FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, November 21, 2015

ஜனாதிபதி விருது பெற்ற மாற்றுத்திறனாளி 300 ரூபாய்க்காக சுட்டுக் கொலை!

19.11.2015
ஜனாதிபதி விருது பெற்ற மாற்றுத் திறனாளி ஒருவர், 300 ரூபாய் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் டெல்லியில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு டெல்லியில் உள்ள சீலாம்பூர் பகுதியில், வினோத் என்பவர் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். இவர் சிறந்த மாற்றுத் திறனாளி கல்வியாளர் என்ற ஜனாதிபதி விருதை பெற்றவர். இவரது கடைக்கு வரும் வாடிக்கையாளரான சல்மான் என்பவர், 300 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கி விட்டு கடன் வைத்துள்ளார். இந்த கடனை கொடுக்குமாறு வினோத் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வினோத், தனது சகோதரருடன் சீலாம்பூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்த போது, அவரை வழி மறித்த சல்மான், தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றவே திடீரென்று கைத்துப்பாக்கியை எடுத்த சல்மான், வினோத்தை நோக்கி சுட்டுள்ளார். இதில் வினோத்தின் தலையில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சகோதரர் கமல், ரத்த வெள்ளத்தில் கிடந்த வினோத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வினோத் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்து விட்டனர்.கொலை செய்யப்பட்ட வினோத்துக்கு காதும் கேட்காது, வாயும் பேச முடியாதவர்.

இந்த வழக்கு தொடர்பாக சல்மானை போலீசார் தேடி வருகின்றனர்.




No comments:

Post a Comment