FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, November 3, 2015

மருத்துவச் சான்றிதழ் வழங்க அலைக்கழிப்பு: மாற்றுத் திறனாளிகள் தர்னா



திருவண்ணாமலை, 03 November 2015திருவண்ணாமலையில் மருத்துவச் சான்றிதழ் வழங்க அலைக்கழிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த மாற்றுத் திறனாளிகள், அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் சலுகைக் கட்டணத்தில் ரயில், பேருந்துகளில் பயணம் செய்வதற்கான பாஸ் நவம்பர் 2-ஆம் தேதியில் இருந்து வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.


இந்த பாஸ் பெறவும், நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கான மருத்துவச் சான்றிதழ் பெறவும் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்திருந்தனர்.

ஆனால், மருத்துவச் சான்றிதழ் வழங்க ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே வந்திருந்தார். அவரால் வந்திருந்த அனைவருக்கும் சான்றிதழ் வழங்கமுடியவில்லை. சிறிது நேரத்தில் அந்த மருத்துவரும் புறப்பட்டுச் சென்று விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத் திறனாளிகள் சில வாரங்களாகவே மருத்துவச் சான்றிதழ் பெற இதுபோல அலைக்கழிக்கப்படுவதாகக் கூறி கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.

அப்போது, மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகிகள் ரமேஷ்பாபு, செல்வம், சண்முகம் உள்ளிட்ட ஏராளமானோர் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், அதிகாரிகளின் சமாதானத்தை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது.

No comments:

Post a Comment