FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Thursday, January 7, 2016

இந்திய ரெயில்வே துறையில் 18,252 பணியிடங்கள்

இந்திய ரெயில்வே துறையில் பல்வேறு பணியிடங்களுக்கு 18 ஆயிரத்து 252 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் தென்னக ரெயில்வே மண்டலத்தில் மட்டும் 1464 பணியிடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:–

ரெயில்வே ஆட்தேர்வு வாரியம் ரெயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டு (ஆர்.ஆர்.பி.) என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த அமைப்பு இந்தியாவின் பல்வேறு ரெயில்வே மண்டலங்களிலும் 18 ஆயிரத்து 252 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதில் கூட்ஸ் கார்டு பணிக்கு 7 ஆயிரத்து 591 இடங்களும், அசிஸ்டன்ட் ஸ்டேசன் மாஸ்டர் பணிக்கு 5 ஆயிரத்து 942 பணியிடங்களும் உள்ளன.

இதேபோல கமர்சியல் அப்ரண்டிஸ் பணிக்கு 703 பேரும், டிராபிக் அப்ரண்டிஸ் பணிக்கு 1,645 பேரும், என்கொயரி கம் ரிசர்வேசன் கிளார்க் பணிக்கு 127 பேரும், ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டன்ட் கம் டைப்பிஸ்ட் பணிக்கு 1205 பேரும், சீனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட் பணிக்கு 869 பேரும், டிராபிக் அசிஸ்டன்ட் பணிக்கு 166 பேரும், சீனியர் டைம் கீப்பர் பணிக்கு 4 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணியிடங்களில் தெற்கு மண்டலத்திற்கு உள்பட்ட சென்னையில் 976 பணியிடங்களும், திருவனந்தபுரத்தில் 488 பணியிடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 1–1–2016 தேதியில் 18 முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:

குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. டைப்பிஸ்ட் மற்றும் டைம் கீப்பர் பணிகளுக்கு பட்டப்படிப்புடன் தட்டச்சு தகுதியும் கோரப்பட்டு உள்ளது.

தேர்வு செய்யும் முறை:

கணினி தேர்வு (சி.பி.டி.), தட்டச்சுத் திறன் தேர்வு, ஆப்டிடியூடு தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதி யானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இதை நெட்பேங்கிங் மூலமோ அல்லது ஸ்டேட் வங்கி கிளைகளில் செலான் மூலமாகவோ செலுத்தலாம். எஸ்.சி, எஸ்.டி. பிரிவினர் மற்றும் முன்னாள் படைவீரர்கள், மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள், சிறுபான்மையினர், மூன்றாம்பாலித்தவர்கள், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை:


விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் அந்தந்த மண்டலத்திற்கான ரெயில்வே ஆட்தேர்வு வாரிய இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். தமிழகம் மற்றும் கேரளா பகுதியை உள்ளடக்கிய தெற்கு மண்டல விண்ணப்பதாரர்கள் www.rrbchennai.gov.in என்ற இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 25.1.2016–ந் தேதியாகும்.

விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதள முகவரியில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment