FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, January 7, 2016

உதவித்தொகை வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

05.01.2016, கிருஷ்ணகிரி: நிறுத்தப்பட்ட மாதாந்திர உதவித்தொகையை மீண்டும் வழங்க கோரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நான்கு இடங்களில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக, ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மாதாந்திர உதவித்தொகை வாங்கி வந்த பலருக்கு, உதவிக்கு தொகை வழங்குவது திடீர் என நிறுத்தப்பட்டது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, குறிப்பிட்ட சதவீதத்திற்கும் குறைவாக ஊனம் உள்ளவர்களுக்கு, மாதாந்திர உதவித்தொகை நிறுத்தப்பட்டிருக்கும் என்று தெரிவித்தனர். இந்நிலையில், நிறுத்தப்பட்ட மாதாந்திர உதவித்தொகையை மீண்டும் வழங்க கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க கிருஷ்ணகிரி மாவட்ட குழு சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி ஆகிய, நான்கு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அலுவலகம் எதிரே, நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டம் நடத்தியவர்களிடம், மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தின் தன்மை குறித்து பரிசோதனை நடத்தி, அனைவருக்கும் உதவித்தொகைய கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதேபோல், தர்மபுரி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் நடந்த போராட்டத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment