FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, January 9, 2016

விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 34 ஆயிரம் பேருக்கு சிகிச்சை கலெக்டர் தகவல்

09.01.2016, கடலூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 34 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ காப்பீட்டு திட்டம்

தமிழகத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், இருதய அறுவை சிகிச்சை செய்து கொள்ள 1½ லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. காதுகேளாத, வாய்பேசமுடியாத 6 வயதுக்குபட்ட குழந்தைகளுக்கு குருத்தணு மாற்று அறுவை சிகிச்சை(காக்ளியர் இம்பிளான்ட் கருவி பொருத்தும் சிகிச்சை) மேற்கொள்ள தலா 8 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை ஆகும் செலவினத்தை அரசே ஏற்றுக்கொள்கிறது.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, குடல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 6 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இச்சிகிச்சையையும் இத்திட்டத்தின் மூலம் செய்து கொள்ளலாம். எலும்பு மஜ்சை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 4 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இச்சிகிச்சையையும் இத்திட்டத்தின் மூலம் பெறலாம். மேற்கண்ட 4 நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பது இத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாகும். இதுபோன்ற உயர்தர சிகிச்சை சென்னை, கோவை, சேலம், மதுரை ஆகிய பெருநகரங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படுகிறது.

1016 நோய்கள்

இதுதவிர முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1,016 நோய்களுக்கு சிகிச்சைகளும், 23 வகையான நோய்களுக்கான பரிசோதனைகளும், அதனோடு தொடர்புடைய 113 தொடர் சிகிச்சைகளும் செய்யப்படுகின்றன. இதற்காக ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வீதம் 4 ஆண்டுகளுக்கு 4 லட்சம் ரூபாய் வரை இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். சில நோய்களுக்கு 1½ லட்சம் ரூபாய் வரை சிகிச்சை பெறலாம்.

கடலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 515 பேருக்கு தீக்காயம் தொடர்பான சிகிச்சையும், 5,498 பேருக்கு புற்றுநோய் கதிர் இயக்க சிகிச்சையும், 1,726 பேருக்கு கண்நோய் சிகிச்சையும், 9,785 பேருக்கு ரத்த சுத்திகரிப்பு மற்றும் சிறுநீரக நோய் தொடர்பான சிகிச்சையும், 3,314 பேருக்கு இருதய நோய்களுக்கான சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.

34 ஆயிரம் பேர் பயன்

இதன் மூலம் இதுவரை மொத்தம் 33 ஆயிரத்து 882 பேர் பயனடைந்து உள்ளனர். இதற்காக 70 கோடியே 60 லட்சம் ரூபாய் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு 1800 425 3993 FREEஎன்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் புதிய அடையாள அட்டை பெற 7373004559, 7373004561, 7373004564 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று கடலூர் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment