FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Sunday, November 15, 2015

ரூ. 5 லட்சத்தில் காதுகேட்கும் திறன் அறியும் மையம்: ஆட்சியர்

திருநெல்வேலி, 15 November 2015
திருநெல்வேலியில் ரூ. 5 லட்சம் மதிப்பில் காதுகேட்கும் திறன் கண்டறியும் மையம் விரைவில் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் தெரிவித்தார்.

பாளையங்கோட்டையில் பிஷப் சார்ஜென்ட் மன வளர்ச்சிக் குன்றியோர் பள்ளியில்

கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கு எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை திறந்துவைத்து ஆட்சியர் மு. கருணாகரன் பேசியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 33,238 மாற்றுத் திறனாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,500 வீதம் உதவித்தொகையும், தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்ட 118 பேருக்கு மாதம் ரூ. 1,500 வீதம் உதவித்தொகையும், மேலும் 8,238 பயனாளிகளுக்கு மாதம் தலா ரூ. 1,000 வீதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி, கண்ணாடி போன்றவை வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ. 5 லட்சத்தில் காது கேட்கும் திறன் குறித்து கண்டறியும் மையம் விரைவில் அமைக்கப்பட உள்ளது என்றார் அவர்.

இவ்விழாவுக்கு, விஜிலாசத்யானந்த் எம்.பி. முன்னிலை வகித்தார். எம்.பி.க்கள் எஸ். முத்துக்கருப்பன், கே.ஆர்.பி. பிரபாகரன், மாநகராட்சி மேயர் இ. புவனேஸ்வரி,

திருமண்டில பேராயர் ஜெ.ஜெ. கிறிஸ்துதாஸ், துணை மேயர் பூ. ஜெகநாதன், எம்.எல்.ஏ. க்கள் நயினார்நாகேந்திரன், ச. முத்துச்செல்வி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மனோகர், மானூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கல்லூர் இ. வேலாயுதம், அக்ரோ சேர்மன் அ. மகபூப்ஜான், வழக்குரைஞர் மு. ஹரிஹரசிவசங்கர்,

பள்ளித் தாளாளர் பி. அலெக்ஸாண்டர், மாமன்ற உறுப்பினர் பரணி ஏ. சங்கரலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பதக்கம் அணிந்து பாராட்டினார்.

இனிப்பு வழங்கல்: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அங்குள்ள குழந்தைகளுக்கு ஆட்சியர் இனிப்பு வழங்கினார். ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் நலத்துறை சார்பில் இயங்கி வரும் சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு ஆட்சியர் இனிப்பு வழங்கினார். இதில் சார்- ஆட்சியர் கே.பி. கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment