FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Saturday, January 9, 2016

விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 34 ஆயிரம் பேருக்கு சிகிச்சை கலெக்டர் தகவல்

09.01.2016, கடலூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 34 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ காப்பீட்டு திட்டம்

தமிழகத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், இருதய அறுவை சிகிச்சை செய்து கொள்ள 1½ லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. காதுகேளாத, வாய்பேசமுடியாத 6 வயதுக்குபட்ட குழந்தைகளுக்கு குருத்தணு மாற்று அறுவை சிகிச்சை(காக்ளியர் இம்பிளான்ட் கருவி பொருத்தும் சிகிச்சை) மேற்கொள்ள தலா 8 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை ஆகும் செலவினத்தை அரசே ஏற்றுக்கொள்கிறது.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, குடல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 6 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இச்சிகிச்சையையும் இத்திட்டத்தின் மூலம் செய்து கொள்ளலாம். எலும்பு மஜ்சை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 4 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இச்சிகிச்சையையும் இத்திட்டத்தின் மூலம் பெறலாம். மேற்கண்ட 4 நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பது இத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாகும். இதுபோன்ற உயர்தர சிகிச்சை சென்னை, கோவை, சேலம், மதுரை ஆகிய பெருநகரங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படுகிறது.

1016 நோய்கள்

இதுதவிர முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1,016 நோய்களுக்கு சிகிச்சைகளும், 23 வகையான நோய்களுக்கான பரிசோதனைகளும், அதனோடு தொடர்புடைய 113 தொடர் சிகிச்சைகளும் செய்யப்படுகின்றன. இதற்காக ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வீதம் 4 ஆண்டுகளுக்கு 4 லட்சம் ரூபாய் வரை இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். சில நோய்களுக்கு 1½ லட்சம் ரூபாய் வரை சிகிச்சை பெறலாம்.

கடலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 515 பேருக்கு தீக்காயம் தொடர்பான சிகிச்சையும், 5,498 பேருக்கு புற்றுநோய் கதிர் இயக்க சிகிச்சையும், 1,726 பேருக்கு கண்நோய் சிகிச்சையும், 9,785 பேருக்கு ரத்த சுத்திகரிப்பு மற்றும் சிறுநீரக நோய் தொடர்பான சிகிச்சையும், 3,314 பேருக்கு இருதய நோய்களுக்கான சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.

34 ஆயிரம் பேர் பயன்

இதன் மூலம் இதுவரை மொத்தம் 33 ஆயிரத்து 882 பேர் பயனடைந்து உள்ளனர். இதற்காக 70 கோடியே 60 லட்சம் ரூபாய் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு 1800 425 3993 FREEஎன்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் புதிய அடையாள அட்டை பெற 7373004559, 7373004561, 7373004564 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று கடலூர் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment