FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Tuesday, November 3, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச திரைப்பட விழா டிச. 1-இல் தொடக்கம்

புது தில்லி, 03 November 2015
மாற்றுத் திறனாளிகளுக்கான முதலாவது மூன்று நாள் சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்குகிறது.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகராமளித்தல் அமைச்சகம் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த விழாவில் மாற்றுத்திறனாளிகள் தொடர்புடைய பல்வேறு பிரிவுகளில் 40 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

டிசம்பர் 3-ஆம் தேதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாற்றுத்திறனாளிகள் பங்களிப்பை கெüரவிக்கும் வகையில் தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்துடன் (என்எஃப்டிசி) இணைந்து இந்த விழாவை நடத்தும் கருத்தாக்கம் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

மூன்று நாள் நடைபெறும் திரைப்பட விழாவில் வெவ்வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்ட 10 சலனப் படங்கள், 16 குறும்படங்கள், 14 ஆவணப்படங்கள் என மொத்தம் 40 படங்கள் திரையிடப்பட உள்ளன. இது குறித்து மத்திய மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறையின் செயலர் லவ் வர்மா கூறியதாவது:

மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து தேர்வுக்கு வரப்பெற்ற 541 படங்களில் இருந்து 40 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதற்கான தேர்வு என்எஃப்டிசி மூலம் மேற்கொள்ளப்பட்டது. சலனப்படம், குறும்படம், ஆவணப்படங்கள் என மூன்று பிரிவுகளில் படங்கள் தேர்வுக்குப் பரிசீலிக்கப்பட்டன.

டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கும் திரைப்பட விழா 3-ஆம் தேதி முடிவடைகிறது. மாற்றுத்திறனாளிகள் அளித்துள்ள பங்களிப்பை கெüரவிக்கும் வகையில் இந்தத் திரைப்பட விழா அமையும்.

மேலும், மாற்றுத் திறனாளிகள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளை சுட்டிக்காட்டவும், அவர்கள் தினமும் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளை எவ்வாறு சமாளிக்கின்றனர் என்பதும் குறித்து எடுத்துக்காட்டும் களமாக இந்த விழா இருக்கும். மேலும், இந்த விழாவில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விவாத நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட உள்ளன.

விழாவின்போது ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த இயக்குநர், திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு ரொக்கப் பரிசு வழங்கப்படும். முதல் இரு இடங்களைப் பெறுவோருக்கு மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் சான்றிதழ் மற்றும் சுழற்கேடயம் வழங்கப்படும் என்றார் லவ் சர்மா.

No comments:

Post a Comment