FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, January 27, 2016

தேசிய ஒலிம்பிக் அறிவியல் போட்டி: 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

செங்கல்பட்டை அடுத்த மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியில் 8-ஆவது தேசிய ஒலிம்பிக் அறிவியல் போட்டிகளும், கண்காட்சியும் அண்மையில் நடைபெற்றன.
சொசைட்டி ஆப் ஆட்டோமொபைல் இன்ஜினீயர்ஸ் இந்தியா (எஸ்.ஏ.இ) அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் 5-ஆவது, 6-ஆவது வகுப்புகள் பயிலும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
எஸ்.ஏ.இ. அமைப்பின் தலைவர் அரவிந்த பரத்வாஜ் வரவேற்புரை ஆற்றினார். சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.
இந்தப் போட்டிகள் குறித்து அமைப்பின் நிர்வாகியும், டிவிஎஸ் லூக்காஸ் இணை நிர்வாக இயக்குநருமான அரவிந்த் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாணவர்கள் அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் தங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்வதற்காக இத்தகைய போட்டிகள் நடத்தப்படுகின்றன.
ராக்கெட் வடிவமைப்புக்குத் தேவையான அடிப்படை இயற்பியலை பயன்படுத்தி "ஜெட் டாய்' எனப்படும் பலூனினால் உந்தப்படும் வாகனம் வடிவமைத்தல், கப்பல் கட்டுமானத்தின் அடிப்படையான சிறு பாய் மரப் படகு தயாரித்தல் ஆகியவை மாணவர்களுக்கு போட்டிகளாக நடத்தப்பட்டன.
பார்ப்பதற்கு சிறு விளையாட்டுப் பொருள் போல தெரிந்தாலும், இதில் வாகனம் கடந்து செல்லும் தூரம், பலு தூக்கும் திறன், வேகம், உராய்வுத் தன்மை, காற்றுத் தடை, உந்துவிசை போன்ற முக்கியமான பெளதிக விதிகளை பின்பற்றி வடிவமைப்பது முக்கியமானதாகும்.
அப்படி வடிவமைக்கும் பொருள் குறித்து விரிவாக எடுத்துக் கூறி, அது செயல்படுத்தும் விதம் குறித்து சரியாகக் கூறினால் அந்த மாணவருக்கு முழு மதிப்பெண் கிடைக்கும்.
இவையனைத்தும் சரியாக அமைந்து சோதனைகளில் குறிப்பிட்ட கட்டளை விதிகளை கடக்கும் வாகனங்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
இந்தப் போட்டிகளில் தனியார் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது, அரசுப் பள்ளி மாணவர்களும், வாய் பேசாத, காது கேளாத மாணவர்களும் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர் என்றார் அரவிந்த் பாலாஜி.

No comments:

Post a Comment