FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, November 16, 2015

வாய் பேச முடியாதவரின் கைவண்ணத்தில் பேசும் ஓவியங்கள்

15.11.2015
பாளையங்கோட்டை கோமதி அம்பாள் சமேத திரிபுராந்தீஸ்வரர் கோயிலில், நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்களின் உயிரூட்டமான ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன.

கண்ணில் எடுத்து ஒற்றிக்கொள்ளத் தோணும் வகையிலான இந்த ஓவியங்களை வரைந்தவர் ஓவியர் எஸ்.மாலையப்பன் (63). இவர் காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி என்பதுதான் ஆச்சரியம்.

பாளையங்கோட்டை, செந்தில் நகரில் தனது மனைவி செல்லம்மாள் (62) மற்றும் 4 பிள்ளைகளுடன் வசிக்கும் மாலையப்பனின் பூர்வீகம், தூத்துக்குடி மாவட்டம் புதியமுத்தூர். பிறவியிலேயே வாய்பேசாத முடியாது. இந்த குறையை நிறையாக்கி, உலகம் உற்றுநோக்க வைத்தது இவரது ஓவியப்படைப்புகள்.

பாளையங்கோட்டை காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். பின்னர் கோவில்பட்டியில் சி.கொண்டையராஜு, டி.எஸ்.சுப்பையா, டி.எம்.ராமலிங்கம் ஆகியோரிடம் ஓவியக்கலையைக் கற்றார். 10 ஆண்டுகள் இவர்களிடம் பெற்ற பயிற்சிக்குப் பின், தெய்வச்சித்திரங்கள் வரையும் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.

சிவகாசி காலண்டர் நிறுவனங்களுக்கு தெய்வ உருவங்களை தத்ரூபமாக வரைந்து அளித்தார். இதுபோல் லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் போன்ற பல்வேறு படக்கதை புத்தகங்களுக்கும் ஓவியங்களை வரைந்து அளித்தார். புத்தகங்களில் அட்டைப் படங்களுக்கு தெய்வ உருவங்களையும் வரைந்துள்ளார்.

தற்போது இந்து கோயில்களுக்கு தெய்வ உருவங்களை வரைந்து அளிக்கும் பணியில் முழுமூச்சுடன் ஈடுபட்டுள்ளார்.



பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள 63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்களின் சித்திரங்களை ஒன்றரை ஆண்டு களாக வரைந்து முடித்தி ருந்தார். இந்த ஓவியங்கள் கடந்த 18.9.2005-ம் தேதி பக்தர்கள் தரிசிக்க திறந்து வைக்கப்பட்டன. இதுபோல் பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி கோயிலிலும் 6 பெரிய சுவாமி படங்களை வரைந்திருக்கிறார்.

ஓவியர் மாலையப்பனிடம் கேள்விகளை எழுதி காண்பிக்க, அவரும் பதில்களை எழுதி அளித்தார். `தெய்வீக சிந்தனையுடன் ஓவியங்களை வரையும்போது மனசுக்குள் தெய்வீக களை தாண்டவமாடும். இதை வெளியில் சொல்லமுடியாது. இரவில் தூங்கும்போது கனவில் சிவபெருமான் மற்றும் கிருஷ்ண பரமாத்மாவை தரிசித்திருக்கிறேன். என்னிடம் காசு, பணம் பெரிதாக சேரவில்லை. ஆனால் தெய்வ அருள் இருக்கிறது. நிம்மதியுடன் இருக்கிறேன். நான் வியாபாரத்துக்காக விளம்பர பெயர் பலகைகளை எழுதி தருவதில்லை’ என்று அவர் எழுதி தந்த பதில் வியப்பூட்டியது.

இவர் சிவன் கோயிலில் வரைந்துள்ள ஓவியங்களையும், அந்தந்த நாயன்மார்கள் குறித்த விவரங்களையும் தொகுத்து சிவனருளே சித்தாந்த அடியார்கள் என்ற தலைப்பில் வண்ணப்புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள். தெய்வச் சித்திரம், சிற்ப ஓவியம், தஞ்சாவூர் ஓவியம் என்றெல்லாம் கைவண்ணம் காட்டும் இந்த மாற்றுத்திறனாளி தனது ஓவியங்கள் மூலம் பேசிக்கொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment