FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, November 4, 2015

தமிழ்நாடு அரசில் 859 கால்நடை பாரமரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன


தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறையில் நிரப்பப்பட உள்ள 859 கால்நடை பாரமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு நிரப்ப தகுதியுள்ளோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 859

பணி: கால்நடை பராமரிப்பு உதவியாளர்

பணியிடம்: தமிழ்நாடு

பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:

SCA - 26

SC - 129

ST - 09

MBC - 172

BC - 227

BCM - 30

GT - 266

சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1400

தகுதி: குறைந்த பட்ச கல்வித்தகுதி 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். கால நடைகளை கையாள தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் அருந்ததியர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வகுப்பினர்களுக்கு 35 ஆகும். 10, +2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு அதிகபட்ச வயது 40, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அதிகபட்ச வயதுவரம்பு இல்லை.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்(முஸ்லிம்) ஆகிய வகுப்பினருக்கு அதிக பட்ச வயது 32 ஆகும். 10, +2 தேர்வு பெற்றிருப்பின் அதிக பட்ச வயது 34, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அதிக பட்ச வயதுவரம்பு இல்லை.

பொது பிரிவினருக்கு அதிக பட்சவயது 30 ஆகும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இயக்குநர், கால்நடை பராமரிப்பு(ம) மருத்துப்பணிகள், மத்திய அலுவலகக் கட்டிடம், பகுதி-2, டி.எம்.எஸ் வளாகம், சென்னை-6 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:11.11.2015

விண்ணப்ப மேல் உறையின் மீது "கால்நடை பராமரிப்பு உதவியாளர் தேர்வு 2015" என பெரிய எழுத்துகளில் தவறாது குறிப்பிட்டு அடிக்கோடிட வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை AXIS வங்கி செலுத்துச் சீட்டின் வாயிலாக AXIS வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தி செலுத்துச் சீட்டின் அத்தாட்சியினை (அசல்) விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பிட வேண்டும்.

அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சென்னையில் மாற்றத் தக்க வகையில் Director, Animal Husbandry & Veterinary Services, Chenna's என்ற பெயருக்கு வங்கி வரைவோலை எடுத்து விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும்.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், திருநங்கைகளுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண் பெரும் விண்ணப்பதரார்களின் சான்று சரிபாக்கப்பட்டு இனசுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பங்கள் போன்ற விவரங்கள் அறிய http://cms.tn.gov.in/sites/default/files/AH_asst_appl_301015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
CLICK HERE

No comments:

Post a Comment