FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Friday, January 22, 2016

பிப்.8 மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம்

21.01.2016
மாற்றுத்திறனாளிகளின் 6 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் சென்னையில் வரும் பிப்ரவரி 8-ம் தேதி மாநிலம் தழுவிய முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பாக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி கூறியதாவது:

கடந்த பல ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகள் பல்வேறு நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறோம். தமிழக அரசு இதுவரை எந்த கோரிக்கையையும் பரிசீலிக்கக் கூட இல்லை. மற்ற மாநிலங்களைப் போல் 40 சதவீத ஊனமுள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவருக் கும் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்க வேண்டும். மாத பராமரிப்புத் தொகையை குறைந்தபட்சம் ரூ.5000/- ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

அரசு மற்றும் அரசு சார்ந்த நிறு வனங்களில் மாற்றுத்திறனாளி களுக்கு சட்டப்படியான 3 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண் டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தமிழக அரசுக்கு கோரிக்கை மனுவை அளித்துள் ளோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வரும் பிப்ரவரி 8-ம் தேதி சென்னை எழிலகம் அருகில் மாநிலம் தழுவிய முற்றுகைப் போராட் டத்தை நடத்துவதென தீர்மானித்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது தேசிய பார்வையற்றோர் சங்க தென்னிந்திய திட்ட இயக்குநர் பி.மனோகரன், மாநிலத் தலைவர் எஸ்.தட்சிணாமூர்த்தி, டிசம்பர்-3 அமைப்பின் மாநிலத் தலைவர் டி.எம்.என்.தீபக், தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் இ.கே.ஜமால் அலி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment