FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Sunday, November 15, 2015

ரூ. 5 லட்சத்தில் காதுகேட்கும் திறன் அறியும் மையம்: ஆட்சியர்

திருநெல்வேலி, 15 November 2015
திருநெல்வேலியில் ரூ. 5 லட்சம் மதிப்பில் காதுகேட்கும் திறன் கண்டறியும் மையம் விரைவில் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் தெரிவித்தார்.

பாளையங்கோட்டையில் பிஷப் சார்ஜென்ட் மன வளர்ச்சிக் குன்றியோர் பள்ளியில்

கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கு எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை திறந்துவைத்து ஆட்சியர் மு. கருணாகரன் பேசியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 33,238 மாற்றுத் திறனாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,500 வீதம் உதவித்தொகையும், தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்ட 118 பேருக்கு மாதம் ரூ. 1,500 வீதம் உதவித்தொகையும், மேலும் 8,238 பயனாளிகளுக்கு மாதம் தலா ரூ. 1,000 வீதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி, கண்ணாடி போன்றவை வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ. 5 லட்சத்தில் காது கேட்கும் திறன் குறித்து கண்டறியும் மையம் விரைவில் அமைக்கப்பட உள்ளது என்றார் அவர்.

இவ்விழாவுக்கு, விஜிலாசத்யானந்த் எம்.பி. முன்னிலை வகித்தார். எம்.பி.க்கள் எஸ். முத்துக்கருப்பன், கே.ஆர்.பி. பிரபாகரன், மாநகராட்சி மேயர் இ. புவனேஸ்வரி,

திருமண்டில பேராயர் ஜெ.ஜெ. கிறிஸ்துதாஸ், துணை மேயர் பூ. ஜெகநாதன், எம்.எல்.ஏ. க்கள் நயினார்நாகேந்திரன், ச. முத்துச்செல்வி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மனோகர், மானூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கல்லூர் இ. வேலாயுதம், அக்ரோ சேர்மன் அ. மகபூப்ஜான், வழக்குரைஞர் மு. ஹரிஹரசிவசங்கர்,

பள்ளித் தாளாளர் பி. அலெக்ஸாண்டர், மாமன்ற உறுப்பினர் பரணி ஏ. சங்கரலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பதக்கம் அணிந்து பாராட்டினார்.

இனிப்பு வழங்கல்: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அங்குள்ள குழந்தைகளுக்கு ஆட்சியர் இனிப்பு வழங்கினார். ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் நலத்துறை சார்பில் இயங்கி வரும் சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு ஆட்சியர் இனிப்பு வழங்கினார். இதில் சார்- ஆட்சியர் கே.பி. கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment