FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, January 7, 2016

இந்திய ரெயில்வே துறையில் 18,252 பணியிடங்கள்

இந்திய ரெயில்வே துறையில் பல்வேறு பணியிடங்களுக்கு 18 ஆயிரத்து 252 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் தென்னக ரெயில்வே மண்டலத்தில் மட்டும் 1464 பணியிடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:–

ரெயில்வே ஆட்தேர்வு வாரியம் ரெயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டு (ஆர்.ஆர்.பி.) என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த அமைப்பு இந்தியாவின் பல்வேறு ரெயில்வே மண்டலங்களிலும் 18 ஆயிரத்து 252 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதில் கூட்ஸ் கார்டு பணிக்கு 7 ஆயிரத்து 591 இடங்களும், அசிஸ்டன்ட் ஸ்டேசன் மாஸ்டர் பணிக்கு 5 ஆயிரத்து 942 பணியிடங்களும் உள்ளன.

இதேபோல கமர்சியல் அப்ரண்டிஸ் பணிக்கு 703 பேரும், டிராபிக் அப்ரண்டிஸ் பணிக்கு 1,645 பேரும், என்கொயரி கம் ரிசர்வேசன் கிளார்க் பணிக்கு 127 பேரும், ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டன்ட் கம் டைப்பிஸ்ட் பணிக்கு 1205 பேரும், சீனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட் பணிக்கு 869 பேரும், டிராபிக் அசிஸ்டன்ட் பணிக்கு 166 பேரும், சீனியர் டைம் கீப்பர் பணிக்கு 4 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணியிடங்களில் தெற்கு மண்டலத்திற்கு உள்பட்ட சென்னையில் 976 பணியிடங்களும், திருவனந்தபுரத்தில் 488 பணியிடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 1–1–2016 தேதியில் 18 முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:

குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. டைப்பிஸ்ட் மற்றும் டைம் கீப்பர் பணிகளுக்கு பட்டப்படிப்புடன் தட்டச்சு தகுதியும் கோரப்பட்டு உள்ளது.

தேர்வு செய்யும் முறை:

கணினி தேர்வு (சி.பி.டி.), தட்டச்சுத் திறன் தேர்வு, ஆப்டிடியூடு தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதி யானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இதை நெட்பேங்கிங் மூலமோ அல்லது ஸ்டேட் வங்கி கிளைகளில் செலான் மூலமாகவோ செலுத்தலாம். எஸ்.சி, எஸ்.டி. பிரிவினர் மற்றும் முன்னாள் படைவீரர்கள், மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள், சிறுபான்மையினர், மூன்றாம்பாலித்தவர்கள், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை:


விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் அந்தந்த மண்டலத்திற்கான ரெயில்வே ஆட்தேர்வு வாரிய இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். தமிழகம் மற்றும் கேரளா பகுதியை உள்ளடக்கிய தெற்கு மண்டல விண்ணப்பதாரர்கள் www.rrbchennai.gov.in என்ற இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 25.1.2016–ந் தேதியாகும்.

விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதள முகவரியில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment