FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, January 7, 2016

வாய் பேச முடியாத மாற்றுதிறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: போலிசார் விசாரணை

07.01.2016, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 குழந்தைகளின் தந்தையிடம் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தந்தை இல்லாத 19 வயது இளம் பெண் ராசி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிறவியிலேயே வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. அவருக்கு ஒரு சகோதரியும் உள்ளார். கூலி வேலை செய்து தாய் பிழைக்கிறார்கள். அருகில் உள்ள தோட்டங்களில் தோட்ட வேலை செய்வது ராசியின் வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராசியை காணவில்லை என்று தாய் மற்றும் உறவினர்கள் எங்கு தேடியும் காணவில்லை.

அடுத்த நாள் காலை பனங்குளம் பேருந்து நிறுத்தம் அருகே ராசி மட்டும் தனியாக நின்று கொண்டிருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் அந்த பெண்ணிடம் விசாரித்த போது அவருக்கு வாய் பேச முடியவில்லை. அந்த பெண் சைகையால் பதில் சொல்லியுள்ளார். தனது தந்தை மற்றும் குடும்பத்தினர் பற்றிய விபரங்களை சொன்னவர் மேலும் தன்னை தனது பக்கத்து வீட்டில் உள்ள ஒருவர் இரவில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

அதன் பிறகு தனது வீட்டிற்குச் சென்ற ராசி தன் தாய் மற்றும் உறவினர்களிடம் இது பற்றி கண்ணீருடன் கூறியுள்ளார். அடையாளம் சொன்ன 3 குழந்தைகளின் தந்தையிடம் விசாரித்த போது அந்த நபர் நான் அழைத்துச் செல்லவில்லை என்று மறுத்துவிட்டதால் ராசியின் தாய் கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இளம் பெண் மற்றும் பாலியல் தொல்லை என்பதால் கீரமங்கலம் போலிசார் ஆலங்குடி மகளிர் போலிசாரை வரவழைத்து விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் ராசி சொல்வது உண்மை எனில் 3 குழந்தைகளின் தந்தை கைது செய்யப்படலாம் என்று போலிசார் கூறுகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு மருத்துவ பரிசோதணைகள் நடத்தப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment