FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, November 9, 2015

குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடு கண்டறியும் மையம்

தஞ்சாவூர், 09 November 2015, 
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையில் ரூ. 21.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட குழந்தைகளுக்கான செவித்திறன் குறைபாடுகள் கண்டறியும் தொடக்க நிலை பரிசோதனை மையத்தை வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

பிறகு அமைச்சர் தெரிவித்தது: மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு தமிழக முதல்வர் பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தற்போது மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி நலத் துறை சார்பில், ரூ. 21.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் செவித்திறன் குறைபாடுகளைக் கண்டறிவதற்கான ஆரம்பநிலை பரிசோதனை மையத்தைத் தொடங்குவதற்கு முதல்வர் உத்தரவிட்டார்.

இதன்படி, தற்போது முழுப் பணிகளும் நிறைவு பெற்று ஆரம்ப நிலை பரிசோதனை மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில், ரூ. 16 லட்சத்தில் பரிசோதனைக் கருவிகளும், ரூ. 5.10 லட்சத்தில் உள்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இதன்மூலம், குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடுகள் உடனே கண்டறியப்பட்டு அவர்களுக்குத் தேவையான காது கருவிகள் பொருத்தி பேச்சு பயிற்சி அளிக்க முடியும். இதன்மூலம் செவித்திறன் குறைபாடு உடைய குழந்தைகள் மற்ற சராசரி குழந்தைகளைப் போல பள்ளிக்குச் சென்றுவர இயலும் என்றார் அமைச்சர்.

பிறகு, 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 17.33 லட்சத்தில் மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனங்களும், 725 பயனாளிகளுக்கு மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித் தொகையாக ரூ. 34.50 லட்சத்துக்கான ஆணைகளும் வழங்கப்பட்டன.

மேலும், தோட்டக்கலைத் துறை சார்பில் தேசிய தோட்டக் கலை இயக்ககத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ. 3.30 லட்சத்தில் மினி டிராக்டர், ரூ. 1.61 லட்சத்தில் 2 பவர் டில்லர்கள் ரூ. 1.55 லட்சம் மானியத்துடன் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தலைமை வகித்தார். மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.கே. பாரதிமோகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம். ரெங்கசாமி (தஞ்சாவூர்), எம். ரெத்தினசாமி (திருவையாறு), இரா. துரைக்கண்ணு (பாபநாசம்), மேயர் சாவித்திரி கோபால், மாவட்ட ஊராட்சித் தலைவர் அமுதாராணி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment