FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, November 3, 2015

மருத்துவச் சான்றிதழ் வழங்க அலைக்கழிப்பு: மாற்றுத் திறனாளிகள் தர்னா



திருவண்ணாமலை, 03 November 2015திருவண்ணாமலையில் மருத்துவச் சான்றிதழ் வழங்க அலைக்கழிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த மாற்றுத் திறனாளிகள், அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் சலுகைக் கட்டணத்தில் ரயில், பேருந்துகளில் பயணம் செய்வதற்கான பாஸ் நவம்பர் 2-ஆம் தேதியில் இருந்து வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.


இந்த பாஸ் பெறவும், நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கான மருத்துவச் சான்றிதழ் பெறவும் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்திருந்தனர்.

ஆனால், மருத்துவச் சான்றிதழ் வழங்க ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே வந்திருந்தார். அவரால் வந்திருந்த அனைவருக்கும் சான்றிதழ் வழங்கமுடியவில்லை. சிறிது நேரத்தில் அந்த மருத்துவரும் புறப்பட்டுச் சென்று விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத் திறனாளிகள் சில வாரங்களாகவே மருத்துவச் சான்றிதழ் பெற இதுபோல அலைக்கழிக்கப்படுவதாகக் கூறி கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.

அப்போது, மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகிகள் ரமேஷ்பாபு, செல்வம், சண்முகம் உள்ளிட்ட ஏராளமானோர் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், அதிகாரிகளின் சமாதானத்தை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது.

No comments:

Post a Comment