FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, January 22, 2016

பிப்.8 மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம்

21.01.2016
மாற்றுத்திறனாளிகளின் 6 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் சென்னையில் வரும் பிப்ரவரி 8-ம் தேதி மாநிலம் தழுவிய முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பாக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி கூறியதாவது:

கடந்த பல ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகள் பல்வேறு நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறோம். தமிழக அரசு இதுவரை எந்த கோரிக்கையையும் பரிசீலிக்கக் கூட இல்லை. மற்ற மாநிலங்களைப் போல் 40 சதவீத ஊனமுள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவருக் கும் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்க வேண்டும். மாத பராமரிப்புத் தொகையை குறைந்தபட்சம் ரூ.5000/- ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

அரசு மற்றும் அரசு சார்ந்த நிறு வனங்களில் மாற்றுத்திறனாளி களுக்கு சட்டப்படியான 3 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண் டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தமிழக அரசுக்கு கோரிக்கை மனுவை அளித்துள் ளோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வரும் பிப்ரவரி 8-ம் தேதி சென்னை எழிலகம் அருகில் மாநிலம் தழுவிய முற்றுகைப் போராட் டத்தை நடத்துவதென தீர்மானித்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது தேசிய பார்வையற்றோர் சங்க தென்னிந்திய திட்ட இயக்குநர் பி.மனோகரன், மாநிலத் தலைவர் எஸ்.தட்சிணாமூர்த்தி, டிசம்பர்-3 அமைப்பின் மாநிலத் தலைவர் டி.எம்.என்.தீபக், தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் இ.கே.ஜமால் அலி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment