FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, January 30, 2016

போலீசாரின் தவறால் மாற்றுத்திறனாளிகள் கைது

27.01.2016, முதல்வர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளிகளை, போராட்டம் நடத்த வந்ததாக கருதி, போலீசார் கைது செய்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற, அனைத்து மாற்றுத்திறன் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், விரைவில் பணி நியமன ஆணை வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான, 3 சதவீத இட ஒதுக்கீட்டை, முழுமையாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் மனு கொடுக்க, அனைத்து மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், 16 மாற்றுத் திறனாளிகள், நேற்று காலை, தலைமைச் செயலகம் வந்தனர்.அவர்கள் தலைமை செயலகம் முன், தவழ்ந்து செல்லும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தகவல் பரவியது.அதை நம்பி, தலைமைச் செயலகம் முன், பஸ்சில் இருந்து இறங்கிய, மாற்றுத் திறனாளிகள் 16 பேரையும், போலீசார் கைது செய்து, சமுதாய கூடத்தில் தங்க வைத்தனர். போலீசார், எதற்கு கைது செய்கின்றனர் எனத் தெரியாமல் தவித்த மாற்றுத்திறனாளிகளிடம், போலீசார், கைதுக்கான காரணத்தை தெரிவித்தனர்.அதை கேட்டு மாற்றுத் திறனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். மனு கொடுக்க வந்த விவரத்தை தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, மூன்று பேரை மட்டும், போலீசார் தலைமை செயலகம் அழைத்து சென்று, முதல்வர் அலுவலகத்தில், மனு கொடுக்க வைத்தனர்.கைதான மாற்றுத் திறனாளிகளுக்கு, குடிநீர், உணவு வழங்கப்படாததால், அவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment