FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, January 9, 2016

விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 34 ஆயிரம் பேருக்கு சிகிச்சை கலெக்டர் தகவல்

09.01.2016, கடலூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 34 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ காப்பீட்டு திட்டம்

தமிழகத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், இருதய அறுவை சிகிச்சை செய்து கொள்ள 1½ லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. காதுகேளாத, வாய்பேசமுடியாத 6 வயதுக்குபட்ட குழந்தைகளுக்கு குருத்தணு மாற்று அறுவை சிகிச்சை(காக்ளியர் இம்பிளான்ட் கருவி பொருத்தும் சிகிச்சை) மேற்கொள்ள தலா 8 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை ஆகும் செலவினத்தை அரசே ஏற்றுக்கொள்கிறது.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, குடல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 6 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இச்சிகிச்சையையும் இத்திட்டத்தின் மூலம் செய்து கொள்ளலாம். எலும்பு மஜ்சை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 4 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இச்சிகிச்சையையும் இத்திட்டத்தின் மூலம் பெறலாம். மேற்கண்ட 4 நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பது இத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாகும். இதுபோன்ற உயர்தர சிகிச்சை சென்னை, கோவை, சேலம், மதுரை ஆகிய பெருநகரங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படுகிறது.

1016 நோய்கள்

இதுதவிர முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1,016 நோய்களுக்கு சிகிச்சைகளும், 23 வகையான நோய்களுக்கான பரிசோதனைகளும், அதனோடு தொடர்புடைய 113 தொடர் சிகிச்சைகளும் செய்யப்படுகின்றன. இதற்காக ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வீதம் 4 ஆண்டுகளுக்கு 4 லட்சம் ரூபாய் வரை இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். சில நோய்களுக்கு 1½ லட்சம் ரூபாய் வரை சிகிச்சை பெறலாம்.

கடலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 515 பேருக்கு தீக்காயம் தொடர்பான சிகிச்சையும், 5,498 பேருக்கு புற்றுநோய் கதிர் இயக்க சிகிச்சையும், 1,726 பேருக்கு கண்நோய் சிகிச்சையும், 9,785 பேருக்கு ரத்த சுத்திகரிப்பு மற்றும் சிறுநீரக நோய் தொடர்பான சிகிச்சையும், 3,314 பேருக்கு இருதய நோய்களுக்கான சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.

34 ஆயிரம் பேர் பயன்

இதன் மூலம் இதுவரை மொத்தம் 33 ஆயிரத்து 882 பேர் பயனடைந்து உள்ளனர். இதற்காக 70 கோடியே 60 லட்சம் ரூபாய் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு 1800 425 3993 FREEஎன்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் புதிய அடையாள அட்டை பெற 7373004559, 7373004561, 7373004564 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று கடலூர் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment