FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, November 3, 2015

மருத்துவச் சான்றிதழ் வழங்க அலைக்கழிப்பு: மாற்றுத் திறனாளிகள் தர்னா



திருவண்ணாமலை, 03 November 2015திருவண்ணாமலையில் மருத்துவச் சான்றிதழ் வழங்க அலைக்கழிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த மாற்றுத் திறனாளிகள், அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் சலுகைக் கட்டணத்தில் ரயில், பேருந்துகளில் பயணம் செய்வதற்கான பாஸ் நவம்பர் 2-ஆம் தேதியில் இருந்து வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.


இந்த பாஸ் பெறவும், நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கான மருத்துவச் சான்றிதழ் பெறவும் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்திருந்தனர்.

ஆனால், மருத்துவச் சான்றிதழ் வழங்க ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே வந்திருந்தார். அவரால் வந்திருந்த அனைவருக்கும் சான்றிதழ் வழங்கமுடியவில்லை. சிறிது நேரத்தில் அந்த மருத்துவரும் புறப்பட்டுச் சென்று விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத் திறனாளிகள் சில வாரங்களாகவே மருத்துவச் சான்றிதழ் பெற இதுபோல அலைக்கழிக்கப்படுவதாகக் கூறி கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.

அப்போது, மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகிகள் ரமேஷ்பாபு, செல்வம், சண்முகம் உள்ளிட்ட ஏராளமானோர் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், அதிகாரிகளின் சமாதானத்தை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது.

No comments:

Post a Comment