FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, January 9, 2016

"மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்'

கோவை, 08 January 2016
மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என தேசிய பார்வையற்றோர் இணையத்தின் தென்னிந்திய திட்ட இயக்குநர் பி.மனோகரன் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய பார்வையற்றோர் இணையம் சார்பில், லூயி பிரெய்லி பிறந்த நாள் விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடத்திய கணினிப் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா, உலக மாற்றித் திறனாளிகள் தின விழா ஆகிய முப்பெரும் விழா கோவை, உப்பிலிபாளையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, தேசிய பார்வையற்றோர் இணையத்தின் தென்னிந்திய திட்ட இயக்குநர் பி.மனோகரன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் டி.சதாசிவம் வரவேற்றார். இதில், பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடத்திய கணினிப் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் 34 பேருக்கு, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பல்கலைக்கழக மாற்றுத் திறனாளிகள் மையத் தலைவர் பிராபாவதி சான்றிதழ்களை வழங்கினார்.

தொடர்ந்து, பி.மனோகரன் பேசியதாவது:

மத்திய அரசு சார்பில், பார்வையற்றோருக்கு 4,500 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. அரசு அறிவித்தபடி இந்தப் பணியிடங்களுக்கான அழைப்பு இந்த மாதத்துக்குள் வந்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசிடமிருந்து 800 பணியிடங்களுக்கான விளம்பரங்கள் மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கின்றன.

மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான ரயில் பெட்டிகள் உள்ளிட்ட சில உரிமைகளை கர்ப்பிணிப் பெண்கள், முதியோர்கள் பயன்படுத்தலாம் என மத்திய அமைச்சர்கள், பிரதிநிகள் கூறி வருகின்றனர். இதனால், மாற்றுத் திறனாளிகள் அச்சம் அடைந்துள்ளனர். மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் 2014 இதுவரை வெளியிடப்படாமல் கிடப்பிலேயே உள்ளது. இதை விரைவில் வெளியிட வேண்டும் என்றார்.

இதில், டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் க.கணேஷ், தமிழ்நாடு அரசு அலுவலர் கழக திருப்பூர் மாவட்டத் தலைவர் ப.தமிழரசு. கோவை மாவட்டத் தலைவர் அ.கணபதி சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment