FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Tuesday, January 12, 2016

கோவையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் ஒரே நாளில் 10,155 பேருக்கு பணி நியமன ஆணை

12.01.2016
தமிழக அரசு சார்பில் கோவையில் நடத்தப்பட்ட தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில், ஒரே நாளில் 10,155 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், திறன் மேம்பாட்டு பயிற்சி பதிவு முகாம் கோவை குனியமுத்தூ ரில் உள்ள  கிருஷ்ணா பொறி யியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பெயர்ப்பதிவு செய்யப் பட்ட பயனாளிகள் தனியார் நிறுவன அரங்குகளுக்கு நேர்காணலுக்கு அனுப்பப்பட்டனர். கலை, அறிவியல், பொறியியல், பட்டயம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், கல்வித் தகுதி, அனுபவம் அடிப்படையில் பயனாளிகளுக்கு நேர்காணல் நடைபெற்றது. பின்னர் சுருக்கப் பட்டியல் அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் ஆட்களைத் தேர்வு செய்தன.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற பணியாணைகள் வழங்கும் நிகழ்ச்சி யில், ஊரக வளர்ச்சித்துறை அரசு முதன்மை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமை வகித்தார். ஊரக தொழில்துறை, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ப.மோகன், தொழில்துறை, போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.தங்கமணி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பயனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசினர்.

பிரம்மாண்ட முகாம்

அதிகாரிகள் கூறும்போது, ‘முகாமில் 535-க்கும் அதிகமான தனியார் நிறுவனங்கள் பங்கேற் றன, 56,263-க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப் பட்டன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் அதிகாலை 4 மணி முதலே வரத் தொடங்கினர். போக்குவரத்துக்காக 20 அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட 1600 பேருந்துகள் இயக்கப்பட்டன. நகரில் 7 தற்காலிக பேருந்து நிறுத் தங்கள் அமைக்கப்பட்டன. அருகில் உள்ள மாவட்டங்களுக்கு இலவச பேருந்துகள் இயக்கப்பட்டன. நெரிசலைக் கட்டுப்படுத்த 2500 போலீஸார் பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்’ என்றனர்.

முகாமில் 14 மாற்றுத்திறனாளிகள் உட்பட 10,155 பேருக்கு பணி நியமன ஆணைகளும், 14,503 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகளும், 938 பேருக்கு வெளிநாட்டுப் பணிக்கான பதிவுகளும் வழங்கப்பட்டன. மொத்தம் 25,596 பேர் முகாம் மூலம் பயன்பெற்றுள்ளனர் என்றனர்.

No comments:

Post a Comment