FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, January 9, 2016

"மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்'

கோவை, 08 January 2016
மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என தேசிய பார்வையற்றோர் இணையத்தின் தென்னிந்திய திட்ட இயக்குநர் பி.மனோகரன் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய பார்வையற்றோர் இணையம் சார்பில், லூயி பிரெய்லி பிறந்த நாள் விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடத்திய கணினிப் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா, உலக மாற்றித் திறனாளிகள் தின விழா ஆகிய முப்பெரும் விழா கோவை, உப்பிலிபாளையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, தேசிய பார்வையற்றோர் இணையத்தின் தென்னிந்திய திட்ட இயக்குநர் பி.மனோகரன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் டி.சதாசிவம் வரவேற்றார். இதில், பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடத்திய கணினிப் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் 34 பேருக்கு, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பல்கலைக்கழக மாற்றுத் திறனாளிகள் மையத் தலைவர் பிராபாவதி சான்றிதழ்களை வழங்கினார்.

தொடர்ந்து, பி.மனோகரன் பேசியதாவது:

மத்திய அரசு சார்பில், பார்வையற்றோருக்கு 4,500 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. அரசு அறிவித்தபடி இந்தப் பணியிடங்களுக்கான அழைப்பு இந்த மாதத்துக்குள் வந்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசிடமிருந்து 800 பணியிடங்களுக்கான விளம்பரங்கள் மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கின்றன.

மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான ரயில் பெட்டிகள் உள்ளிட்ட சில உரிமைகளை கர்ப்பிணிப் பெண்கள், முதியோர்கள் பயன்படுத்தலாம் என மத்திய அமைச்சர்கள், பிரதிநிகள் கூறி வருகின்றனர். இதனால், மாற்றுத் திறனாளிகள் அச்சம் அடைந்துள்ளனர். மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் 2014 இதுவரை வெளியிடப்படாமல் கிடப்பிலேயே உள்ளது. இதை விரைவில் வெளியிட வேண்டும் என்றார்.

இதில், டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் க.கணேஷ், தமிழ்நாடு அரசு அலுவலர் கழக திருப்பூர் மாவட்டத் தலைவர் ப.தமிழரசு. கோவை மாவட்டத் தலைவர் அ.கணபதி சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment