FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, January 12, 2016

கோவையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் ஒரே நாளில் 10,155 பேருக்கு பணி நியமன ஆணை

12.01.2016
தமிழக அரசு சார்பில் கோவையில் நடத்தப்பட்ட தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில், ஒரே நாளில் 10,155 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், திறன் மேம்பாட்டு பயிற்சி பதிவு முகாம் கோவை குனியமுத்தூ ரில் உள்ள  கிருஷ்ணா பொறி யியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பெயர்ப்பதிவு செய்யப் பட்ட பயனாளிகள் தனியார் நிறுவன அரங்குகளுக்கு நேர்காணலுக்கு அனுப்பப்பட்டனர். கலை, அறிவியல், பொறியியல், பட்டயம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், கல்வித் தகுதி, அனுபவம் அடிப்படையில் பயனாளிகளுக்கு நேர்காணல் நடைபெற்றது. பின்னர் சுருக்கப் பட்டியல் அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் ஆட்களைத் தேர்வு செய்தன.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற பணியாணைகள் வழங்கும் நிகழ்ச்சி யில், ஊரக வளர்ச்சித்துறை அரசு முதன்மை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமை வகித்தார். ஊரக தொழில்துறை, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ப.மோகன், தொழில்துறை, போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.தங்கமணி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பயனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசினர்.

பிரம்மாண்ட முகாம்

அதிகாரிகள் கூறும்போது, ‘முகாமில் 535-க்கும் அதிகமான தனியார் நிறுவனங்கள் பங்கேற் றன, 56,263-க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப் பட்டன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் அதிகாலை 4 மணி முதலே வரத் தொடங்கினர். போக்குவரத்துக்காக 20 அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட 1600 பேருந்துகள் இயக்கப்பட்டன. நகரில் 7 தற்காலிக பேருந்து நிறுத் தங்கள் அமைக்கப்பட்டன. அருகில் உள்ள மாவட்டங்களுக்கு இலவச பேருந்துகள் இயக்கப்பட்டன. நெரிசலைக் கட்டுப்படுத்த 2500 போலீஸார் பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்’ என்றனர்.

முகாமில் 14 மாற்றுத்திறனாளிகள் உட்பட 10,155 பேருக்கு பணி நியமன ஆணைகளும், 14,503 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகளும், 938 பேருக்கு வெளிநாட்டுப் பணிக்கான பதிவுகளும் வழங்கப்பட்டன. மொத்தம் 25,596 பேர் முகாம் மூலம் பயன்பெற்றுள்ளனர் என்றனர்.

No comments:

Post a Comment