FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, November 3, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச திரைப்பட விழா டிச. 1-இல் தொடக்கம்

புது தில்லி, 03 November 2015
மாற்றுத் திறனாளிகளுக்கான முதலாவது மூன்று நாள் சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்குகிறது.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகராமளித்தல் அமைச்சகம் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த விழாவில் மாற்றுத்திறனாளிகள் தொடர்புடைய பல்வேறு பிரிவுகளில் 40 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

டிசம்பர் 3-ஆம் தேதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாற்றுத்திறனாளிகள் பங்களிப்பை கெüரவிக்கும் வகையில் தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்துடன் (என்எஃப்டிசி) இணைந்து இந்த விழாவை நடத்தும் கருத்தாக்கம் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

மூன்று நாள் நடைபெறும் திரைப்பட விழாவில் வெவ்வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்ட 10 சலனப் படங்கள், 16 குறும்படங்கள், 14 ஆவணப்படங்கள் என மொத்தம் 40 படங்கள் திரையிடப்பட உள்ளன. இது குறித்து மத்திய மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறையின் செயலர் லவ் வர்மா கூறியதாவது:

மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து தேர்வுக்கு வரப்பெற்ற 541 படங்களில் இருந்து 40 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதற்கான தேர்வு என்எஃப்டிசி மூலம் மேற்கொள்ளப்பட்டது. சலனப்படம், குறும்படம், ஆவணப்படங்கள் என மூன்று பிரிவுகளில் படங்கள் தேர்வுக்குப் பரிசீலிக்கப்பட்டன.

டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கும் திரைப்பட விழா 3-ஆம் தேதி முடிவடைகிறது. மாற்றுத்திறனாளிகள் அளித்துள்ள பங்களிப்பை கெüரவிக்கும் வகையில் இந்தத் திரைப்பட விழா அமையும்.

மேலும், மாற்றுத் திறனாளிகள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளை சுட்டிக்காட்டவும், அவர்கள் தினமும் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளை எவ்வாறு சமாளிக்கின்றனர் என்பதும் குறித்து எடுத்துக்காட்டும் களமாக இந்த விழா இருக்கும். மேலும், இந்த விழாவில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விவாத நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட உள்ளன.

விழாவின்போது ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த இயக்குநர், திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு ரொக்கப் பரிசு வழங்கப்படும். முதல் இரு இடங்களைப் பெறுவோருக்கு மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் சான்றிதழ் மற்றும் சுழற்கேடயம் வழங்கப்படும் என்றார் லவ் சர்மா.

No comments:

Post a Comment