FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, November 9, 2015

குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடு கண்டறியும் மையம்

தஞ்சாவூர், 09 November 2015, 
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையில் ரூ. 21.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட குழந்தைகளுக்கான செவித்திறன் குறைபாடுகள் கண்டறியும் தொடக்க நிலை பரிசோதனை மையத்தை வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

பிறகு அமைச்சர் தெரிவித்தது: மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு தமிழக முதல்வர் பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தற்போது மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி நலத் துறை சார்பில், ரூ. 21.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் செவித்திறன் குறைபாடுகளைக் கண்டறிவதற்கான ஆரம்பநிலை பரிசோதனை மையத்தைத் தொடங்குவதற்கு முதல்வர் உத்தரவிட்டார்.

இதன்படி, தற்போது முழுப் பணிகளும் நிறைவு பெற்று ஆரம்ப நிலை பரிசோதனை மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில், ரூ. 16 லட்சத்தில் பரிசோதனைக் கருவிகளும், ரூ. 5.10 லட்சத்தில் உள்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இதன்மூலம், குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடுகள் உடனே கண்டறியப்பட்டு அவர்களுக்குத் தேவையான காது கருவிகள் பொருத்தி பேச்சு பயிற்சி அளிக்க முடியும். இதன்மூலம் செவித்திறன் குறைபாடு உடைய குழந்தைகள் மற்ற சராசரி குழந்தைகளைப் போல பள்ளிக்குச் சென்றுவர இயலும் என்றார் அமைச்சர்.

பிறகு, 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 17.33 லட்சத்தில் மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனங்களும், 725 பயனாளிகளுக்கு மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித் தொகையாக ரூ. 34.50 லட்சத்துக்கான ஆணைகளும் வழங்கப்பட்டன.

மேலும், தோட்டக்கலைத் துறை சார்பில் தேசிய தோட்டக் கலை இயக்ககத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ. 3.30 லட்சத்தில் மினி டிராக்டர், ரூ. 1.61 லட்சத்தில் 2 பவர் டில்லர்கள் ரூ. 1.55 லட்சம் மானியத்துடன் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தலைமை வகித்தார். மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.கே. பாரதிமோகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம். ரெங்கசாமி (தஞ்சாவூர்), எம். ரெத்தினசாமி (திருவையாறு), இரா. துரைக்கண்ணு (பாபநாசம்), மேயர் சாவித்திரி கோபால், மாவட்ட ஊராட்சித் தலைவர் அமுதாராணி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment