FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, January 7, 2016

வேலை வாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை திட்டம் வேலைவாப்பு அதிகாரி தகவல்


06.01.2016, தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது.

இதுகுறித்து வேலைவாப்பு அதிகாரி து.நாகேந்திரன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;–

உதவித்தொகை

தூத்துக்குடி மாவட்டத்தில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள் தங்களது தகுதியினை வளர்த்துக் கொள்ள தேவையான தொழில் பயிற்சி கட்டணம், போட்டி தேர்வு கட்டணம் போன்றவற்றை செலுத்த உதவும் வகையில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகைத் திட்டம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலமாக செயல்படுத்தப்படுகிறது.

ஏற்கனவே இந்த திட்டத்தில் பயன்பெற்றவர்கள் மீண்டும் உதவித்தொகை பெற முடியாது. இந்த திட்டம் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே பயன்பெறுவதற்கான விண்ணப்ப படிவம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது.

கல்வித்தகுதி
இந்த திட்டத்தில் பயன்பெற 10–ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள், பிளஸ்–2, மற்றும் பட்டயப் படிப்பு முடித்து உள்ளவர்கள், தங்கள் கல்வித் தகுதியினை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும்.

31.12.2010–க்கு முன் பதிவு செய்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். மேலும் அதை தொடர்ந்து புதுப்பித்து இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள்

மாற்றுத்திறனாளிகள் இந்த திட்டத்தில் பயன்பெற எழுத, படிக்க தெரிந்திருந்தால் மட்டும் போதுமானது. மேலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1 ஆண்டு முடிந்து இருந்தாலும் போதும். விண்ணப்பத்தாரர்கள் 40 வயதுக்குள் இருக்க வேணடும். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள், அலுவலக வேலை நாளில், வேலைவாய்ப்பு அலுவலக அசல் பதிவு அடையாள அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு ஆரம்பித்து வங்கிக் கணக்குப்புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் உடல் ஊனமுற்றோர் அடையாள அட்டையுடன் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்கும் பதிவு தாரர்களுக்கு, தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்புக்கான நேர்காணலுக்கும் பரிந்துரை செய்யப்படும்.

இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் து.நாகேந்திரன் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment