FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, November 16, 2015

வாய் பேச முடியாதவரின் கைவண்ணத்தில் பேசும் ஓவியங்கள்

15.11.2015
பாளையங்கோட்டை கோமதி அம்பாள் சமேத திரிபுராந்தீஸ்வரர் கோயிலில், நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்களின் உயிரூட்டமான ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன.

கண்ணில் எடுத்து ஒற்றிக்கொள்ளத் தோணும் வகையிலான இந்த ஓவியங்களை வரைந்தவர் ஓவியர் எஸ்.மாலையப்பன் (63). இவர் காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி என்பதுதான் ஆச்சரியம்.

பாளையங்கோட்டை, செந்தில் நகரில் தனது மனைவி செல்லம்மாள் (62) மற்றும் 4 பிள்ளைகளுடன் வசிக்கும் மாலையப்பனின் பூர்வீகம், தூத்துக்குடி மாவட்டம் புதியமுத்தூர். பிறவியிலேயே வாய்பேசாத முடியாது. இந்த குறையை நிறையாக்கி, உலகம் உற்றுநோக்க வைத்தது இவரது ஓவியப்படைப்புகள்.

பாளையங்கோட்டை காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். பின்னர் கோவில்பட்டியில் சி.கொண்டையராஜு, டி.எஸ்.சுப்பையா, டி.எம்.ராமலிங்கம் ஆகியோரிடம் ஓவியக்கலையைக் கற்றார். 10 ஆண்டுகள் இவர்களிடம் பெற்ற பயிற்சிக்குப் பின், தெய்வச்சித்திரங்கள் வரையும் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.

சிவகாசி காலண்டர் நிறுவனங்களுக்கு தெய்வ உருவங்களை தத்ரூபமாக வரைந்து அளித்தார். இதுபோல் லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் போன்ற பல்வேறு படக்கதை புத்தகங்களுக்கும் ஓவியங்களை வரைந்து அளித்தார். புத்தகங்களில் அட்டைப் படங்களுக்கு தெய்வ உருவங்களையும் வரைந்துள்ளார்.

தற்போது இந்து கோயில்களுக்கு தெய்வ உருவங்களை வரைந்து அளிக்கும் பணியில் முழுமூச்சுடன் ஈடுபட்டுள்ளார்.



பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள 63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்களின் சித்திரங்களை ஒன்றரை ஆண்டு களாக வரைந்து முடித்தி ருந்தார். இந்த ஓவியங்கள் கடந்த 18.9.2005-ம் தேதி பக்தர்கள் தரிசிக்க திறந்து வைக்கப்பட்டன. இதுபோல் பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி கோயிலிலும் 6 பெரிய சுவாமி படங்களை வரைந்திருக்கிறார்.

ஓவியர் மாலையப்பனிடம் கேள்விகளை எழுதி காண்பிக்க, அவரும் பதில்களை எழுதி அளித்தார். `தெய்வீக சிந்தனையுடன் ஓவியங்களை வரையும்போது மனசுக்குள் தெய்வீக களை தாண்டவமாடும். இதை வெளியில் சொல்லமுடியாது. இரவில் தூங்கும்போது கனவில் சிவபெருமான் மற்றும் கிருஷ்ண பரமாத்மாவை தரிசித்திருக்கிறேன். என்னிடம் காசு, பணம் பெரிதாக சேரவில்லை. ஆனால் தெய்வ அருள் இருக்கிறது. நிம்மதியுடன் இருக்கிறேன். நான் வியாபாரத்துக்காக விளம்பர பெயர் பலகைகளை எழுதி தருவதில்லை’ என்று அவர் எழுதி தந்த பதில் வியப்பூட்டியது.

இவர் சிவன் கோயிலில் வரைந்துள்ள ஓவியங்களையும், அந்தந்த நாயன்மார்கள் குறித்த விவரங்களையும் தொகுத்து சிவனருளே சித்தாந்த அடியார்கள் என்ற தலைப்பில் வண்ணப்புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள். தெய்வச் சித்திரம், சிற்ப ஓவியம், தஞ்சாவூர் ஓவியம் என்றெல்லாம் கைவண்ணம் காட்டும் இந்த மாற்றுத்திறனாளி தனது ஓவியங்கள் மூலம் பேசிக்கொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment