FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, November 9, 2015

குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடு கண்டறியும் மையம்

தஞ்சாவூர், 09 November 2015, 
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையில் ரூ. 21.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட குழந்தைகளுக்கான செவித்திறன் குறைபாடுகள் கண்டறியும் தொடக்க நிலை பரிசோதனை மையத்தை வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

பிறகு அமைச்சர் தெரிவித்தது: மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு தமிழக முதல்வர் பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தற்போது மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி நலத் துறை சார்பில், ரூ. 21.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் செவித்திறன் குறைபாடுகளைக் கண்டறிவதற்கான ஆரம்பநிலை பரிசோதனை மையத்தைத் தொடங்குவதற்கு முதல்வர் உத்தரவிட்டார்.

இதன்படி, தற்போது முழுப் பணிகளும் நிறைவு பெற்று ஆரம்ப நிலை பரிசோதனை மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில், ரூ. 16 லட்சத்தில் பரிசோதனைக் கருவிகளும், ரூ. 5.10 லட்சத்தில் உள்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இதன்மூலம், குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடுகள் உடனே கண்டறியப்பட்டு அவர்களுக்குத் தேவையான காது கருவிகள் பொருத்தி பேச்சு பயிற்சி அளிக்க முடியும். இதன்மூலம் செவித்திறன் குறைபாடு உடைய குழந்தைகள் மற்ற சராசரி குழந்தைகளைப் போல பள்ளிக்குச் சென்றுவர இயலும் என்றார் அமைச்சர்.

பிறகு, 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 17.33 லட்சத்தில் மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனங்களும், 725 பயனாளிகளுக்கு மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித் தொகையாக ரூ. 34.50 லட்சத்துக்கான ஆணைகளும் வழங்கப்பட்டன.

மேலும், தோட்டக்கலைத் துறை சார்பில் தேசிய தோட்டக் கலை இயக்ககத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ. 3.30 லட்சத்தில் மினி டிராக்டர், ரூ. 1.61 லட்சத்தில் 2 பவர் டில்லர்கள் ரூ. 1.55 லட்சம் மானியத்துடன் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தலைமை வகித்தார். மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.கே. பாரதிமோகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம். ரெங்கசாமி (தஞ்சாவூர்), எம். ரெத்தினசாமி (திருவையாறு), இரா. துரைக்கண்ணு (பாபநாசம்), மேயர் சாவித்திரி கோபால், மாவட்ட ஊராட்சித் தலைவர் அமுதாராணி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment