FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, January 7, 2016

உதவித்தொகை வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

05.01.2016, கிருஷ்ணகிரி: நிறுத்தப்பட்ட மாதாந்திர உதவித்தொகையை மீண்டும் வழங்க கோரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நான்கு இடங்களில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக, ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மாதாந்திர உதவித்தொகை வாங்கி வந்த பலருக்கு, உதவிக்கு தொகை வழங்குவது திடீர் என நிறுத்தப்பட்டது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, குறிப்பிட்ட சதவீதத்திற்கும் குறைவாக ஊனம் உள்ளவர்களுக்கு, மாதாந்திர உதவித்தொகை நிறுத்தப்பட்டிருக்கும் என்று தெரிவித்தனர். இந்நிலையில், நிறுத்தப்பட்ட மாதாந்திர உதவித்தொகையை மீண்டும் வழங்க கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க கிருஷ்ணகிரி மாவட்ட குழு சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி ஆகிய, நான்கு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அலுவலகம் எதிரே, நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டம் நடத்தியவர்களிடம், மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தின் தன்மை குறித்து பரிசோதனை நடத்தி, அனைவருக்கும் உதவித்தொகைய கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதேபோல், தர்மபுரி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் நடந்த போராட்டத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment