FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Monday, November 9, 2015

குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடு கண்டறியும் மையம்

தஞ்சாவூர், 09 November 2015, 
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையில் ரூ. 21.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட குழந்தைகளுக்கான செவித்திறன் குறைபாடுகள் கண்டறியும் தொடக்க நிலை பரிசோதனை மையத்தை வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

பிறகு அமைச்சர் தெரிவித்தது: மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு தமிழக முதல்வர் பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தற்போது மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி நலத் துறை சார்பில், ரூ. 21.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் செவித்திறன் குறைபாடுகளைக் கண்டறிவதற்கான ஆரம்பநிலை பரிசோதனை மையத்தைத் தொடங்குவதற்கு முதல்வர் உத்தரவிட்டார்.

இதன்படி, தற்போது முழுப் பணிகளும் நிறைவு பெற்று ஆரம்ப நிலை பரிசோதனை மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில், ரூ. 16 லட்சத்தில் பரிசோதனைக் கருவிகளும், ரூ. 5.10 லட்சத்தில் உள்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இதன்மூலம், குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடுகள் உடனே கண்டறியப்பட்டு அவர்களுக்குத் தேவையான காது கருவிகள் பொருத்தி பேச்சு பயிற்சி அளிக்க முடியும். இதன்மூலம் செவித்திறன் குறைபாடு உடைய குழந்தைகள் மற்ற சராசரி குழந்தைகளைப் போல பள்ளிக்குச் சென்றுவர இயலும் என்றார் அமைச்சர்.

பிறகு, 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 17.33 லட்சத்தில் மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனங்களும், 725 பயனாளிகளுக்கு மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித் தொகையாக ரூ. 34.50 லட்சத்துக்கான ஆணைகளும் வழங்கப்பட்டன.

மேலும், தோட்டக்கலைத் துறை சார்பில் தேசிய தோட்டக் கலை இயக்ககத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ. 3.30 லட்சத்தில் மினி டிராக்டர், ரூ. 1.61 லட்சத்தில் 2 பவர் டில்லர்கள் ரூ. 1.55 லட்சம் மானியத்துடன் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தலைமை வகித்தார். மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.கே. பாரதிமோகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம். ரெங்கசாமி (தஞ்சாவூர்), எம். ரெத்தினசாமி (திருவையாறு), இரா. துரைக்கண்ணு (பாபநாசம்), மேயர் சாவித்திரி கோபால், மாவட்ட ஊராட்சித் தலைவர் அமுதாராணி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment