FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, January 7, 2016

உதவித்தொகை வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

05.01.2016, கிருஷ்ணகிரி: நிறுத்தப்பட்ட மாதாந்திர உதவித்தொகையை மீண்டும் வழங்க கோரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நான்கு இடங்களில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக, ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மாதாந்திர உதவித்தொகை வாங்கி வந்த பலருக்கு, உதவிக்கு தொகை வழங்குவது திடீர் என நிறுத்தப்பட்டது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, குறிப்பிட்ட சதவீதத்திற்கும் குறைவாக ஊனம் உள்ளவர்களுக்கு, மாதாந்திர உதவித்தொகை நிறுத்தப்பட்டிருக்கும் என்று தெரிவித்தனர். இந்நிலையில், நிறுத்தப்பட்ட மாதாந்திர உதவித்தொகையை மீண்டும் வழங்க கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க கிருஷ்ணகிரி மாவட்ட குழு சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி ஆகிய, நான்கு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அலுவலகம் எதிரே, நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டம் நடத்தியவர்களிடம், மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தின் தன்மை குறித்து பரிசோதனை நடத்தி, அனைவருக்கும் உதவித்தொகைய கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதேபோல், தர்மபுரி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் நடந்த போராட்டத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment