FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, January 7, 2016

வாய் பேச முடியாத மாற்றுதிறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: போலிசார் விசாரணை

07.01.2016, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 குழந்தைகளின் தந்தையிடம் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தந்தை இல்லாத 19 வயது இளம் பெண் ராசி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிறவியிலேயே வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. அவருக்கு ஒரு சகோதரியும் உள்ளார். கூலி வேலை செய்து தாய் பிழைக்கிறார்கள். அருகில் உள்ள தோட்டங்களில் தோட்ட வேலை செய்வது ராசியின் வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராசியை காணவில்லை என்று தாய் மற்றும் உறவினர்கள் எங்கு தேடியும் காணவில்லை.

அடுத்த நாள் காலை பனங்குளம் பேருந்து நிறுத்தம் அருகே ராசி மட்டும் தனியாக நின்று கொண்டிருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் அந்த பெண்ணிடம் விசாரித்த போது அவருக்கு வாய் பேச முடியவில்லை. அந்த பெண் சைகையால் பதில் சொல்லியுள்ளார். தனது தந்தை மற்றும் குடும்பத்தினர் பற்றிய விபரங்களை சொன்னவர் மேலும் தன்னை தனது பக்கத்து வீட்டில் உள்ள ஒருவர் இரவில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

அதன் பிறகு தனது வீட்டிற்குச் சென்ற ராசி தன் தாய் மற்றும் உறவினர்களிடம் இது பற்றி கண்ணீருடன் கூறியுள்ளார். அடையாளம் சொன்ன 3 குழந்தைகளின் தந்தையிடம் விசாரித்த போது அந்த நபர் நான் அழைத்துச் செல்லவில்லை என்று மறுத்துவிட்டதால் ராசியின் தாய் கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இளம் பெண் மற்றும் பாலியல் தொல்லை என்பதால் கீரமங்கலம் போலிசார் ஆலங்குடி மகளிர் போலிசாரை வரவழைத்து விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் ராசி சொல்வது உண்மை எனில் 3 குழந்தைகளின் தந்தை கைது செய்யப்படலாம் என்று போலிசார் கூறுகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு மருத்துவ பரிசோதணைகள் நடத்தப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment