FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, January 7, 2016

சென்னை அடையாறு கால்வாய் சாலை செயின்ட் லூயிஸ் மாற்றுத்திறனாளிகள் பள்ளியின் வளாகத்தில் ரியாத் தமிழ்ச் சங்க வெள்ள நிவாரண உதவி நிறைவு விழா


ரியாத்: ரியாத் தமிழ்ச் சங்க வெள்ள நிவாரண உதவி நிறைவு விழா சென்னையில் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. ரியாத்வாழ் தமிழர்கள் வழங்கிய 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ள நிவாரண உதவிகளை அளித்துள்ளனர். ரியாத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு சென்ற திரு. ஜமால் சேட் அவர்களின் தலைமையில் 25 தன்னார்வலர்கள் கடந்த ஒரு மாதகாலமாக சென்னை மற்றும் கடலூரில் களப்பணியாற்றினர். இந்நிலையில் களப்பணியின் நிறைவாக சென்னை அடையாறு கால்வாய் சாலை செயின்ட் லூயிஸ் மாற்றுத்திறனாளிகள் பள்ளியின் வளாகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழித்திறன் மற்றும் செவித்திறன் இழந்த மாணவர்களுக்கு உதவியதோடு தன்னார்வலர்களை பாராட்டுமுகமாக 03-01-2016 அன்று ரியாத் தமிழ்ச் சங்கம் சார்பாக ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. 

அதில் சிறப்பு விருந்தினர்களாக கீழ்க்கண்டோர் கலந்து கொண்டு தன்னார்வலர்களை பாராட்டி ரியாத் தமிழ்ச் சங்கம் சார்பாக கேடயம் கொடுத்து கவுரவித்து சொற்பொழிவாற்றினார்கள். திரு. மணி (சென்னை காவல்துறை கண்காணிப்பாளர், மனித உரிமை மற்றும் சமுதாய சேவைப்பிரிவு) திரு. ஜெயம்சுப்ரமண்யம் (சென்னை காவல் உதவி ஆணையர், புளியந்தோப்பு) திரு. பிரபு (108 சேவை மைய இயக்குனர்) திரு. ஜான்லியோ (சென்னை காவல்துறை ஆணையர், எஸ்பிசிஐடி) திரு. அமீர் (திரைப்பட இயக்குனர், சமூக ஆர்வலர்) கவிஞர். சிநேகன் (திரைப்பட பாடலாசிரியர், சமூக ஆர்வலர்) திரு. சுப்பு பஞ்சுஅருணாச்சலம் (திரைப்பட நடிகர், சமூக ஆர்வலர்) திரு. ஆளூர் ஷாநவாஸ் (விடுதலை சிறுத்தை கட்சி, சமூக ஆர்வலர்) கவிஞர். இனியவன் (பட்டிமன்ற பேச்சாளர், சமூக ஆர்வலர்) திரு. தேவசபாபதி (கனடா தமிழ்ச் சங்கம்) திரு. ரொனால்ட் (கனடா தமிழ்ச் சங்கம்) பொறியாளர். முக்ரீன் ஜமால் (திரு. ஜமால் சேட் அவர்களின் சகோதரர் மற்றும் சமூக ஆர்வலர்) நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு. ஜமால் சேட் (ரியாத் தமிழ்ச் சங்கம்) வரவேற்புரை : திரு. முஹம்மது ஷரீஃப் (ரியாத் தமிழ்ச் சங்கம்)


No comments:

Post a Comment