FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Saturday, November 21, 2015

ஜனாதிபதி விருது பெற்ற மாற்றுத்திறனாளி 300 ரூபாய்க்காக சுட்டுக் கொலை!

19.11.2015
ஜனாதிபதி விருது பெற்ற மாற்றுத் திறனாளி ஒருவர், 300 ரூபாய் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் டெல்லியில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு டெல்லியில் உள்ள சீலாம்பூர் பகுதியில், வினோத் என்பவர் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். இவர் சிறந்த மாற்றுத் திறனாளி கல்வியாளர் என்ற ஜனாதிபதி விருதை பெற்றவர். இவரது கடைக்கு வரும் வாடிக்கையாளரான சல்மான் என்பவர், 300 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கி விட்டு கடன் வைத்துள்ளார். இந்த கடனை கொடுக்குமாறு வினோத் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வினோத், தனது சகோதரருடன் சீலாம்பூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்த போது, அவரை வழி மறித்த சல்மான், தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றவே திடீரென்று கைத்துப்பாக்கியை எடுத்த சல்மான், வினோத்தை நோக்கி சுட்டுள்ளார். இதில் வினோத்தின் தலையில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சகோதரர் கமல், ரத்த வெள்ளத்தில் கிடந்த வினோத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வினோத் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்து விட்டனர்.கொலை செய்யப்பட்ட வினோத்துக்கு காதும் கேட்காது, வாயும் பேச முடியாதவர்.

இந்த வழக்கு தொடர்பாக சல்மானை போலீசார் தேடி வருகின்றனர்.




No comments:

Post a Comment