FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, November 21, 2015

ஜனாதிபதி விருது பெற்ற மாற்றுத்திறனாளி 300 ரூபாய்க்காக சுட்டுக் கொலை!

19.11.2015
ஜனாதிபதி விருது பெற்ற மாற்றுத் திறனாளி ஒருவர், 300 ரூபாய் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் டெல்லியில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு டெல்லியில் உள்ள சீலாம்பூர் பகுதியில், வினோத் என்பவர் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். இவர் சிறந்த மாற்றுத் திறனாளி கல்வியாளர் என்ற ஜனாதிபதி விருதை பெற்றவர். இவரது கடைக்கு வரும் வாடிக்கையாளரான சல்மான் என்பவர், 300 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கி விட்டு கடன் வைத்துள்ளார். இந்த கடனை கொடுக்குமாறு வினோத் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வினோத், தனது சகோதரருடன் சீலாம்பூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்த போது, அவரை வழி மறித்த சல்மான், தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றவே திடீரென்று கைத்துப்பாக்கியை எடுத்த சல்மான், வினோத்தை நோக்கி சுட்டுள்ளார். இதில் வினோத்தின் தலையில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சகோதரர் கமல், ரத்த வெள்ளத்தில் கிடந்த வினோத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வினோத் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்து விட்டனர்.கொலை செய்யப்பட்ட வினோத்துக்கு காதும் கேட்காது, வாயும் பேச முடியாதவர்.

இந்த வழக்கு தொடர்பாக சல்மானை போலீசார் தேடி வருகின்றனர்.




No comments:

Post a Comment