FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, January 30, 2016

சைகை மொழி அகராதி பிப்., 5ம் தேதி வெளியீடு

29.01.2016, பெ.நா.பாளையம்: வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளிகளுக்கான, ஆங்கிலம்- - இந்தி சைகை மொழி அகராதியை, சுவாமி விவேகானந்தா பல்கலை தயாரித்துள்ளது.

கோவை, பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய வளாகத்தில், சுவாமி விவேகானந்தா பல்கலை செயல்படுகிறது. இங்கு, மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு, சிறப்பு கல்வியை பாடமாக கொண்ட பட்டயம், பட்டப்படிப்புகள் உள்ளன.

கடந்த, 2001ல், வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளிகளுக்கு, ஆங்கில சைகை மொழி அகராதி வெளியிடப்பட்டது. 2015 பிப்., மாதம், தமிழகத்தில் உள்ளவர்களுக்காக, ஆங்கிலம்- - தமிழ் சைகை மொழி அகராதி வெளியிடப்பட்டது. தற்போது, ஆங்கிலம் -- இந்தி சைகை மொழி அகராதி தயாரிக்கப்பட்டுள்ளது.

சுவாமி விவேகானந்தா பல்கலையினர் கூறுகையில், 'இந்தி பேசும் மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப, தேவையான இடங்களில், ஏற்கனவே உள்ள சைகை மொழியில், சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 524 பக்கம் உடைய அகராதியில், 1,500க்கும் மேற்பட்ட சைகைகள் இடம் பெற்றுள்ளன. பிப்., 5ல் நடக்கும் விழாவில் அகராதி வெளியிடப்படுகிறது' என்றனர்.

No comments:

Post a Comment