FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, January 7, 2016

சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

05.01.2016, சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவி தொகையை நிறுத்தப்பட்ட காலத்திற்கும் சேர்த்து வழங்க வேண்டும், அரசு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிதொகை வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை போல வருவாய் துறையிலும் மாதம் ரூ.1500 உதவித்தொகை வழங்க வேண்டும், இலவச வீட்டு மனை பட்டா வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு பேராட்டத்தை நடத்தினர்.

தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை நல சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் பாலகணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தியாகராஜன், மாவட்ட செயலாளர் குமாரசாமி, மாவட்ட உதவி தலைவர் இசக்கி, சி.பி.எம் வட்டார செயலாளர் அசோக்ராஜ், வட்டார தலைவர்கள் பசும்பொன், செல்வமுருகன், மாரியப்பன் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment