FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, November 3, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச திரைப்பட விழா டிச. 1-இல் தொடக்கம்

புது தில்லி, 03 November 2015
மாற்றுத் திறனாளிகளுக்கான முதலாவது மூன்று நாள் சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்குகிறது.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகராமளித்தல் அமைச்சகம் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த விழாவில் மாற்றுத்திறனாளிகள் தொடர்புடைய பல்வேறு பிரிவுகளில் 40 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

டிசம்பர் 3-ஆம் தேதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாற்றுத்திறனாளிகள் பங்களிப்பை கெüரவிக்கும் வகையில் தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்துடன் (என்எஃப்டிசி) இணைந்து இந்த விழாவை நடத்தும் கருத்தாக்கம் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

மூன்று நாள் நடைபெறும் திரைப்பட விழாவில் வெவ்வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்ட 10 சலனப் படங்கள், 16 குறும்படங்கள், 14 ஆவணப்படங்கள் என மொத்தம் 40 படங்கள் திரையிடப்பட உள்ளன. இது குறித்து மத்திய மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறையின் செயலர் லவ் வர்மா கூறியதாவது:

மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து தேர்வுக்கு வரப்பெற்ற 541 படங்களில் இருந்து 40 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதற்கான தேர்வு என்எஃப்டிசி மூலம் மேற்கொள்ளப்பட்டது. சலனப்படம், குறும்படம், ஆவணப்படங்கள் என மூன்று பிரிவுகளில் படங்கள் தேர்வுக்குப் பரிசீலிக்கப்பட்டன.

டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கும் திரைப்பட விழா 3-ஆம் தேதி முடிவடைகிறது. மாற்றுத்திறனாளிகள் அளித்துள்ள பங்களிப்பை கெüரவிக்கும் வகையில் இந்தத் திரைப்பட விழா அமையும்.

மேலும், மாற்றுத் திறனாளிகள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளை சுட்டிக்காட்டவும், அவர்கள் தினமும் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளை எவ்வாறு சமாளிக்கின்றனர் என்பதும் குறித்து எடுத்துக்காட்டும் களமாக இந்த விழா இருக்கும். மேலும், இந்த விழாவில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விவாத நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட உள்ளன.

விழாவின்போது ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த இயக்குநர், திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு ரொக்கப் பரிசு வழங்கப்படும். முதல் இரு இடங்களைப் பெறுவோருக்கு மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் சான்றிதழ் மற்றும் சுழற்கேடயம் வழங்கப்படும் என்றார் லவ் சர்மா.

No comments:

Post a Comment