FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, January 7, 2016

வாய் பேச முடியாத மாற்றுதிறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: போலிசார் விசாரணை

07.01.2016, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 குழந்தைகளின் தந்தையிடம் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தந்தை இல்லாத 19 வயது இளம் பெண் ராசி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிறவியிலேயே வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. அவருக்கு ஒரு சகோதரியும் உள்ளார். கூலி வேலை செய்து தாய் பிழைக்கிறார்கள். அருகில் உள்ள தோட்டங்களில் தோட்ட வேலை செய்வது ராசியின் வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராசியை காணவில்லை என்று தாய் மற்றும் உறவினர்கள் எங்கு தேடியும் காணவில்லை.

அடுத்த நாள் காலை பனங்குளம் பேருந்து நிறுத்தம் அருகே ராசி மட்டும் தனியாக நின்று கொண்டிருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் அந்த பெண்ணிடம் விசாரித்த போது அவருக்கு வாய் பேச முடியவில்லை. அந்த பெண் சைகையால் பதில் சொல்லியுள்ளார். தனது தந்தை மற்றும் குடும்பத்தினர் பற்றிய விபரங்களை சொன்னவர் மேலும் தன்னை தனது பக்கத்து வீட்டில் உள்ள ஒருவர் இரவில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

அதன் பிறகு தனது வீட்டிற்குச் சென்ற ராசி தன் தாய் மற்றும் உறவினர்களிடம் இது பற்றி கண்ணீருடன் கூறியுள்ளார். அடையாளம் சொன்ன 3 குழந்தைகளின் தந்தையிடம் விசாரித்த போது அந்த நபர் நான் அழைத்துச் செல்லவில்லை என்று மறுத்துவிட்டதால் ராசியின் தாய் கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இளம் பெண் மற்றும் பாலியல் தொல்லை என்பதால் கீரமங்கலம் போலிசார் ஆலங்குடி மகளிர் போலிசாரை வரவழைத்து விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் ராசி சொல்வது உண்மை எனில் 3 குழந்தைகளின் தந்தை கைது செய்யப்படலாம் என்று போலிசார் கூறுகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு மருத்துவ பரிசோதணைகள் நடத்தப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment