FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Friday, January 22, 2016

பிப்.8 மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம்

21.01.2016
மாற்றுத்திறனாளிகளின் 6 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் சென்னையில் வரும் பிப்ரவரி 8-ம் தேதி மாநிலம் தழுவிய முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பாக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி கூறியதாவது:

கடந்த பல ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகள் பல்வேறு நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறோம். தமிழக அரசு இதுவரை எந்த கோரிக்கையையும் பரிசீலிக்கக் கூட இல்லை. மற்ற மாநிலங்களைப் போல் 40 சதவீத ஊனமுள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவருக் கும் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்க வேண்டும். மாத பராமரிப்புத் தொகையை குறைந்தபட்சம் ரூ.5000/- ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

அரசு மற்றும் அரசு சார்ந்த நிறு வனங்களில் மாற்றுத்திறனாளி களுக்கு சட்டப்படியான 3 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண் டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தமிழக அரசுக்கு கோரிக்கை மனுவை அளித்துள் ளோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வரும் பிப்ரவரி 8-ம் தேதி சென்னை எழிலகம் அருகில் மாநிலம் தழுவிய முற்றுகைப் போராட் டத்தை நடத்துவதென தீர்மானித்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது தேசிய பார்வையற்றோர் சங்க தென்னிந்திய திட்ட இயக்குநர் பி.மனோகரன், மாநிலத் தலைவர் எஸ்.தட்சிணாமூர்த்தி, டிசம்பர்-3 அமைப்பின் மாநிலத் தலைவர் டி.எம்.என்.தீபக், தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் இ.கே.ஜமால் அலி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment