FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, November 4, 2015

தமிழ்நாடு அரசில் 859 கால்நடை பாரமரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன


தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறையில் நிரப்பப்பட உள்ள 859 கால்நடை பாரமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு நிரப்ப தகுதியுள்ளோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 859

பணி: கால்நடை பராமரிப்பு உதவியாளர்

பணியிடம்: தமிழ்நாடு

பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:

SCA - 26

SC - 129

ST - 09

MBC - 172

BC - 227

BCM - 30

GT - 266

சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1400

தகுதி: குறைந்த பட்ச கல்வித்தகுதி 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். கால நடைகளை கையாள தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் அருந்ததியர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வகுப்பினர்களுக்கு 35 ஆகும். 10, +2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு அதிகபட்ச வயது 40, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அதிகபட்ச வயதுவரம்பு இல்லை.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்(முஸ்லிம்) ஆகிய வகுப்பினருக்கு அதிக பட்ச வயது 32 ஆகும். 10, +2 தேர்வு பெற்றிருப்பின் அதிக பட்ச வயது 34, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அதிக பட்ச வயதுவரம்பு இல்லை.

பொது பிரிவினருக்கு அதிக பட்சவயது 30 ஆகும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இயக்குநர், கால்நடை பராமரிப்பு(ம) மருத்துப்பணிகள், மத்திய அலுவலகக் கட்டிடம், பகுதி-2, டி.எம்.எஸ் வளாகம், சென்னை-6 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:11.11.2015

விண்ணப்ப மேல் உறையின் மீது "கால்நடை பராமரிப்பு உதவியாளர் தேர்வு 2015" என பெரிய எழுத்துகளில் தவறாது குறிப்பிட்டு அடிக்கோடிட வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை AXIS வங்கி செலுத்துச் சீட்டின் வாயிலாக AXIS வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தி செலுத்துச் சீட்டின் அத்தாட்சியினை (அசல்) விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பிட வேண்டும்.

அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சென்னையில் மாற்றத் தக்க வகையில் Director, Animal Husbandry & Veterinary Services, Chenna's என்ற பெயருக்கு வங்கி வரைவோலை எடுத்து விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும்.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், திருநங்கைகளுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண் பெரும் விண்ணப்பதரார்களின் சான்று சரிபாக்கப்பட்டு இனசுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பங்கள் போன்ற விவரங்கள் அறிய http://cms.tn.gov.in/sites/default/files/AH_asst_appl_301015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
CLICK HERE

No comments:

Post a Comment