளிகள் அச்சம் அடைந்துள்ளனர். மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் 2014 இதுவரை வெளியிடப்படாமல் கிடப்பிலேயே உள்ளது. இதை விரைவில் வெளியிட வேண்டும் என்றார்.

இதில், டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் க.கணேஷ், தமிழ்நாடு அரசு அலுவலர் கழக திருப்பூர் மாவட்டத் தலைவர் ப.தமிழரசு. கோவை மாவட்டத் தலைவர் அ.கணபதி சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment