FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, November 21, 2015

ஜனாதிபதி விருது பெற்ற மாற்றுத்திறனாளி 300 ரூபாய்க்காக சுட்டுக் கொலை!

19.11.2015
ஜனாதிபதி விருது பெற்ற மாற்றுத் திறனாளி ஒருவர், 300 ரூபாய் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் டெல்லியில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு டெல்லியில் உள்ள சீலாம்பூர் பகுதியில், வினோத் என்பவர் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். இவர் சிறந்த மாற்றுத் திறனாளி கல்வியாளர் என்ற ஜனாதிபதி விருதை பெற்றவர். இவரது கடைக்கு வரும் வாடிக்கையாளரான சல்மான் என்பவர், 300 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கி விட்டு கடன் வைத்துள்ளார். இந்த கடனை கொடுக்குமாறு வினோத் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வினோத், தனது சகோதரருடன் சீலாம்பூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்த போது, அவரை வழி மறித்த சல்மான், தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றவே திடீரென்று கைத்துப்பாக்கியை எடுத்த சல்மான், வினோத்தை நோக்கி சுட்டுள்ளார். இதில் வினோத்தின் தலையில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சகோதரர் கமல், ரத்த வெள்ளத்தில் கிடந்த வினோத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வினோத் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்து விட்டனர்.கொலை செய்யப்பட்ட வினோத்துக்கு காதும் கேட்காது, வாயும் பேச முடியாதவர்.

இந்த வழக்கு தொடர்பாக சல்மானை போலீசார் தேடி வருகின்றனர்.




No comments:

Post a Comment