FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, November 3, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச திரைப்பட விழா டிச. 1-இல் தொடக்கம்

புது தில்லி, 03 November 2015
மாற்றுத் திறனாளிகளுக்கான முதலாவது மூன்று நாள் சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்குகிறது.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகராமளித்தல் அமைச்சகம் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த விழாவில் மாற்றுத்திறனாளிகள் தொடர்புடைய பல்வேறு பிரிவுகளில் 40 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

டிசம்பர் 3-ஆம் தேதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாற்றுத்திறனாளிகள் பங்களிப்பை கெüரவிக்கும் வகையில் தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்துடன் (என்எஃப்டிசி) இணைந்து இந்த விழாவை நடத்தும் கருத்தாக்கம் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

மூன்று நாள் நடைபெறும் திரைப்பட விழாவில் வெவ்வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்ட 10 சலனப் படங்கள், 16 குறும்படங்கள், 14 ஆவணப்படங்கள் என மொத்தம் 40 படங்கள் திரையிடப்பட உள்ளன. இது குறித்து மத்திய மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறையின் செயலர் லவ் வர்மா கூறியதாவது:

மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து தேர்வுக்கு வரப்பெற்ற 541 படங்களில் இருந்து 40 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதற்கான தேர்வு என்எஃப்டிசி மூலம் மேற்கொள்ளப்பட்டது. சலனப்படம், குறும்படம், ஆவணப்படங்கள் என மூன்று பிரிவுகளில் படங்கள் தேர்வுக்குப் பரிசீலிக்கப்பட்டன.

டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கும் திரைப்பட விழா 3-ஆம் தேதி முடிவடைகிறது. மாற்றுத்திறனாளிகள் அளித்துள்ள பங்களிப்பை கெüரவிக்கும் வகையில் இந்தத் திரைப்பட விழா அமையும்.

மேலும், மாற்றுத் திறனாளிகள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளை சுட்டிக்காட்டவும், அவர்கள் தினமும் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளை எவ்வாறு சமாளிக்கின்றனர் என்பதும் குறித்து எடுத்துக்காட்டும் களமாக இந்த விழா இருக்கும். மேலும், இந்த விழாவில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விவாத நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட உள்ளன.

விழாவின்போது ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த இயக்குநர், திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு ரொக்கப் பரிசு வழங்கப்படும். முதல் இரு இடங்களைப் பெறுவோருக்கு மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் சான்றிதழ் மற்றும் சுழற்கேடயம் வழங்கப்படும் என்றார் லவ் சர்மா.

No comments:

Post a Comment