FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, January 7, 2016

சென்னை அடையாறு கால்வாய் சாலை செயின்ட் லூயிஸ் மாற்றுத்திறனாளிகள் பள்ளியின் வளாகத்தில் ரியாத் தமிழ்ச் சங்க வெள்ள நிவாரண உதவி நிறைவு விழா


ரியாத்: ரியாத் தமிழ்ச் சங்க வெள்ள நிவாரண உதவி நிறைவு விழா சென்னையில் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. ரியாத்வாழ் தமிழர்கள் வழங்கிய 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ள நிவாரண உதவிகளை அளித்துள்ளனர். ரியாத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு சென்ற திரு. ஜமால் சேட் அவர்களின் தலைமையில் 25 தன்னார்வலர்கள் கடந்த ஒரு மாதகாலமாக சென்னை மற்றும் கடலூரில் களப்பணியாற்றினர். இந்நிலையில் களப்பணியின் நிறைவாக சென்னை அடையாறு கால்வாய் சாலை செயின்ட் லூயிஸ் மாற்றுத்திறனாளிகள் பள்ளியின் வளாகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழித்திறன் மற்றும் செவித்திறன் இழந்த மாணவர்களுக்கு உதவியதோடு தன்னார்வலர்களை பாராட்டுமுகமாக 03-01-2016 அன்று ரியாத் தமிழ்ச் சங்கம் சார்பாக ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. 

அதில் சிறப்பு விருந்தினர்களாக கீழ்க்கண்டோர் கலந்து கொண்டு தன்னார்வலர்களை பாராட்டி ரியாத் தமிழ்ச் சங்கம் சார்பாக கேடயம் கொடுத்து கவுரவித்து சொற்பொழிவாற்றினார்கள். திரு. மணி (சென்னை காவல்துறை கண்காணிப்பாளர், மனித உரிமை மற்றும் சமுதாய சேவைப்பிரிவு) திரு. ஜெயம்சுப்ரமண்யம் (சென்னை காவல் உதவி ஆணையர், புளியந்தோப்பு) திரு. பிரபு (108 சேவை மைய இயக்குனர்) திரு. ஜான்லியோ (சென்னை காவல்துறை ஆணையர், எஸ்பிசிஐடி) திரு. அமீர் (திரைப்பட இயக்குனர், சமூக ஆர்வலர்) கவிஞர். சிநேகன் (திரைப்பட பாடலாசிரியர், சமூக ஆர்வலர்) திரு. சுப்பு பஞ்சுஅருணாச்சலம் (திரைப்பட நடிகர், சமூக ஆர்வலர்) திரு. ஆளூர் ஷாநவாஸ் (விடுதலை சிறுத்தை கட்சி, சமூக ஆர்வலர்) கவிஞர். இனியவன் (பட்டிமன்ற பேச்சாளர், சமூக ஆர்வலர்) திரு. தேவசபாபதி (கனடா தமிழ்ச் சங்கம்) திரு. ரொனால்ட் (கனடா தமிழ்ச் சங்கம்) பொறியாளர். முக்ரீன் ஜமால் (திரு. ஜமால் சேட் அவர்களின் சகோதரர் மற்றும் சமூக ஆர்வலர்) நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு. ஜமால் சேட் (ரியாத் தமிழ்ச் சங்கம்) வரவேற்புரை : திரு. முஹம்மது ஷரீஃப் (ரியாத் தமிழ்ச் சங்கம்)


No comments:

Post a Comment