FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Sunday, November 15, 2015

ரூ. 5 லட்சத்தில் காதுகேட்கும் திறன் அறியும் மையம்: ஆட்சியர்

திருநெல்வேலி, 15 November 2015
திருநெல்வேலியில் ரூ. 5 லட்சம் மதிப்பில் காதுகேட்கும் திறன் கண்டறியும் மையம் விரைவில் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் தெரிவித்தார்.

பாளையங்கோட்டையில் பிஷப் சார்ஜென்ட் மன வளர்ச்சிக் குன்றியோர் பள்ளியில்

கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கு எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை திறந்துவைத்து ஆட்சியர் மு. கருணாகரன் பேசியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 33,238 மாற்றுத் திறனாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,500 வீதம் உதவித்தொகையும், தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்ட 118 பேருக்கு மாதம் ரூ. 1,500 வீதம் உதவித்தொகையும், மேலும் 8,238 பயனாளிகளுக்கு மாதம் தலா ரூ. 1,000 வீதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி, கண்ணாடி போன்றவை வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ. 5 லட்சத்தில் காது கேட்கும் திறன் குறித்து கண்டறியும் மையம் விரைவில் அமைக்கப்பட உள்ளது என்றார் அவர்.

இவ்விழாவுக்கு, விஜிலாசத்யானந்த் எம்.பி. முன்னிலை வகித்தார். எம்.பி.க்கள் எஸ். முத்துக்கருப்பன், கே.ஆர்.பி. பிரபாகரன், மாநகராட்சி மேயர் இ. புவனேஸ்வரி,

திருமண்டில பேராயர் ஜெ.ஜெ. கிறிஸ்துதாஸ், துணை மேயர் பூ. ஜெகநாதன், எம்.எல்.ஏ. க்கள் நயினார்நாகேந்திரன், ச. முத்துச்செல்வி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மனோகர், மானூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கல்லூர் இ. வேலாயுதம், அக்ரோ சேர்மன் அ. மகபூப்ஜான், வழக்குரைஞர் மு. ஹரிஹரசிவசங்கர்,

பள்ளித் தாளாளர் பி. அலெக்ஸாண்டர், மாமன்ற உறுப்பினர் பரணி ஏ. சங்கரலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பதக்கம் அணிந்து பாராட்டினார்.

இனிப்பு வழங்கல்: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அங்குள்ள குழந்தைகளுக்கு ஆட்சியர் இனிப்பு வழங்கினார். ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் நலத்துறை சார்பில் இயங்கி வரும் சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு ஆட்சியர் இனிப்பு வழங்கினார். இதில் சார்- ஆட்சியர் கே.பி. கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment