FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, January 7, 2016

வாய் பேச முடியாத மாற்றுதிறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: போலிசார் விசாரணை

07.01.2016, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 குழந்தைகளின் தந்தையிடம் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தந்தை இல்லாத 19 வயது இளம் பெண் ராசி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிறவியிலேயே வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. அவருக்கு ஒரு சகோதரியும் உள்ளார். கூலி வேலை செய்து தாய் பிழைக்கிறார்கள். அருகில் உள்ள தோட்டங்களில் தோட்ட வேலை செய்வது ராசியின் வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராசியை காணவில்லை என்று தாய் மற்றும் உறவினர்கள் எங்கு தேடியும் காணவில்லை.

அடுத்த நாள் காலை பனங்குளம் பேருந்து நிறுத்தம் அருகே ராசி மட்டும் தனியாக நின்று கொண்டிருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் அந்த பெண்ணிடம் விசாரித்த போது அவருக்கு வாய் பேச முடியவில்லை. அந்த பெண் சைகையால் பதில் சொல்லியுள்ளார். தனது தந்தை மற்றும் குடும்பத்தினர் பற்றிய விபரங்களை சொன்னவர் மேலும் தன்னை தனது பக்கத்து வீட்டில் உள்ள ஒருவர் இரவில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

அதன் பிறகு தனது வீட்டிற்குச் சென்ற ராசி தன் தாய் மற்றும் உறவினர்களிடம் இது பற்றி கண்ணீருடன் கூறியுள்ளார். அடையாளம் சொன்ன 3 குழந்தைகளின் தந்தையிடம் விசாரித்த போது அந்த நபர் நான் அழைத்துச் செல்லவில்லை என்று மறுத்துவிட்டதால் ராசியின் தாய் கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இளம் பெண் மற்றும் பாலியல் தொல்லை என்பதால் கீரமங்கலம் போலிசார் ஆலங்குடி மகளிர் போலிசாரை வரவழைத்து விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் ராசி சொல்வது உண்மை எனில் 3 குழந்தைகளின் தந்தை கைது செய்யப்படலாம் என்று போலிசார் கூறுகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு மருத்துவ பரிசோதணைகள் நடத்தப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment