FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Tuesday, January 19, 2016

ரபேல் நடாலையே அசர வைத்த காது கேளாத டென்னிஸ் வீரர்!



19.01.2016, பிறவியிலிருந்து காதுகள் கேட்கவிட்டாலும், லட்சியத்தை நோக்கிய தனது பயணத்தை தங்குதடையின்றி தொடர்ந்து கொண்டிருக்கிறார் லீ டக் ஹீ.

ஜனவரி 18-ம் தேதி தொடங்கும் கிரான்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்கப் போகிறார், கொரியாவைச் சார்ந்த இந்த 17 வயது இளைஞன். தன்னுடைய பிரச்னையை ஒரு குறையாகவே கருதாத லீ, தனக்கு இது மிகப்பெரிய பலம் என்று சொல்லி நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறார்.



நடாலைக் கவர்ந்தவர்

பிறக்கும்போதிருந்தே காது கேளாத லீக்கு, இரண்டாம் வகுப்பு படிக்கையில்தான் தனக்கு இப்படியொரு பிரச்னை இருக்கிறது என்றே தெரிந்துள்ளது. ஆனாலும் ஒருநாளும் இதைப்பற்றி வருந்தியதில்லையாம் லீ. டென்னிஸ் பேட்டை கையில் எடுத்தது முதல், தன் கவனம் முழுவதையும் டென்னிசின் மீதே செலுத்தியுள்ளார். டென்னிஸ் விளையாட்டில் உலகின் நம்பர்.1 வீரராய் வரவேண்டும் என்பதே லீயின் கனவு. அது மிகவும் கடினம் என்று அறிந்தபோதும் ஒவ்வொரு படியாய் முன்னேறி, தனது லட்சியத்தை அடைய உழைத்து வருகிறார். இதுவரை ஜூனியர் டென்னிஸ் போட்டிகளில் அசத்தி வந்த லீ, தற்போது சீனியர் வீரர்களுக்கு சவால் விட தயாராகிவிட்டார்.

2015-ம் ஆண்டு மட்டும் 7 டென்னிஸ் தொடர்களில் வென்று அசத்தியுள்ளார். ஒற்றையர் தரவரிசையில் ஒரு வருடம் முன்பு 505 வது இடத்திலிருந்த லீ, தனது அபார ஆட்டத்தால் சில மாதங்களிலேயே 272 இடங்கள் முன்னேறி, இன்று 233 வது இடத்தில் இருக்கிறார். இவரது அசாத்திய ஆட்டத்தைப் பார்த்த, 14 முறை கிரான்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற ரபேல் நடால் கூட, “தடைகளை உடைத்து முன்னேறி வரும் லீ டக் ஹீயின் வாழ்க்கை, நாமும் போராட வேண்டும் என்று நமக்குக் கத்துக்கொடுக்கிறது” என்று ட்விட்டரில் அவரைப் புகழ்ந்திருந்தார்.

என்னால் முடியும்

“எனக்கு காது கேளாததை நான் எனது பலவீனமாகப் பார்க்கவில்லை. ஒருவகையில் அது எனக்கு பலம் சேர்க்கிறது. என்னால் எனது ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த முடிகிறது. பார்வையாளர்களோ, எதிர்த்து விளையாடும் வீரர்களோ என்ன சொல்வார்கள் என்று எனக்குக் கேட்காததால், எனக்கு கவனச் சிதறல்கள் இல்லை. உண்மையில் இதை நான் என் பலமாகவே பார்க்கிறேன். என் லட்சியத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. அதனால் நான் ஓயப்போவதில்லை” என்று தனது பேச்சால் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறார் லீ.

லீயின் வாழ்க்கை நடாலுக்கு மட்டுமல்ல ‘நம்மால் முடியாது’ என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் பாடம்.

வெற்றிகள் பல குவித்து லட்சியத்தை அடைய வாழ்த்துக்கள் லீ…!

No comments:

Post a Comment