FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, January 12, 2016

கோவையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் ஒரே நாளில் 10,155 பேருக்கு பணி நியமன ஆணை

12.01.2016
தமிழக அரசு சார்பில் கோவையில் நடத்தப்பட்ட தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில், ஒரே நாளில் 10,155 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், திறன் மேம்பாட்டு பயிற்சி பதிவு முகாம் கோவை குனியமுத்தூ ரில் உள்ள  கிருஷ்ணா பொறி யியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பெயர்ப்பதிவு செய்யப் பட்ட பயனாளிகள் தனியார் நிறுவன அரங்குகளுக்கு நேர்காணலுக்கு அனுப்பப்பட்டனர். கலை, அறிவியல், பொறியியல், பட்டயம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், கல்வித் தகுதி, அனுபவம் அடிப்படையில் பயனாளிகளுக்கு நேர்காணல் நடைபெற்றது. பின்னர் சுருக்கப் பட்டியல் அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் ஆட்களைத் தேர்வு செய்தன.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற பணியாணைகள் வழங்கும் நிகழ்ச்சி யில், ஊரக வளர்ச்சித்துறை அரசு முதன்மை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமை வகித்தார். ஊரக தொழில்துறை, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ப.மோகன், தொழில்துறை, போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.தங்கமணி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பயனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசினர்.

பிரம்மாண்ட முகாம்

அதிகாரிகள் கூறும்போது, ‘முகாமில் 535-க்கும் அதிகமான தனியார் நிறுவனங்கள் பங்கேற் றன, 56,263-க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப் பட்டன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் அதிகாலை 4 மணி முதலே வரத் தொடங்கினர். போக்குவரத்துக்காக 20 அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட 1600 பேருந்துகள் இயக்கப்பட்டன. நகரில் 7 தற்காலிக பேருந்து நிறுத் தங்கள் அமைக்கப்பட்டன. அருகில் உள்ள மாவட்டங்களுக்கு இலவச பேருந்துகள் இயக்கப்பட்டன. நெரிசலைக் கட்டுப்படுத்த 2500 போலீஸார் பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்’ என்றனர்.

முகாமில் 14 மாற்றுத்திறனாளிகள் உட்பட 10,155 பேருக்கு பணி நியமன ஆணைகளும், 14,503 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகளும், 938 பேருக்கு வெளிநாட்டுப் பணிக்கான பதிவுகளும் வழங்கப்பட்டன. மொத்தம் 25,596 பேர் முகாம் மூலம் பயன்பெற்றுள்ளனர் என்றனர்.

No comments:

Post a Comment