FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, January 7, 2016

சென்னை அடையாறு கால்வாய் சாலை செயின்ட் லூயிஸ் மாற்றுத்திறனாளிகள் பள்ளியின் வளாகத்தில் ரியாத் தமிழ்ச் சங்க வெள்ள நிவாரண உதவி நிறைவு விழா


ரியாத்: ரியாத் தமிழ்ச் சங்க வெள்ள நிவாரண உதவி நிறைவு விழா சென்னையில் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. ரியாத்வாழ் தமிழர்கள் வழங்கிய 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ள நிவாரண உதவிகளை அளித்துள்ளனர். ரியாத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு சென்ற திரு. ஜமால் சேட் அவர்களின் தலைமையில் 25 தன்னார்வலர்கள் கடந்த ஒரு மாதகாலமாக சென்னை மற்றும் கடலூரில் களப்பணியாற்றினர். இந்நிலையில் களப்பணியின் நிறைவாக சென்னை அடையாறு கால்வாய் சாலை செயின்ட் லூயிஸ் மாற்றுத்திறனாளிகள் பள்ளியின் வளாகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழித்திறன் மற்றும் செவித்திறன் இழந்த மாணவர்களுக்கு உதவியதோடு தன்னார்வலர்களை பாராட்டுமுகமாக 03-01-2016 அன்று ரியாத் தமிழ்ச் சங்கம் சார்பாக ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. 

அதில் சிறப்பு விருந்தினர்களாக கீழ்க்கண்டோர் கலந்து கொண்டு தன்னார்வலர்களை பாராட்டி ரியாத் தமிழ்ச் சங்கம் சார்பாக கேடயம் கொடுத்து கவுரவித்து சொற்பொழிவாற்றினார்கள். திரு. மணி (சென்னை காவல்துறை கண்காணிப்பாளர், மனித உரிமை மற்றும் சமுதாய சேவைப்பிரிவு) திரு. ஜெயம்சுப்ரமண்யம் (சென்னை காவல் உதவி ஆணையர், புளியந்தோப்பு) திரு. பிரபு (108 சேவை மைய இயக்குனர்) திரு. ஜான்லியோ (சென்னை காவல்துறை ஆணையர், எஸ்பிசிஐடி) திரு. அமீர் (திரைப்பட இயக்குனர், சமூக ஆர்வலர்) கவிஞர். சிநேகன் (திரைப்பட பாடலாசிரியர், சமூக ஆர்வலர்) திரு. சுப்பு பஞ்சுஅருணாச்சலம் (திரைப்பட நடிகர், சமூக ஆர்வலர்) திரு. ஆளூர் ஷாநவாஸ் (விடுதலை சிறுத்தை கட்சி, சமூக ஆர்வலர்) கவிஞர். இனியவன் (பட்டிமன்ற பேச்சாளர், சமூக ஆர்வலர்) திரு. தேவசபாபதி (கனடா தமிழ்ச் சங்கம்) திரு. ரொனால்ட் (கனடா தமிழ்ச் சங்கம்) பொறியாளர். முக்ரீன் ஜமால் (திரு. ஜமால் சேட் அவர்களின் சகோதரர் மற்றும் சமூக ஆர்வலர்) நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு. ஜமால் சேட் (ரியாத் தமிழ்ச் சங்கம்) வரவேற்புரை : திரு. முஹம்மது ஷரீஃப் (ரியாத் தமிழ்ச் சங்கம்)


No comments:

Post a Comment