FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Wednesday, January 27, 2016

தேசிய ஒலிம்பிக் அறிவியல் போட்டி: 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

செங்கல்பட்டை அடுத்த மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியில் 8-ஆவது தேசிய ஒலிம்பிக் அறிவியல் போட்டிகளும், கண்காட்சியும் அண்மையில் நடைபெற்றன.
சொசைட்டி ஆப் ஆட்டோமொபைல் இன்ஜினீயர்ஸ் இந்தியா (எஸ்.ஏ.இ) அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் 5-ஆவது, 6-ஆவது வகுப்புகள் பயிலும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
எஸ்.ஏ.இ. அமைப்பின் தலைவர் அரவிந்த பரத்வாஜ் வரவேற்புரை ஆற்றினார். சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.
இந்தப் போட்டிகள் குறித்து அமைப்பின் நிர்வாகியும், டிவிஎஸ் லூக்காஸ் இணை நிர்வாக இயக்குநருமான அரவிந்த் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாணவர்கள் அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் தங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்வதற்காக இத்தகைய போட்டிகள் நடத்தப்படுகின்றன.
ராக்கெட் வடிவமைப்புக்குத் தேவையான அடிப்படை இயற்பியலை பயன்படுத்தி "ஜெட் டாய்' எனப்படும் பலூனினால் உந்தப்படும் வாகனம் வடிவமைத்தல், கப்பல் கட்டுமானத்தின் அடிப்படையான சிறு பாய் மரப் படகு தயாரித்தல் ஆகியவை மாணவர்களுக்கு போட்டிகளாக நடத்தப்பட்டன.
பார்ப்பதற்கு சிறு விளையாட்டுப் பொருள் போல தெரிந்தாலும், இதில் வாகனம் கடந்து செல்லும் தூரம், பலு தூக்கும் திறன், வேகம், உராய்வுத் தன்மை, காற்றுத் தடை, உந்துவிசை போன்ற முக்கியமான பெளதிக விதிகளை பின்பற்றி வடிவமைப்பது முக்கியமானதாகும்.
அப்படி வடிவமைக்கும் பொருள் குறித்து விரிவாக எடுத்துக் கூறி, அது செயல்படுத்தும் விதம் குறித்து சரியாகக் கூறினால் அந்த மாணவருக்கு முழு மதிப்பெண் கிடைக்கும்.
இவையனைத்தும் சரியாக அமைந்து சோதனைகளில் குறிப்பிட்ட கட்டளை விதிகளை கடக்கும் வாகனங்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
இந்தப் போட்டிகளில் தனியார் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது, அரசுப் பள்ளி மாணவர்களும், வாய் பேசாத, காது கேளாத மாணவர்களும் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர் என்றார் அரவிந்த் பாலாஜி.

No comments:

Post a Comment