FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, November 4, 2015

பி.இ. மாணவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித் தொகை: ஏஐசிடிஇ அறிவிப்பு

சென்னை, 03 November 2015
பி.இ., பாலிடெக்னிக்குகளில் சேர்ந்துள்ள மாணவிகள், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டத்தை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது.
இந்தத் திட்டங்களின் கீழ் நாடு முழுவதும் பாலிடெக்னிக், பி.இ. படிப்புகளில் முதலாமாண்டில் சேர்ந்துள்ள மாணவிகளில் 4 ஆயிரம் பேருக்கும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆயிரம் பேருக்கும் கல்லூரி கல்விக் கட்டணம் அல்லது ரூ. 30 ஆயிரம் ரொக்கம், 10 மாதங்களுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் உதவித் தொகை ஆகியவை வழங்கப்படும். ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 2015-16 கல்வியாண்டில் சேர்ந்துள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 6 லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். இதற்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க நவம்பர் 23 கடைசித் தேதியாகும். மேலும் விவரங்களுக்கு www.aicte-india.org இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment