FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, January 22, 2016

பிப்.8 மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம்

21.01.2016
மாற்றுத்திறனாளிகளின் 6 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் சென்னையில் வரும் பிப்ரவரி 8-ம் தேதி மாநிலம் தழுவிய முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பாக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி கூறியதாவது:

கடந்த பல ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகள் பல்வேறு நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறோம். தமிழக அரசு இதுவரை எந்த கோரிக்கையையும் பரிசீலிக்கக் கூட இல்லை. மற்ற மாநிலங்களைப் போல் 40 சதவீத ஊனமுள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவருக் கும் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்க வேண்டும். மாத பராமரிப்புத் தொகையை குறைந்தபட்சம் ரூ.5000/- ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

அரசு மற்றும் அரசு சார்ந்த நிறு வனங்களில் மாற்றுத்திறனாளி களுக்கு சட்டப்படியான 3 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண் டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தமிழக அரசுக்கு கோரிக்கை மனுவை அளித்துள் ளோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வரும் பிப்ரவரி 8-ம் தேதி சென்னை எழிலகம் அருகில் மாநிலம் தழுவிய முற்றுகைப் போராட் டத்தை நடத்துவதென தீர்மானித்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது தேசிய பார்வையற்றோர் சங்க தென்னிந்திய திட்ட இயக்குநர் பி.மனோகரன், மாநிலத் தலைவர் எஸ்.தட்சிணாமூர்த்தி, டிசம்பர்-3 அமைப்பின் மாநிலத் தலைவர் டி.எம்.என்.தீபக், தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் இ.கே.ஜமால் அலி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment