FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, January 19, 2016

ரபேல் நடாலையே அசர வைத்த காது கேளாத டென்னிஸ் வீரர்!



19.01.2016, பிறவியிலிருந்து காதுகள் கேட்கவிட்டாலும், லட்சியத்தை நோக்கிய தனது பயணத்தை தங்குதடையின்றி தொடர்ந்து கொண்டிருக்கிறார் லீ டக் ஹீ.

ஜனவரி 18-ம் தேதி தொடங்கும் கிரான்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்கப் போகிறார், கொரியாவைச் சார்ந்த இந்த 17 வயது இளைஞன். தன்னுடைய பிரச்னையை ஒரு குறையாகவே கருதாத லீ, தனக்கு இது மிகப்பெரிய பலம் என்று சொல்லி நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறார்.



நடாலைக் கவர்ந்தவர்

பிறக்கும்போதிருந்தே காது கேளாத லீக்கு, இரண்டாம் வகுப்பு படிக்கையில்தான் தனக்கு இப்படியொரு பிரச்னை இருக்கிறது என்றே தெரிந்துள்ளது. ஆனாலும் ஒருநாளும் இதைப்பற்றி வருந்தியதில்லையாம் லீ. டென்னிஸ் பேட்டை கையில் எடுத்தது முதல், தன் கவனம் முழுவதையும் டென்னிசின் மீதே செலுத்தியுள்ளார். டென்னிஸ் விளையாட்டில் உலகின் நம்பர்.1 வீரராய் வரவேண்டும் என்பதே லீயின் கனவு. அது மிகவும் கடினம் என்று அறிந்தபோதும் ஒவ்வொரு படியாய் முன்னேறி, தனது லட்சியத்தை அடைய உழைத்து வருகிறார். இதுவரை ஜூனியர் டென்னிஸ் போட்டிகளில் அசத்தி வந்த லீ, தற்போது சீனியர் வீரர்களுக்கு சவால் விட தயாராகிவிட்டார்.

2015-ம் ஆண்டு மட்டும் 7 டென்னிஸ் தொடர்களில் வென்று அசத்தியுள்ளார். ஒற்றையர் தரவரிசையில் ஒரு வருடம் முன்பு 505 வது இடத்திலிருந்த லீ, தனது அபார ஆட்டத்தால் சில மாதங்களிலேயே 272 இடங்கள் முன்னேறி, இன்று 233 வது இடத்தில் இருக்கிறார். இவரது அசாத்திய ஆட்டத்தைப் பார்த்த, 14 முறை கிரான்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற ரபேல் நடால் கூட, “தடைகளை உடைத்து முன்னேறி வரும் லீ டக் ஹீயின் வாழ்க்கை, நாமும் போராட வேண்டும் என்று நமக்குக் கத்துக்கொடுக்கிறது” என்று ட்விட்டரில் அவரைப் புகழ்ந்திருந்தார்.

என்னால் முடியும்

“எனக்கு காது கேளாததை நான் எனது பலவீனமாகப் பார்க்கவில்லை. ஒருவகையில் அது எனக்கு பலம் சேர்க்கிறது. என்னால் எனது ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த முடிகிறது. பார்வையாளர்களோ, எதிர்த்து விளையாடும் வீரர்களோ என்ன சொல்வார்கள் என்று எனக்குக் கேட்காததால், எனக்கு கவனச் சிதறல்கள் இல்லை. உண்மையில் இதை நான் என் பலமாகவே பார்க்கிறேன். என் லட்சியத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. அதனால் நான் ஓயப்போவதில்லை” என்று தனது பேச்சால் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறார் லீ.

லீயின் வாழ்க்கை நடாலுக்கு மட்டுமல்ல ‘நம்மால் முடியாது’ என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் பாடம்.

வெற்றிகள் பல குவித்து லட்சியத்தை அடைய வாழ்த்துக்கள் லீ…!

No comments:

Post a Comment