FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, January 30, 2016

சைகை மொழி அகராதி பிப்., 5ம் தேதி வெளியீடு

29.01.2016, பெ.நா.பாளையம்: வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளிகளுக்கான, ஆங்கிலம்- - இந்தி சைகை மொழி அகராதியை, சுவாமி விவேகானந்தா பல்கலை தயாரித்துள்ளது.

கோவை, பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய வளாகத்தில், சுவாமி விவேகானந்தா பல்கலை செயல்படுகிறது. இங்கு, மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு, சிறப்பு கல்வியை பாடமாக கொண்ட பட்டயம், பட்டப்படிப்புகள் உள்ளன.

கடந்த, 2001ல், வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளிகளுக்கு, ஆங்கில சைகை மொழி அகராதி வெளியிடப்பட்டது. 2015 பிப்., மாதம், தமிழகத்தில் உள்ளவர்களுக்காக, ஆங்கிலம்- - தமிழ் சைகை மொழி அகராதி வெளியிடப்பட்டது. தற்போது, ஆங்கிலம் -- இந்தி சைகை மொழி அகராதி தயாரிக்கப்பட்டுள்ளது.

சுவாமி விவேகானந்தா பல்கலையினர் கூறுகையில், 'இந்தி பேசும் மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப, தேவையான இடங்களில், ஏற்கனவே உள்ள சைகை மொழியில், சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 524 பக்கம் உடைய அகராதியில், 1,500க்கும் மேற்பட்ட சைகைகள் இடம் பெற்றுள்ளன. பிப்., 5ல் நடக்கும் விழாவில் அகராதி வெளியிடப்படுகிறது' என்றனர்.

No comments:

Post a Comment