FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, November 15, 2015

ரூ. 5 லட்சத்தில் காதுகேட்கும் திறன் அறியும் மையம்: ஆட்சியர்

திருநெல்வேலி, 15 November 2015
திருநெல்வேலியில் ரூ. 5 லட்சம் மதிப்பில் காதுகேட்கும் திறன் கண்டறியும் மையம் விரைவில் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் தெரிவித்தார்.

பாளையங்கோட்டையில் பிஷப் சார்ஜென்ட் மன வளர்ச்சிக் குன்றியோர் பள்ளியில்

கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கு எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை திறந்துவைத்து ஆட்சியர் மு. கருணாகரன் பேசியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 33,238 மாற்றுத் திறனாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,500 வீதம் உதவித்தொகையும், தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்ட 118 பேருக்கு மாதம் ரூ. 1,500 வீதம் உதவித்தொகையும், மேலும் 8,238 பயனாளிகளுக்கு மாதம் தலா ரூ. 1,000 வீதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி, கண்ணாடி போன்றவை வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ. 5 லட்சத்தில் காது கேட்கும் திறன் குறித்து கண்டறியும் மையம் விரைவில் அமைக்கப்பட உள்ளது என்றார் அவர்.

இவ்விழாவுக்கு, விஜிலாசத்யானந்த் எம்.பி. முன்னிலை வகித்தார். எம்.பி.க்கள் எஸ். முத்துக்கருப்பன், கே.ஆர்.பி. பிரபாகரன், மாநகராட்சி மேயர் இ. புவனேஸ்வரி,

திருமண்டில பேராயர் ஜெ.ஜெ. கிறிஸ்துதாஸ், துணை மேயர் பூ. ஜெகநாதன், எம்.எல்.ஏ. க்கள் நயினார்நாகேந்திரன், ச. முத்துச்செல்வி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மனோகர், மானூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கல்லூர் இ. வேலாயுதம், அக்ரோ சேர்மன் அ. மகபூப்ஜான், வழக்குரைஞர் மு. ஹரிஹரசிவசங்கர்,

பள்ளித் தாளாளர் பி. அலெக்ஸாண்டர், மாமன்ற உறுப்பினர் பரணி ஏ. சங்கரலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பதக்கம் அணிந்து பாராட்டினார்.

இனிப்பு வழங்கல்: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அங்குள்ள குழந்தைகளுக்கு ஆட்சியர் இனிப்பு வழங்கினார். ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் நலத்துறை சார்பில் இயங்கி வரும் சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு ஆட்சியர் இனிப்பு வழங்கினார். இதில் சார்- ஆட்சியர் கே.பி. கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment