FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, January 30, 2016

போலீசாரின் தவறால் மாற்றுத்திறனாளிகள் கைது

27.01.2016, முதல்வர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளிகளை, போராட்டம் நடத்த வந்ததாக கருதி, போலீசார் கைது செய்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற, அனைத்து மாற்றுத்திறன் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், விரைவில் பணி நியமன ஆணை வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான, 3 சதவீத இட ஒதுக்கீட்டை, முழுமையாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் மனு கொடுக்க, அனைத்து மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், 16 மாற்றுத் திறனாளிகள், நேற்று காலை, தலைமைச் செயலகம் வந்தனர்.அவர்கள் தலைமை செயலகம் முன், தவழ்ந்து செல்லும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தகவல் பரவியது.அதை நம்பி, தலைமைச் செயலகம் முன், பஸ்சில் இருந்து இறங்கிய, மாற்றுத் திறனாளிகள் 16 பேரையும், போலீசார் கைது செய்து, சமுதாய கூடத்தில் தங்க வைத்தனர். போலீசார், எதற்கு கைது செய்கின்றனர் எனத் தெரியாமல் தவித்த மாற்றுத்திறனாளிகளிடம், போலீசார், கைதுக்கான காரணத்தை தெரிவித்தனர்.அதை கேட்டு மாற்றுத் திறனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். மனு கொடுக்க வந்த விவரத்தை தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, மூன்று பேரை மட்டும், போலீசார் தலைமை செயலகம் அழைத்து சென்று, முதல்வர் அலுவலகத்தில், மனு கொடுக்க வைத்தனர்.கைதான மாற்றுத் திறனாளிகளுக்கு, குடிநீர், உணவு வழங்கப்படாததால், அவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment