FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, January 7, 2016

சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

05.01.2016, சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவி தொகையை நிறுத்தப்பட்ட காலத்திற்கும் சேர்த்து வழங்க வேண்டும், அரசு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிதொகை வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை போல வருவாய் துறையிலும் மாதம் ரூ.1500 உதவித்தொகை வழங்க வேண்டும், இலவச வீட்டு மனை பட்டா வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு பேராட்டத்தை நடத்தினர்.

தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை நல சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் பாலகணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தியாகராஜன், மாவட்ட செயலாளர் குமாரசாமி, மாவட்ட உதவி தலைவர் இசக்கி, சி.பி.எம் வட்டார செயலாளர் அசோக்ராஜ், வட்டார தலைவர்கள் பசும்பொன், செல்வமுருகன், மாரியப்பன் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment