FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, January 19, 2016

ரபேல் நடாலையே அசர வைத்த காது கேளாத டென்னிஸ் வீரர்!



19.01.2016, பிறவியிலிருந்து காதுகள் கேட்கவிட்டாலும், லட்சியத்தை நோக்கிய தனது பயணத்தை தங்குதடையின்றி தொடர்ந்து கொண்டிருக்கிறார் லீ டக் ஹீ.

ஜனவரி 18-ம் தேதி தொடங்கும் கிரான்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்கப் போகிறார், கொரியாவைச் சார்ந்த இந்த 17 வயது இளைஞன். தன்னுடைய பிரச்னையை ஒரு குறையாகவே கருதாத லீ, தனக்கு இது மிகப்பெரிய பலம் என்று சொல்லி நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறார்.



நடாலைக் கவர்ந்தவர்

பிறக்கும்போதிருந்தே காது கேளாத லீக்கு, இரண்டாம் வகுப்பு படிக்கையில்தான் தனக்கு இப்படியொரு பிரச்னை இருக்கிறது என்றே தெரிந்துள்ளது. ஆனாலும் ஒருநாளும் இதைப்பற்றி வருந்தியதில்லையாம் லீ. டென்னிஸ் பேட்டை கையில் எடுத்தது முதல், தன் கவனம் முழுவதையும் டென்னிசின் மீதே செலுத்தியுள்ளார். டென்னிஸ் விளையாட்டில் உலகின் நம்பர்.1 வீரராய் வரவேண்டும் என்பதே லீயின் கனவு. அது மிகவும் கடினம் என்று அறிந்தபோதும் ஒவ்வொரு படியாய் முன்னேறி, தனது லட்சியத்தை அடைய உழைத்து வருகிறார். இதுவரை ஜூனியர் டென்னிஸ் போட்டிகளில் அசத்தி வந்த லீ, தற்போது சீனியர் வீரர்களுக்கு சவால் விட தயாராகிவிட்டார்.

2015-ம் ஆண்டு மட்டும் 7 டென்னிஸ் தொடர்களில் வென்று அசத்தியுள்ளார். ஒற்றையர் தரவரிசையில் ஒரு வருடம் முன்பு 505 வது இடத்திலிருந்த லீ, தனது அபார ஆட்டத்தால் சில மாதங்களிலேயே 272 இடங்கள் முன்னேறி, இன்று 233 வது இடத்தில் இருக்கிறார். இவரது அசாத்திய ஆட்டத்தைப் பார்த்த, 14 முறை கிரான்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற ரபேல் நடால் கூட, “தடைகளை உடைத்து முன்னேறி வரும் லீ டக் ஹீயின் வாழ்க்கை, நாமும் போராட வேண்டும் என்று நமக்குக் கத்துக்கொடுக்கிறது” என்று ட்விட்டரில் அவரைப் புகழ்ந்திருந்தார்.

என்னால் முடியும்

“எனக்கு காது கேளாததை நான் எனது பலவீனமாகப் பார்க்கவில்லை. ஒருவகையில் அது எனக்கு பலம் சேர்க்கிறது. என்னால் எனது ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த முடிகிறது. பார்வையாளர்களோ, எதிர்த்து விளையாடும் வீரர்களோ என்ன சொல்வார்கள் என்று எனக்குக் கேட்காததால், எனக்கு கவனச் சிதறல்கள் இல்லை. உண்மையில் இதை நான் என் பலமாகவே பார்க்கிறேன். என் லட்சியத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. அதனால் நான் ஓயப்போவதில்லை” என்று தனது பேச்சால் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறார் லீ.

லீயின் வாழ்க்கை நடாலுக்கு மட்டுமல்ல ‘நம்மால் முடியாது’ என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் பாடம்.

வெற்றிகள் பல குவித்து லட்சியத்தை அடைய வாழ்த்துக்கள் லீ…!

No comments:

Post a Comment