FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Friday, January 22, 2016

அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் இளநிலை பயிற்சி அலுவலர் பணிக்கு ஆட்கள் தேர்வு வருகிற 1-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

22.01.2016, தர்மபுரி,
அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் இளநிலை பயிற்சி அலுவலர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடக்கிறது. இதற்கு வருகிற 1-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி அலுவலர் பணி
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் பயிற்சி பிரிவில் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள சுமார் 329 இளநிலை பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்பும் வகையில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். எனவே தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தமிழக அரசின் ஸ்கில் டிரெயினிங் இணைய தள முகவரியில் சென்று விளக்ககுறிப்பில் கண்டுள்ளபடி விண்ணப்பிக்கலாம்.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க உரிய தொழிற்பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ், 3 ஆண்டு முன் அனுபவம் அல்லது உரிய தொழில் பழகுனர் சான்றிதழ் மற்றும் 2 ஆண்டு அனுபவம் அல்லது உரிய 3 ஆண்டு பொறியியல் டிப்ளமோ அல்லது டெக்னாலஜி பட்டயம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர்.

வயது வரம்பு
ஐ.டி.ஐ. சான்றிதழ் மற்றும் தொழில் பழகுனர் சான்றிதழ் பெற்ற பொது பிரிவிற்கு 35 வயதும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 37 வயதும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 40-ம் வயது வரம்பாகும். 3 ஆண்டு டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ. சான்றிதழுடன் மேல்நிலைக்கல்வி மற்றும் பட்டம் பெற்றவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவை ஆகியோருக்கு நடைமுறையில் உள்ள அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்த்தப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு ரூ.50-க்கான தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் வரைவோலையும் பிற வகுப்பினருக்கு ரூ.150-க்கான வங்கியின் வரைவோலையும் எடுத்து விண்ணப்பித்த ஆன்லைன் பிரிண்ட் அவுட் மற்றும் உரிய சான்றிதழ்களில் சுய ஒப்பமிட்ட நகல்களுடன் தர்மபுரி தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் நேரில் சமர்ப்பித்து ஒப்புகை சீட்டு பெற்று செல்லலாம்.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க வருகிற 1-ந் தேதி கடைசி நாளாகும். எழுத்துத்தேர்வு 2½ மணிநேரம் நடக்கும். மேற்கண்ட இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவுசீட்டில் குறிப்பிடப்பட்ட தேதி மற்றும் தேர்வு மையத்தில் கலந்து கொண்டு எழுத்து தேர்வு எழுத வேண்டும். தேர்ச்சி பெற்றவர்களில் 5 பேரில் ஒருவர் என்ற விகிதத்தில் நேர்முகத்தேர்வுக்கு அனுப்பபடுவார்கள். இந்த அரிய வாய்ப்பை மாவட்டத்தை சேர்ந்த தகுதிஉடையவர் பயன்படுத்தி கொள்ளுமாறு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ஜெகந்நாதன் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment