FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, November 3, 2015

மருத்துவச் சான்றிதழ் வழங்க அலைக்கழிப்பு: மாற்றுத் திறனாளிகள் தர்னா



திருவண்ணாமலை, 03 November 2015திருவண்ணாமலையில் மருத்துவச் சான்றிதழ் வழங்க அலைக்கழிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த மாற்றுத் திறனாளிகள், அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் சலுகைக் கட்டணத்தில் ரயில், பேருந்துகளில் பயணம் செய்வதற்கான பாஸ் நவம்பர் 2-ஆம் தேதியில் இருந்து வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.


இந்த பாஸ் பெறவும், நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கான மருத்துவச் சான்றிதழ் பெறவும் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்திருந்தனர்.

ஆனால், மருத்துவச் சான்றிதழ் வழங்க ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே வந்திருந்தார். அவரால் வந்திருந்த அனைவருக்கும் சான்றிதழ் வழங்கமுடியவில்லை. சிறிது நேரத்தில் அந்த மருத்துவரும் புறப்பட்டுச் சென்று விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத் திறனாளிகள் சில வாரங்களாகவே மருத்துவச் சான்றிதழ் பெற இதுபோல அலைக்கழிக்கப்படுவதாகக் கூறி கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.

அப்போது, மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகிகள் ரமேஷ்பாபு, செல்வம், சண்முகம் உள்ளிட்ட ஏராளமானோர் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், அதிகாரிகளின் சமாதானத்தை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது.

No comments:

Post a Comment