FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, January 30, 2016

சைகை மொழி அகராதி பிப்., 5ம் தேதி வெளியீடு

29.01.2016, பெ.நா.பாளையம்: வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளிகளுக்கான, ஆங்கிலம்- - இந்தி சைகை மொழி அகராதியை, சுவாமி விவேகானந்தா பல்கலை தயாரித்துள்ளது.

கோவை, பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய வளாகத்தில், சுவாமி விவேகானந்தா பல்கலை செயல்படுகிறது. இங்கு, மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு, சிறப்பு கல்வியை பாடமாக கொண்ட பட்டயம், பட்டப்படிப்புகள் உள்ளன.

கடந்த, 2001ல், வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளிகளுக்கு, ஆங்கில சைகை மொழி அகராதி வெளியிடப்பட்டது. 2015 பிப்., மாதம், தமிழகத்தில் உள்ளவர்களுக்காக, ஆங்கிலம்- - தமிழ் சைகை மொழி அகராதி வெளியிடப்பட்டது. தற்போது, ஆங்கிலம் -- இந்தி சைகை மொழி அகராதி தயாரிக்கப்பட்டுள்ளது.

சுவாமி விவேகானந்தா பல்கலையினர் கூறுகையில், 'இந்தி பேசும் மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப, தேவையான இடங்களில், ஏற்கனவே உள்ள சைகை மொழியில், சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 524 பக்கம் உடைய அகராதியில், 1,500க்கும் மேற்பட்ட சைகைகள் இடம் பெற்றுள்ளன. பிப்., 5ல் நடக்கும் விழாவில் அகராதி வெளியிடப்படுகிறது' என்றனர்.

No comments:

Post a Comment